Monday, June 30, 2014

டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம்
செய்யாதது குறித்து ஆசிரியர்
தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்
கிளை உத்தரவிட்டது.

16 உண்டு உறைவிடப் பள்ளிகள் மூடல்: இணை இயக்குனர் அதிரடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 16
உண்டு உறைவிட பள்ளிகளில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க
இணை இயக்குனர் உத்தரவின்படி பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Bharathidasan -M.Ed. ADMISSION NOTIFICATION FOR 2014 – 2015- Distance Education

Saturday, June 28, 2014

மாணவர்கள் சேர்க்கை இல்லை; 2 அரசு துவக்க பள்ளிகள் மூடல்!

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர்
தேர்வாணையம்) உறுப்பினர்,
பாலசுப்ரமணியனிடம், தலைவர் பதவி,
கூடுதல் பொறுப்பாக
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும்

ஆசிரியர் தகுதி தேர்வில், சரியான
விடை எழுதிய ஆசிரியருக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

மாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆசிரியர்கள்

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான
பொது மாறுதல் கலந்தாய்வில்
இரண்டு ஆண்டுகளாக, தமிழாசிரியர்
பணியிடங்களை மறைப்பதாக
சர்ச்சை எழுந்துள்ளது.

பிளஸ் 2 கணித விடைத்தாள் நகல் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்': ஐகோர்ட் உத்தரவு

பிளஸ் 2 கணித பாடத்தில் மதிப்பெண்
குறைந்ததால், விடைத்தாள் நகல் வழங்கியதில், 4 பக்கங்களை காணவில்லை;

கவுன்சிலிங்'கில் எதிர்பார்த்தது 190; காட்டியது 12 மட்டுமே!

மதுரையில், 190 காலி இடங்களை எதிர்பார்த்து பங்கேற்ற
'கவுன்சிலிங்'கில், 12 இடங்கள் மட்டும்
காண்பிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Friday, June 27, 2014

ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்க திட்டம்

படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக்
கல்வி வகுப்புகளில், அரசு பள்ளி குழந்தைகளை மட்டுமின்றி, ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து, பள்ளிகளுக்கு 'கிரேடு'
வழங்கும் முறையை செயல்படுத்த, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அகமேற்பார்வை தொடர்பாக 8,000 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு பயிற்சி

பள்ளி மற்றும் கல்வித்தர மேம்பாட்டிற்காக
பள்ளி தலைமை ஆசிரியர்களின்
அகமேற்பார்வை பணி தொடர்பாக 2
நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவு - பொதுப்பிரிவு கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலையில் ஜுன் 27ம் தேதி முதல் நடைபெறவிருந்த
பொதுப்பிரிவு கலந்தாய்வு, உச்சநீதிமன்ற உத்தரவால், திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Thursday, June 26, 2014

பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து தமிழ் / ஆங்கிலம் / கணிதம் / அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு!

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்; மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் யாரேனும் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் அவ்வாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்!

அறிவிக்கப்பட்ட
தேதியிலிருந்து சிக்கல்களையும்,
குழப்பங்களையும் கொண்ட
ஒரே போட்டித் தேர்வு,
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்
தேர்வாக மட்டுமே இருக்க
முடியும்.
கல்வி உரிமைச் சட்டத்தின்
அடிப்படையில் தகுதியான
ஆசிரியர்கள் தகுதித்
தேர்வுகள்
வைத்து கண்டறியப்பட்டு,
பணியிலமர்த்தப்பட வேண்டும்
என்ற
அறிவிப்பு வெளியானபோது,
பரவலான வரவேற்பை பலரிடம்
பெற்றது. வெறும்
பட்டப்படிப்பும்
பட்டயப்படிப்பும்
மட்டுமே ஆசிரியருக்கானத்
தகுதியாக நிலவிவந்த
நிலை மாறும் என்ற
நம்பிக்கை உறுதியானது.
ஆசிரியர் தகுதித்
தேர்வு தேவையில்லாதவை என்ற
குரல்களும் பல ஆசிரியர்கள்,
கல்விச் சங்கங்களில்
இருந்து வெளிவந்தன.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கான அறிவிப்புகள்
வெளிவரும் வரை, இந்த
நிலையில் பெரிய மாற்றம்
இல்லை. அறிவிப்பு வெளியான
நாளில்
இருந்தே குழப்பங்களும்,
குளறுபடிகளும் ஆரம்பித்தன.
முதல் குளறுபடியாக, இட
ஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கான மதிப்பெண்
சலுகைகள் வழங்கப்படாமல்
இருந்ததில் துவங்கியது.
ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு நெருங்கிய
உறவினர்களாக கருதப்படும்
தேசியத் தகுதித் தேர்வு (NET),
மாநிலத் தகுதித் தேர்வுகள்
(SET) போன்றவற்றில்கூட இட
ஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கான
மதிப்பெண்களில் சலுகைகள்,
அவை தொடங்கிய
நாளிலிருந்து வரும்
ஞாயிற்றுக்கிழமை (29-06-2014)
நடக்கப் போகும்
தேர்வு வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
மாநில அளவில்,
ஆராய்ச்சியாளர்களுக்கும்,
விரிவுரையாளர்களுக்கும்
நடத்தப்படும் தகுதித்
தேர்விலேயே இடஒதுக்கீடு பின்பற்றப்படும்
போது, ஆசிரியர்களுக்கானத்
தகுதித் தேர்வில்
திறமை மட்டுமே முக்கியம்,
இடஒதுக்கீடு திறமையையும்
தகுதியையும்
குறைத்துவிடும் என்ற
அரதப்பழசான சொத்தை வாதம்
முன் வைக்கப்பட்டது.
(இங்கே ஒரு கிளைச் செய்தி, இட
ஒதுக்கீடு என்பது ஏதோ இந்தியாவுக்கே உரித்தான
ஒரு சலுகை, இட ஒதுக்கீட்டால்
இந்தியாவின் முன்னேற்றம்
தடைபடுகிறது என்ற
கூச்சல்காரர்கள்
அடிப்படையில்
தெரிந்து கொள்ள விரும்பாத
ஒரு தகவல். ஒரு சமூகம் பல
நூறு ஆண்டுகாலம்
ஒடுக்கப்பட்டு சமூக
ரீதியிலும், பொருளாதார
ரீதியிலும்
பின்தங்கியிருந்தால், அங்குச்
சமநிலையை உருவாக்க
ஒடுக்கப்பட்ட
சமூகத்துக்கு சில சலுகைகள்
வழங்கப்படுவதுதான் சமூக
நீதி. இந்தச் சமூக
நீதி உலகளவில் ஒடுக்கப்பட்ட
சிறுபான்மையினர் வாழும்
நாடுகளில்
கடைபிடிக்கப்பட்டே வருகிறது.
அமெரிக்காவில் 'சீர்திருத்தச்
செயலாக்கம்' (Affirmative action
அல்லது positive discrimination) என்ற
பெயரிலும், positive action என்ற
பெயரில் இங்கிலாந்திலும்,
employment equityஎன்ற பெயரில்
கணடாவிலும்
கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒப்பீட்டளவில் இந்தியாவை விட
இவை முன்னேறிய நாடுகளே).
இரண்டாவது குளறுபடி, முதல்
முறை நடத்தப்பட்ட தகுதித்
தேர்வில் குறைவான நேரம்
வழங்கப்பட்டது. 150
வினாக்களுக்கு 90
நிமிடங்களில் விடையளிக்க
வேண்டும் என்ற
விதி கடைபிடிக்கப்பட்டது.
அதாவது ஒரு வினாவை அரை நிமிடத்திற்குள்
படித்து,
அதற்கு விடையை யோசித்து விடைத்தாளில்
குறிக்க வேண்டும்.
இப்படி ஆசிரியர்களின்
தகுதியை கண்டறிய
வைக்கப்பட்டத் தேர்வு,
ஆசிரியர்களின் சிந்திக்கும்,
செயல்படும்
வேகத்தை கண்டறிவதற்கு வைக்கப்பட்டத்
தேர்வாக மாறியது.
நுண்ணறிவைச் சோதிக்க
உளவியலாளர்கள் நடத்தும்
சோதனை முறைகளில் கூட
இப்படி சிந்திக்கும்
வேகத்தை அளவிடக்கூடிய
சோதனைகள்
இருக்கிறதா தெரியவில்லை.
இதுவரை இல்லாமல் போனால்,
உளவியல் மருத்துவர்கள்தான்
இதனை முன்னெடுக்க
வேண்டும்.
இந்த நேரக்குளறுபடியும்
கடினத்தன்மையும்
வரலாறு கண்டிராத
ஒரு தேர்ச்சி விகிதத்தை அந்தத்
தகுதித் தேர்வில் காட்டியது.
சுதாரித்த அரசு,
உடனே ஒரு துணைத்
தேர்வை நடத்தியது.
பொருளாதாரக்
கோட்பாடுகளில் ஒன்றான
தேவை - இருப்பு (Demand - Supply)
கோட்பாட்டின் காரணமாக
ஆசிரியர்களின்
சிந்தனை வேகத்தை அளவிடாமல்,
அவர்களின் தகுதியைச்
சோதிக்கும் வகையில் அந்தத்
துணைத்
தேர்வு நடத்தப்பெற்றது.
மூன்றாவது குளறுபடியாக
சிறப்பளிப்பு மதிப்பெண்கள்
(Weightage Marks) என்ற
பெருங்குழப்பம் விளங்கியது.
ஆனால், முதல் இரண்டு தகுதித்
தேர்வுகளிலும் தேவையை விட
இருப்பு குறைவாக
இருந்ததால் இந்தக்
குளறுபடி தலையெடுக்கவே இல்லை.
ஆனால், மூன்றாவதாக
நடத்தப்பட்ட தகுதித் தேர்வில்
(2013ஆம் நடத்தப்பட்டது) தீராத
தலைவலிச் சிக்கலாக
உருவெடுத்திருக்கிறது.
இதுவரையிலான
குளறுபடிகளை எல்லாம்
தூக்கிச் சாப்பிடும் வகையில்
பெருங்குளறுபடிகளை 2013ஆம்
ஆண்டு நடத்தப்பெற்ற ஆசிரியர்
தகுதித்
தேர்வு கொண்டு இன்று வரை தீராத்
தலைவலியாக
இருந்து கொண்டிருக்கிறது.
நேரம்
ஏற்கெனவே சரி செய்யப்பட,
இடஒதுக்கீட்டுப்
பிரிவினருக்குச்
சலுகை மதிப்பெண்கள்
இல்லை என்ற
அறிவிப்போடு தேர்வு நடைபெற்றது.
2013ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில்
நடத்தப்பட்டத்
தேர்வு முடிவுகள் நவம்பர்
5ஆம் தேதி வெளிவந்தது.
விடைகளில் ஏற்பட்ட
குழப்பங்கள் சரி செய்யப்பட்ட
தேர்வு முடிவுகள் 11-01-2014
அன்று வெளியானது.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்புப் பணிகளும்
ஜனவரி 2014ல் முடிந்தது, தமிழக
முதல்வரின் பிறந்த நாள்
அன்று இவர்களுக்குப்
பணி வழங்கப்படும்
என்று வாய்மொழியாகத் தகவல்
வெளிவந்தது.
மூன்று முறை நடத்தப்பட்ட
தேர்வுகளுக்கான
அறிவிப்புகளிலும் இந்த
மதிப்பெண்
சலுகை பற்றி அறிவிக்கப்படவே இல்லை,
2012 ஆம் ஆண்டு முதல், 2014 ஆம்
ஆண்டு ஜனவரி வரையிலும்
பள்ளிக் கல்வித்
துறை அமைச்சரும், ஆசிரியர்
தேர்வு வாரியமும்
விடாப்பிடியாக இட
ஒதுக்கீடு தகுதியைக்
குறைத்துவிடும் என்றே பல
இடங்களிலும்,
நீதிமன்றத்திலும்
வாதிட்டு வந்தனர். அடுத்த
ஒரு மாத
இடைவெளிக்குள்ளாகவே கல்வியாளர்கள்
மற்றும் சமூகச்
செயற்பாட்டாளர்கள்
பலரது நீதிமன்ற
செயற்பாடுகள், போராட்டங்கள்
ஆகியவை மூலமாக இட
ஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கான மதிப்பெண்
சலுகை வழங்கப்பட்டது.
இதுவரை சலுகை மதிப்பெண்கள்
தகுதியைக் குறைத்து விடும்
என்று வாதிட்ட அரசு,
ஐந்து சதவீதம்
சலுகை வழங்கப்பட்டால் 82.5
மதிப்பெண்களுக்கு மேல்
பெற்றிருக்க வேண்டும் என்ற
கணக்கீடுகளுக்குப் பதிலாக 82
மதிப்பெண்கள் பெற்றவர்களும்
தேர்ச்சிபெற்றவர்கள்
என்றே அறிவித்தது.
இவ்வாறு கூடுதலாக
தேர்ச்சி பெற்றவர்களுக்கும்
சான்றிதழ் சரிபார்ப்புப்
பணிகளை வெகு வேகமாக
செயல்படுத்த முடியாத
அளவுக்கு ஆசிரியர்
தேர்வு வாரியத்துக்கு பணியாளர்கள்
பற்றாக்குறை, பத்தாம்
வகுப்பு, பன்னிரெண்டாம்
வகுப்பு தேர்வுகளும், தேர்தல்
நடத்தை விதிகளும் என்று பல
காரணங்களால் இந்தப் பணிகள்
தள்ளிப் போனது.
இதற்கிடையில்
சிறப்பளிப்பு மதிப்பெண்கள்
(Weightage Marks)
குளறுபடி இந்தாண்டு தேர்வில்
பெரியளவில்
குழப்பத்தை விளைவிக்க
தேர்வு எழுதி ஓராண்டு ஆகப்போகும்
நிலையிலும்
இதுவரை பணி நிரப்பப்படாமல்
உள்ளது. அரசு அறிவித்த
சிறப்பளிப்பு மதிப்பெண்கள்
கணக்கிடும்
முறையானது இதுவரை புள்ளியியல்
கண்டிராத உத்திகளைக்
கொண்டிருந்தது. தகுதித்
தேர்வில் 90 மதிப்பெண்
பெற்றவருக்கும் 104
மதிப்பெண் பெற்றவருக்கும்
சிறப்பளிப்பு மதிப்பெண் 42
வழங்கப்படும். ஆசிரியர் பட்டப்
படிப்பில் 69.98 மதிப்பெண்
பெற்றவருக்கு சிறப்பளிப்பு மதிப்பெண்
பன்னிரெண்டும், 70.00
பெற்றவருக்கு சிறப்பளிப்பு மதிப்பெண்
15ம், 99.98 மதிப்பெண்
பெற்றவருக்கும் அதே 15
சிறப்பளிப்பு மதிப்பெண்
வழங்கப்பட்டது.
இதே போலத்தான்
இளநிலை பட்டப் படிப்பில்
பெற்ற மதிப்பெண்களுக்கும்
சிறப்பளிப்பு மதிப்பெண்
வழங்கப்பட்டது. இத்தகைய
கேலிக்கூத்தை எதிர்த்து நீதிமன்றத்தில்
தொடரப்பட்ட வழக்கில்
அறிவியல்பூர்வமாக இந்தச்
சிறப்பளிப்பு மதிப்பெண்கள்
வழங்கப்பட வேண்டும் எனத்
தீர்ப்பளித்தது. மீண்டும்
பணி நிரப்பும் பணிகள்
மந்தமைடைந்தது.
இவ்வாறு சிறப்பளிப்பு மதிப்பெண்களின்
குழப்பங்கள் ஒரு வழியாக
முடிவுக்கு வந்தது என
நினைக்க, மதுரை உச்ச
நீதிமன்ற கிளை மீண்டும்
ஒரு உத்தரவை வழங்கியிருக்கிறது.
இந்தச்
சிறப்பளிப்பு மதிப்பெண்களில்
வேலைவாய்ப்பு அலுவலக
பதிவு மூப்பையும்,
பணி அனுபவத்தையும்
கணக்கிலெடுக்க வேண்டும்
என்பதுதான் அந்த உத்தரவு.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில்
இருந்து அவர்களது இணைய
தளத்தில் எந்த தகவலும்
முறையாக
இற்றைப்படுத்தப்படுவதில்லை.
அதிகாரப்பூர்வமான
தகவல்களும் இல்லை.
ஊடகங்களும் ஆசிரியர்
தேர்வு வாரியத்தைச் சேர்ந்த
முக்கியமான நபர்
தெரிவித்தார், வட்டாரம்
தெரிவித்தது என்றே தகவல்கள்
வருகிறது. இதனாலேயே பல
வதந்திகளும் உலா வருகிறது.
சமீபத்திய
வதந்தி (முறைப்படி தேர்வு வாரியம்
அறிவிக்காத வரையில்,
அது வதந்திதான்.) ஆசிரியர்
தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு,
முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதைப்
போல, UG-TRB
தேர்வு நடத்தப்படும், அதில்
பெறும் மதிப்பெண்களில் 50
சதவீதமும், ஆசிரியர் தகுதித்
தேர்வில் பெற்ற
சிறப்பளிப்பு மதிப்பெண்ணின்
50 சதவீதமும்
சேர்த்து பெறப்படும்
மதிப்பெண்ணிலிருந்தே பணிவழங்கப்படும்.
இப்படி ஒரு நடைமுறை கடைபிடிக்கப்படுமானால்,
அது எளிமையானதொரு தேர்வை மேலும்
மேலும் சிக்கலாக்குவதற்குச்
சமம் ஆகும். அதோடல்லாமல்,
முதுநிலை ஆசிரியர்களுக்கு பின்பற்றப்படும்
தேர்வு முறையைப் போன்ற
தேர்வே என்றால், ஆசிரியர்
தகுதித் தேர்வு எதற்கு?
முதுநிலை ஆசிரியர்களுக்குப்
பின்பற்றப்படுவது போன்ற
அந்த ஒரு தேர்வே போதாதா?
அல்லது முதுநிலை ஆசிரியர்களுக்கு மட்டும்
ஒரு தேர்வு இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏன்
சிக்கலான இரண்டு தேர்வு?
போன்ற பல கேள்விகள்
எழுகின்றன.
இதுவரை வெளிவந்த
மூன்று அறிவிப்புகளிலுமே எத்தனை பணியிடங்களை நிரப்புவதற்காக
இந்தத் தேர்வுகள்
நடத்தப்படுகின்றன
என்பது அறிவிக்கப்படவே இல்லை.
தேர்வு எழுதப் போகும்
தேர்வர்கள் இதைத்
தெரிந்து கொள்ள வேண்டிய
அவசியம் இல்லை என்று அரசும்,
தேர்வு வாரியமும்
நினைக்கிறதா?
அல்லது அவர்களிடமே அந்தத்
தகவல் முழுமையாக இல்லையா?
இதற்கிடையில் மாற்றுத்
திறனாளிகளையும்
இதே தகுதித் தேர்வை எழுத
வேண்டும், என்ற குளறுபடிகள்
தாண்டவமாட, அவர்களுக்குத்
தனியாக சிறப்புத் தகுதித்
தேர்வு நடத்தப்பட்டது.
இதே போல ஆசிரியர்
தேர்வு வாரியம் நடத்தும்
முதுநிலை ஆசிரியர்களுக்கானத்
தேர்வுகளும் குளறுபடியும்
ஓராண்டாக இழுத்தடித்துக்
கொண்டிருக்கிறது.
இன்றைய தேதியில் அதிகமான
நீதிமன்ற வழக்குகள்
தொடுக்கப்பட்டிருக்கும்
ஒரு துறை கல்வித்துறையாகத்
தான் இருக்கும்.
கல்வித்துறையில் இத்தகைய
குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட
ஒவ்வொருவரும் நீதிமன்றப்
படியேறுவதைத் தவிர
வேறு வழி இல்லை என்பதால்
இத்தனை வழக்குகளைச்
சந்தித்து இருக்கிறது கல்வித்துறை.
இத்தனை வழக்குகளை எங்களால்
கையாளமுடியவில்லை,
அத்தனை வழக்குகளையும்
ஒருங்கிணைத்து ஒன்றாக
விசாரிக்கும் படி ஆசிரியர்
தேர்வு வாரியம் கோரும் அவல
நிலையும் ஏற்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வுகள்
அண்டை மாநிலங்களில்
பெருமளவு குழப்பம் இல்லாமல்,
நடத்தப்பட்டுக் கொண்டிருக்க,
ஏன் தமிழகத்தில் மட்டும்
இத்தனை குழப்பமான
சூழ்நிலை நிலவ வேண்டும்?
பதில் மிகவும் எளிமையானது.
தேர்வுக்கான நெறிமுறைகள்
தெளிவாக
வகுக்கப்படாமையே ஒரே காரணம்.
இந்தியாவிலேயே முதன்முதலாக
போட்டித்தேர்வுகளுக்கான
வாரியத்தை அமைத்த
மாநிலத்தில்
இத்தகையதொரு நிலை என்பது உண்மையிலேயே வேதனைதான்.
ஆசிரியர் தேர்வு வாரியம்,
பாடத்திட்டத்தை வடிவமைக்கவும்,
வினாத்தாளை வடிவமைக்க
எப்படி ஒரு குழு அமைத்துச்
செயல்படுகிறதோ அதே போல,
தேர்வு நடத்தும்
முறைகளையும், பணி நியமன
முறைகளையும்,
சிறப்பளிப்பு மதிப்பெண்கள்
வழங்குவதற்கான
முறைகளையும், ஏனைய
வழிகாட்டு நெறிமுறைகளையும்
அமைக்க
ஒரு குழுவை அமைத்து, அந்தக்
குழுவின்
பரிந்துரைகளை மீளாய்வு செய்து மீண்டும்
குழுவின் ஆலோசனைக்குப்
பிறகு இந்த
வழிகாட்டு நெறிமுறைகள்
வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அதனை அடியொட்டி தேர்வுகள்
நடத்தப்பட்டிருந்தால்
இத்தனைச் சிக்கல்கள்
இல்லாமல் இருந்திருக்கும்.
தேர்ச்சி பெற்று பல
மாதங்களாக பணி கிடைக்காமல்
தேர்வர்களும் காத்திருக்க
வேண்டிய அவசியம் இல்லை.
ஆசிரியர்கள்
பற்றாக்குறையால் மாணவர்கள்
அவதிப்பட வேண்டிய நிலையும்
இருந்திருக்காது. ஆசிரியர்
பற்றாக்குறையை சமாளிக்க
ஊதியம் இல்லாமல்,
ஓய்வு பெற்ற முன்னாள்
ஆசிரியர்களை சேவை செய்ய
வருமாறு அழைக்க வேண்டிய
கட்டாயமும் இருந்திருக்காது.
ஆசிரியர் தேர்வு வாரியமும்,
அரசும் இத்தகைய
வழிகாட்டு நெறிமுறைகளை அமைக்காததின்
விளைவு, தேர்வர்கள்
நீதிமன்றங்கள் மூலமாக இந்த
வழிகாட்டு நெறிமுறைகளை அமைக்க
உதவிக்
கொண்டிருக்க்கிறார்கள். இட
ஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கான மதிப்பெண்
சலுகை வழங்கியது,
சிறப்பளிப்பு மதிப்பெண்கள்
எப்படி வழங்கப்பட வேண்டும்,
சிறப்பளிப்பு மதிப்பெண்
வழங்கும்
முறை என்று எல்லாவற்றையும்
நீதிமன்ற உத்தரவின்
நூல்பிடித்தே அமைக்கப்பட்டிருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்
இயங்குதளங்களில்
பிரச்சினைகள் என்றால்,
அதனை முற்றாகத் தீர்க்க
இற்றைப்படுத்தல்களைச்
செய்யாமல், பேட்ச்கள் (Patch)
எனப்படும்
ஓட்டை உடைசல்களை அடைக்கும்
வழிமுறைகளையே செய்வார்கள்.
அதேபோல, ஆசிரியர்
தேர்வு வாரியம் இத்தகைய
வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காமல்
நீதிமன்ற
உத்தரவுகளையே பின்பற்றி வருகிறது.
கல்வியாளர்கள்
ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில்
வழக்குகள் தொடர்ந்து,
ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வுகள்
நடத்தப்பட வேண்டும் என்ற
கல்வி உரிமைச் சட்டத்தின்
பிரிவை கட்டாயம் பின்பற்றும்
படியும், தேர்வு முடிந்த
குறிப்பிட்ட காலவரையறையில்
பணி நிரப்புதல் செய்யப்பட
வேண்டும், ஆசிரியர் தகுதித்
தேர்வை நடத்துவதற்கான
வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற
நடவடிக்கைகளை வாரியம்
செயல்படுத்தும் படி செய்ய
வேண்டியதுதான். அதாவது,
ஆசிரியர் தேர்வு வாரியத்தின்
செயல்களை நீதிமன்ற
உதவியோடு கல்வியாளர்களாகிய
நாமே செய்ய வேண்டியதுதான்.

நடப்பு கல்வியாண்டில் 5.50 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்: தமிழக அரசு இலக்கு!

நடப்பு கல்வியாண்டில் (2014-15) 5.50 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: வெளிப்படையாக நடத்த உத்தரவு

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் 13 வகை புதிய விளையாட்டுகள்: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 13 வகை புதிய விளையாட்டுகள்
சேர்க்கப்பட்டுள்ளன.

காலியிடங்கள் அறிவிப்பதில் தாமதம்: முதுகலை ஆசிரியர்கள் கொதிப்பு

அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான
பணி மாறுதல்
கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும்
நற்று நடந்தது. காலியிடங்கள் குறித்த விபரம்
வெளியிட தாமதம் ஆனதால் ஆசிரியர்கள்
பரிதவித்தனர்.
முதுகலை ஆசிரியர்களுக்கான வெளிமாவட்ட
மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது.
சிவகங்கையில் காலை 10 மணிக்கு துவங்க
வேண்டிய கலந்தாய்வு மதியம் 3
மணி வரை துவங்கவில்லை.
கல்வித்துறை ஊழியர்கள் 'ஆன்-லைனில்'
தயார் நிலையில் இருந்தும், காலியிட விபரம்
வெளியிடப்படவில்லை. சொந்த ஊர் மாறுதல்
கனவில் வந்த ஆசிரியர்கள் முதன்மைக்
கல்வி அலுவலகம் முன் காத்துக்கிடந்தனர்.
ஒரு வழியாக 3 மணிக்கு மேல்
கலந்தாய்வு துவங்கியது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர்
கூறுகையில், 'ஆன்-லைன் இணைப்பில் தயார்
நிலையில் இருந்தும் காலியிட விபரம்
தெரியவில்லை. சென்னை இயக்குனர்
அலுவலகத்தில் இருந்து காலியிடங்கள்
அறிவித்தால் மட்டுமே, நாங்களும் ஆன்-
லைனில் தெரிவிக்க முடியும்' என்றார்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'நெல்லை,
கன்னியாகுமரி, தூத்துக்குடியை சேர்ந்த பலர்,
இம்மாவட்டத்தில் 10 ஆண்டுக்கும் மேலாக
பணிபுரிகிறோம்.
கலந்தாய்வு நடக்கவே இவ்வளவு தாமதம்
ஏற்படுகிறது. தாமதம்
சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சில
முக்கியமான இடங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
காலியிடம் இருப்பது குறித்த தெரிந்தாலும்
கேட்க முடியவில்லை. புதிய
நியமனத்திற்காகவும் சில இடங்கள்
மறைக்கப்படுகின்றன' என்றனர்.

ஆசிரியர் நியமனத்தில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்: ஐகோர்ட் நோட்டீஸ

இடைநிலை,
பட்டதாரி ஆசிரியர்கள்
நியமனத்தின்
போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண்
அடிப்படையில் தேர்வு செய்யும்
அரசாணையை ரத்து செய்ய
தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ்
அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மூன்று ஆண்டுகளாக 'உறங்கும்' அரசு உத்தரவு: 'கவுன்சிலிங்' எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்

தமிழகத்தில் பள்ளிக்
கல்வித் துறை வெளியிட்ட,
துறை ரீதியான மாறுதல்
உத்தரவு, 3 ஆண்டுகளாக
செயல்பாட்டிற்கு வரவில்லை.

Wednesday, June 25, 2014

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - பணி நிரவல் / பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு - கால அட்டவணை சார்பு

தமிழ்நாடு அமைச்சுப் பணி - அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு விருப்ப மாறுதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்கலாம் என இயக்குநர் உத்தரவு

மா.க.ஆ.ப.நி - அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு இரு நாட்கள் "அகமேற்பார்வை பயிற்சி" மாவட்ட அளவில் ஜுலை 8 முதல் ஜுலை 19 வ்ரை நடைபெறவுள்ளது

TNTET 12 ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்
நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில்
வெற்றி பெற்றவர்களின் இறுதி பட்டியல்
வரும் வியாழன் அன்று வெளியிடப்பட
வாய்ப்புள்ளதாகவும்,

ஆசிரியர் கவுன்சலிங் தாமதத்தால் அரசு பள்ளியில் ஒரு மாதம் வீணடிப்பு

பள்ளி திறந்து ஒரு மாதமாகியுள்ள
நிலையில், கவுன்சலிங் நடத்தப்படுவதால், மாறுதல் பெற விரும்பிய ஆசிரியர்களும்,
தலைமை ஆசிரியர்களும் அலட்சியப்போக்குடன் இருப்பதால், பல
பள்ளிகளில், கற்பித்தல் பணிகளில், கடும்
தொய்வு ஏற்பட்டுள்ளது.

விலையில்லா ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு விலை வைக்கப்படுகிறதா??

ஆசிரியர்களுக்கான
பணி இடமாறுதலுக்கான கலந்தாய்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது

திருச்சியை இரண்டாக பிரித்து ஸ்ரீரங்கம் மாவட்டம் உதயமாகிறது: 30ம் தேதி முதல்வர் அறிவிப்பு?

திருச்சி மாவட்டம் 2 ஆக
பிரிக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாகக்கொண்ட தனி மாவட்ட
அறிவிப்பை 30ம் தேதி முதல்வர்
ஜெயலலிதா வெளியிடுவார் என
தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்கிறது? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு - சிஎன்என்-ஐபிஎன்

நரேந்திர மோடி தலைமையிலான
பாஜக கூட்டணி அரசு வருமான
வரி விலக்கு வரம்பை எதிர்வரும்
பட்ஜெட்டில் தற்போதைய ரூ. 2
லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக
உயர்த்தும் என தெரிகிறது. அதிகார
வட்டாரங்களை மேற்கோளிட்டு இந்த
தகவலை சிஎன்என்-ஐபிஎன் வெளியிட்
டுள்ளது. வருமான
வரி விலக்கு வரம்பை உயர்த்துவதற்கான
சாத்தியம்
பற்றி முடிவு செய்து அறிக்கை
தரும்படி வருமான
வரித்துறைக்கு நிதி அமைச்சகம்
உத்தரவிட்டுள்ளதாக அந்த
செய்தி தெரிவிக்கிறது.
இதனிடையே, ஜூன் 20-ம் தேதிக்குள்
மத்திய நேரடி வரிகள் வாரியம்
இது குறித்து நிதி அமைச்சகத்திடம்
அறிக்கை தாக்கல் செய்யும் என அதிகார
வட்டாரங்கள் கூறியதாகவும் சிஎன்என்-
ஐபிஎன் மேலும் தெரிவித் துள்ளது.
வீட்டுக்கடன் மற்றும் மருத்துவ
காப்பீட்டு பிரீமியம் மீதான
வரி விலக்கு வரம்பை உயர்த்துவது
பற்றியும் அரசு பரிசீலித்து வருகிறது.
மருத்துவ காப்பீட்டுத் திட்ட பிரீமியம் ரூ.
5000 வரை உயர்த்தப்படலாம் என்றும் அந்த
செய்தியில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய
நடைமுறையின் கீழ் ரூ.2
லட்சத்துக்கு மேலும் ரூ.5
லட்சத்துக்குள்ளும் வருமானம்
உடையவர்கள்
வரி விலக்குகளுக்கு உட்பட்டு 10 சதவீதம்
வரி செலுத்த
வேண்டும்.வரி விலக்கு வரம்பு ரூ.5
லட்சமாக உயர்த்தப்படுவதால் புதிய
நடைமுறைகளில் ரூ.5 லட்சம் வருமானம்
வரை வரி செலுத்தத்
தேவை இருக்காது. இப்போது, ரூ.2
லட்சம் - ரூ.5 லட்சம் வருமான பிரிவினர்
10 சதவீதம், ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம்
பிரிவினர் 20 சதவீதம், ரூ.10
லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்கள் 30
சதவீதம் வரி செலுத்த வேண்டி உள்ளது.
மேலும் கூடுதலாக
கல்வி வரி செலுத்த வேண்டும்.
மோடி தலைமையிலான அரசின் முதல்
பட்ஜெட் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற
உள்ளது. பட்ஜெட் தயாரிப்புப் பணியில்
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தீவிரமாக
ஈடுபட் டுள்ளார்.

500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு

பட்டதாரி ஆசிரியர்கள் 500
பேருக்கு முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களாக ஆன்-லைன்
மூலம் புதன்கிழமை (ஜூன் 25)
பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

TRB PG TAMIL: சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று (25.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்
மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும்
இன்று ( 25.06.14 )சென்னை உயர்நீதிமன்ற
மதுரைகிளையில் நீதிபதிகள்
இராமசுப்ரமணியன் வேலுமணி,
ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன்
விசாரணைக்கு வருகின்றன.

Sunday, June 22, 2014

போலி பணி நியமன ஆணை: வேலூர் கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

வேலூர் எஸ்எஸ்ஏ திட்ட
முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்
விவகாரத்தில், அவர் போலி கையெழுத்து போட்டு பணி நியமன ஆணை வழங்கி உள்ளது அம்பலமாகி உள்ளது.

அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககத்திற்கு வேண்டுகோள்!

*அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் வட்டார
வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மாநிலம்
முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம்
பந்தாடப்பட்டிருக்கும் பேரவலம் ஆரோக்கியமான அம்சம் அல்ல; கவலை அளிக்ககூடிய, துரதிருஷ்ட வசமான நடவடிக்கையாகும் இது.

Saturday, June 21, 2014

பள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 310 காலிப்பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூலை 1, 2 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சமச்சீர் பாடத்திட்டத்தை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும் ஆய்வில் பரிந்துரை

சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்துள்ளது. எனவே, இந்தப் பாடத்திட்டத்தை தரம் உயர்த்தும் வகையில் முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம்: டிஇடி தேர்வில் தேர்ச்சி பட்டதாரிகள் உண்ணாவிரதம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற
மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்

2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடைநீக்கம்

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக்கல்வித்துறை வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது.

பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் கையாடல்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்'

பெற்றோர் - ஆசிரியர் கழக
நிதியில் கையாடல் செய்தது தொடர்பாக, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இருந்த ஈஸ்வரன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி திறந்த பின் பணி மாறுதல் கலந்தாய்வு: ஆசிரியர்கள் அவதி

பள்ளி திறந்து, ஒரு மாதம்
முடிய உள்ள நிலையில், தற்போது நடத்தப்படும் பணியிட மாறுதல் கலந்தாய்வால், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கல்விசார் மேலாண்மை திட்டம்: சென்னையில் பயிற்சி மையம்

தமிழகத்தில் உள்ள
அனைத்து வகை பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் குறித்த விவரங்களுடன், கல்விசார் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யும்,
கல்விசார் மேலாண்மை தகவல்
முறைமை திட்டத்தின் பயிற்சி மையம்,
சென்னையில், நேற்று திறக்கப்பட்டது.

Friday, June 20, 2014

எம்.எட். படிப்பில் பொது கவுன்சலிங் இந்த ஆண்டில் புதிய முறை அறிமுகம்: அரசு கல்லூரிகளுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை

பி.எட். படிப்பை போல எம்.எட். படிப்பிலும் பொது கவுன்சலிங் முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.

கல்வி மேம்பாட்டில் 7வது இடத்தில் தமிழ்நாடு

கல்வி மேம்பாடு நிலைப் பாட்டில் உள்ள
முதல் 5நகரங் களில் தில்லி இடம்
பெறவில் லை.

பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும்

ஆசிரியர்கள் மற்றும்
தலைமையாசிரியர்களின் பணியிட
மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக
நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம்
கோரிக்கை விடுத்துள்ளது.

சறுக்கும் தமிழ்; சரியும் தேர்ச்சி விகிதம்; சிறப்பு கவனம் செலுத்தப்படுமா?

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்
தேர்வில், மற்ற பாடங்களை காட்டிலும்,
தமிழ் பாடத்தில் தோல்வியடைந்தவர்களின்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

'காசாய்வு' ஆன ஆசிரியர் கலந்தாய்வ

''ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாறுதல்
என்ற பெயரில் 'காசாய்வு' மாறுதல் நடக்கிறது,'' என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் கூறினார்.

பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன?கல்வி துறை செயலர் புதிய தகவல்

''பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ
தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான் காரணம்,''

கடை கடையால் அழையும் பெற்றோர்கள்! +1 எங்கும் கிடைக்கவில்லை

பிளஸ் 1 பாடப் புத்தகங்களுக்கு கடும்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புத்தகங்கள்
கிடைக்காமல் மாணவர்களின் பெற்றோர்
கடை கடையாக ஏறி இறங்கி அலைந்து வருகின்றனர்.