Wednesday, February 26, 2014

RMSA sanctions Rs. 28.38 crore to upgrade 5,677 Govt. schools in State

The Rashtriya Madhyamik Shiksha Abhiyan
(RMSA), a Centrally-sponsored scheme,
recently allotted a sum of Rs. 28.38 crore for
upgrading 5,677 Government schools in all 32
districts of Tamil Nadu.

விண்ணப்ப விற்பனை மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் ரூ.54 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளது

ஆசிரியர் பணி நியமனத்துக்கான
போட்டித் தேர்வுகள், விண்ணப்ப விற்பனை மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூ.54
கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.

பிளஸ்2 தேர்வு மையத்தில் தரைவழி தொலைபேசியை மட்டுமே பணியாளர்கள் பயன்படுத்த தேர்வு துறை இயக்குநரகம் உத்தரவு

பிளஸ்2 தேர்வில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக கைபேசிகளை நிறுத்தம்
செய்து பாதுகாப்பாக வைப்பதோடு, அவசர தொடர்புக்கு தரைவழி தொலைபேசியை மட்டுமே பயன்படுத்துவதற்கு அரசு
தேர்வுத்துறை இயக்குநரகம்
உத்தரவிட்டுள்ளது.

2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்க கோரி வழக்கு; 2வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்

2012ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உத்தரவிடக்கோரி திருவாரூரை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் சென்னை
உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்கிறது

மத்திய அரசு ஊழியருக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய
அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்
தேர்தல் நெருங்கி வரும் நிலையில்
உடனடியாக இது குறித்து அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மார்ச் 1-ஆம் தேதியிலிருந்து அமல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த முடிவ

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல்
வெளியாகியுள்ளது.

நாட்டின் பள்ளிகளை தரப்படுத்த தலைமையாசிரியர்களுக்கானன பயிற்சி!

பள்ளிக் கல்வியை தரப்படுத்தும் பொருட்டு,  மிகப்பெரிய அளவிலானதொரு பள்ளி
தலைமைத்துவத்திற்கான பயிற்சியை,
மத்திய மனிதவள அமைச்சகம்
தொடங்கியுள்ளது.

தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு: இவ்வார இறுதியில் நடைபெற வாய்ப்பு - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

இன்று (26.02.2014) காலை தொடக்ககல்வி இயக்குநர் முனைவர்.இளங்கோவன்
அவர்களை நமது தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணி பொதுச் செயலாளர் செ.முத்துசாமி அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு,
தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்தான தற்போதைய நிலவரம்
குறித்து கேட்டறிந்தார்.

தேர்தல் பணியில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், மக்களவைத் தேர்தல் பணியில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள்களை  எடுத்துவர புதிய முறை

பொதுத் தேர்வு விடைத்தாள் கட்டுகள் தொலைவதைத் தடுக்க, தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறை வாகனங்களிலேயே விடைத்தாள்களைக் கொண்டுவர அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டம்: மாநில நிர்வாகிகள் தகவல்

தமிழகம் முழவதும் இன்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்கின்றனர்

திருச்சியில் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
திருச்சி துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்
உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தம் பாதிப்பு இருக்காது: தொடக்கக் கல்வி இயக்குநர்

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபடுகின்றனர்.

அரசு பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு இல்லை:பி.எட்., கணினி பட்டதாரிகள் தவிப்பு

அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, கணினி பாடப்பிரிவு துவங்கப்படாததால்,
மாநிலம் முழுவதும், 15 ஆயிரம், பி.எட்.,
கணினி பட்டதாரிகள்,வேலையில்லாமல்
தவித்து வருகின்றனர்.

மாணவர்கள் முன் வினாத்தாள் கவர் பிரிக்க உத்தரவு:தேர்வு துறை கிடுக்கிப்பிடியால் பலரும் அதிர்ச்சி

பிளஸ் 2 வினாத்தாள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான அளவு, 'கவர்'
செய்யப்பட்டு உள்ளதால், தேர்வெழுதப்படும் மாணவர்கள்
முன்னிலையில் பிரிக்க, உத்தரவிட்டு உள்ளது.

கடைசி நேரத்தில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பு:குளறுபடி கணக்கை துவக்கியது தேர்வு துறை

பத்தாம்
வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பை,
கடைசி நேரத்தில்,
தேர்வுத்துறை அறிவித்ததால், மாணவர்கள்
அதிர்ச்சி அடைந்தனர். மேலும்,
பதிவு எண்களை, இணையதளத்தில்
வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டதால்,
செய்முறை தேர்வு மதிப்பெண்ணை,
பதிவு செய்வதற்கான படிவங்களை,
இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம்
செய்ய முடியாமல், ஆசிரியர் தவித்தனர்.
இதன்மூலம், பிரதான
எழுத்து தேர்வு துவங்குவதற்கு முன்பே,
குளறுபடி கணக்கை,
தேர்வுத்துறை துவக்கி உள்ளது.
25 மதிப்பெண்:பத்தாம் வகுப்பு மாணவ,
மாணவியர் அனைவரும், அறிவியல் பாடத்தில்,
செய்முறை தேர்வை செய்ய வேண்டும். இதற்கு,
25 மதிப்பெண் ஒதுக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக, செய்முறை தேர்வு குறித்த
அறிவிப்பை, இரண்டு வாரங்களுக்கு முன்பே,
தேர்வுத்துறை வெளியிடுவது வழக்கம்.
அப்போது தான், மனதளவில், மாணவர்கள்,
தேர்வுக்கு தயாராவர்.
கடைசி நேரத்தில்,
தேர்வு தேதியை அறிவித்தால், மாணவர்
மத்தியில், பதற்றம் தான் ஏற்படும்.
அதிர்ச்சி:இதை அறிந்தும், பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கான
செய்முறை தேர்வு அறிவிப்பை,
தேர்வுக்கு முதல் நாள்,
தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சென்னை,
காஞ்சிபுரம் உள்ளட்ட பல மாவட்டங்களில்,
நேற்று, செய்முறை தேர்வு துவங்கியது.
ஆனால், இது குறித்த அறிவிப்பை,
நேற்று முன்தினம் தான், மாணவர்களுக்கு,
ஆசிரியர் தெரிவித்தனர்.
'நாளைக்கு செய்முறை தேர்வு' என, ஆசிரியர்
கூறியதை கேட்டதும், மாணவர்கள்
அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவர்களுக்கான பதிவு எண்களும்,
நேற்று முன்தினம் தான்,
தேர்வுத்துறை இணையதளத்தில்
வெளியிடப்பட்டன.தவிப்பு:இதனால், அவசர
அவசரமாக, பதிவு எண்களை, பதிவிறக்கம்
செய்து,
மாணவர்களுக்கு அறிவித்து உள்ளனர்.இதனால்,
செய்முறை தேர்வு மதிப்பெண்
விவரங்களை பதிவு செய்வதற்கான படிவத்தை,
முன்கூட்டியே, இணையதளத்தில் இருந்து,
பதிவிறக்கம் செய்ய முடியாமலும்,
ஆசிரியர்கள் தவித்தனர்.பிரதான
எழுத்து தேர்வு துவங்குவதற்குள்,
குளறுபடி கணக்கை,
தேர்வுத்துறை துவக்கி உள்ளது.

டி.இ.டி., தேர்வில் சிறப்பு தேர்ச்சியா? :மார்ச் 12 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால்
தேர்ச்சி பெற்ற, 47 ஆயிரம் பேருக்கு, மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு மூன்று வாரத்தில் ரிசல்ட்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்
படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறன்தேர்வு என்ற
சிறப்பு திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இன்றும், நாளையும் ஆசிரியர் ஸ்டிரைக் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய
வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்,

10ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் வருமா? முடிவுக்கான கோப்பு, முதல்வர் மேஜையில் "கொர்"

பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், வழக்கமான பொது தேர்வு இருக்குமா அல்லது முப்பருவ கல்வி முறையின்படி,
தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படுமா என்பன குறித்து, கல்வித்துறையில், பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவதற்கான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகலாம்?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்
ஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை | மார்ச் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத
மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம்
பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மாவட்ட அளவில் கண் காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மாவட்ட அளவில் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள்,
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள்,
இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

60 ஆயிரத்தை 4 ஆயிரம் சமாளிக்க முடியுமா : நாளை ஆசிரியர் போராட்டத்தால் சிக்கல்

தமிழகத்தில் நாளை (பிப்.,26) ஒரே நாளில்,
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேர் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை, 4 ஆயிரம் ஆசிரியர் பயிற்றுனர்களை வைத்து, சமாளிக்க முடியுமா

"லாங் லீவ்' ஆசிரியர்கள்: தேர்வு நேரத்தில் மாணவர்கள் அவதி!

தேர்வு நெருங்கும் சமயத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்கள் குழந்தைகளின்
படிப்புக்காக, வாரக்கணக்கில், "லாங் லீவ்'
போடுவதால், அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாகியுள்ளது.

"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம், தேர்வு பணி காரணமாக, நடைமுறைப்படுத்த
முடியாத சூழல் உருவாகியுள்ளது.

டி.இ.டி., தேர்வுக்கு புதிய அரசாணை

"பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுதலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

Monday, February 24, 2014

எப்படிக் கற்பது ஆங்கிலம்?

ஆங்கிலத்தின் தேவையைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் புதிதாக எழுதத் தேவையில்லை.

நாளை உள்ளிருப்பு போராட்டம் : தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு!

ஏழு அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (25ம் தேதி) உள்ளிருப்பு போராட்டமும்,
நாளை மறுநாள், அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தப்போவதாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி அறிவித்துள்ளது.

தாய்மொழியில் கற்றால் சுயசிந்தனை வளரும்- மயில்சாமி அண்ணாதுரை

சுயசிந்தனையை வளர்ப்பதில்
தாய்மொழி வழிக் கல்வி பெரும்பங்கு வகிப்பதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

கணிதப்பாடத்துக்கு 25 இண்டர்னல் மார்க் வழங்கிட கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழ்நாடு கணித முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலப்பொதுக் குழுக் கூட்டம் ராசிபுரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில்ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 5 முதல் விண்ணப்பம்

பார்வையற்ற மாற்றுத்
திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு வரும் மார்ச் 5-ஆம்
தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

தமிழ் வழிப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க தடையாக இருக்கும் சட்டப்பிரிவை நீக்க வலியுறுத்தல்

தமிழ்வழி சிறுபான்மை மற்றும்
சிறுபான்மையற்ற பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி வழங்கத் தடையாக இருக்கும்
சட்டப்பிரிவு 14ஏ-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி 10 நாட்களில் முடியும்

நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம்
வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு: கார் வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு 'ரூட் ஆபீசர்' பதவி

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக, கார்
வைத்திருக்கும் ஆசிரியர்கள், "ரூட்
ஆபீசர்களாக' நியமிக்கப்பட உள்ளனர்.

சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற போட்டி! ரூ.3 லட்சம் விலை கொடுக்க ஆசிரியர்கள் தயார்!

மதுரை மாவட்டத்தில், காலியாக உள்ள
முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக
உதவியாளர் பதவியை கைப்பற்ற
ஆசிரியர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

டெய்லர்களை அழைத்து விடைத்தாளை தைக்க வேண்டும் கல்வித்துறை புது உத்தரவு

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான
பிளஸ்2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு: "ஐகோர்ட்டின் இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும்" நீதிபதி அறிவிப்பு

முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு ஐகோர்ட்டின் இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர்

கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட
பிறகும், அரசு பள்ளிகளின் தரத்தில் எந்த
மாறுதலும் ஏற்படவில்லை என தேசிய
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங் கூறினார்.

பிளஸ்–2, 10–ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வையொட்டி இரவு நேர மின்தடை வேண்டாம் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை

பிளஸ்–2 மற்றும் 10–ம்
வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச்
சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள்
இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல்
(Verification) அல்லது நேர்காணல் போன்ற
காரணங்களுக்காக வெளியில் எடுத்துச்
செல்ல நேரலாம்.

"ஆன்-லைன்' குளறுபடியை தவிர்க்க, தேர்வுத்துறை அமைத்த சிறப்பு மையங்கள்

தேர்வுகளுக்காக, மாணவ, மாணவியர்,
தனியார், "பிரவுசிங்' மையங்களில் பதிவு செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க, முதல் முறையாக, தேர்வுத்துறை,

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே இடைநிற்றல் உதவித்தொகை?

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பிளஸ் 2
மாணவர்களுக்கு இடைநிற்றல் கல்வி உதவித் தொகை வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை
மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.

மார்ச், 3ல் துவங்கும் பிளஸ் 2 தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சு! : தேர்வுப்பணியில் 1 லட்சம் பேரை ஈடுபடுத்த திட்டம்

பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்னும்,
ஒன்பது நாள் மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை, முழுவீச்சில் செய்து முடித்துள்ளது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்: ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம் பாடம் நடத்த கல்வித் துறை அதிகாரிகள் திட்டம்

தமிழகத்தில், தொடக்கப்
பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தை, 'பிசு பிசுக்க' வைக்க, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 2014ல் எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வு எண் மற்றும் பெயர் (SSLC NOMINAL ROLL MARCH 2014) பட்டியல் வெளியீடு

மார்ச் 2014ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ / மாணவியர்களின் தேர்வு எண் மற்றும் பெயர் பட்டியல் WWW.TNDGE.IN என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறன் குழந்தைகள் கல்விக்கு அரசு பள்ளிகளில் தனி ஆசிரியர்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு மற்றும்
அரசு உதவிபெறும் பள்ளிகளில்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க, சிறப்பு பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Saturday, February 22, 2014

முதல்வரின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியம்: மாற்றுத் திறனாளிகள் அதிர்ச்சி

அரசாணைக்கும், முத லமைச்சர்
அறிவிப்புக்கும், முர ணாக ஆசிரியர்
தேர்வு வாரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உண்ணாவிரதம்

அரசு அங்கீகாரம் பெற்ற நிதியுதவி பெறும்
தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின்
சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே சனிக்கிழமை உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி உச்சரிப்புக் கையேடு: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி உச்சரிப்பு வழிகாட்டிக் கையேட்டை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வு தொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்

பிளஸ்2 தேர்வு விடைத்தாள்களில் மாணவ, மாணவிகளின் விவரம் மற்றும் புகைப்படத்துடன் இடம் பெற்ற முகப்புத்தாள் இணைக்கும் பணி மேற்கொள்வது தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுக்கு தயார் நிலையில் இருப்பது எப்படி? முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வு இயக்குனரகம் சுற்றறிக்கை

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2
தேர்வுக்கு தயாராக இருப்பதற்கு உரிய
பல்வேறு அறிவுரைகளையும்
சுற்றறிக்கையாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரகம் அனுப்பி உள்ளது.

தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தாமதம் ஏன்? பொதுச்செயலர் செ முத்துசாமி தகவல

இடைநிலை மற்றும் தகுதிவாய்ந்த
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வும்

முதுகலை தமிழாசிரியர் பணிக்கு ஒன்பது பேர் நியமனம்

திருச்சி மாவட்டத்தில் பணியாற்ற
ஒன்பது முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

30 உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் அவதி தரம் உயர்த்தி 2 ஆண்டாகியும் கட்டட வசதியில்லை

ராமநாதபுரம மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 30 உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை வசதியின்றி, இடநெருக்கடியால் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர்.

குரூப் - 4 முடிவு வெளியாவதில் கடும் இழுபறி

குரூப் - 4தேர்வு முடிவு வெளியாவதில்,
ஏழு மாதங்களாக இழுபறி நீடித்து வருவதால், தேர்வெழுதிய, 12 லட்சம் பேரும்,தேர்வாணையத்தின்
(டி.என்.பி.எஸ்.சி.,) மீது, கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

வட்டி செலுத்தாவிடில் கல்விக் கடன் மறுப்பா? : ரிசர்வ் வங்கிக்கு புகார் செய்யலாம்

""வங்கியில் வாங்கிய கல்விக்கடனுக்கு வட்டி கட்டாவிட்டால், தொடர்ந்து கடன் வழங்க மறுக்கும் வங்கிக்கிளைகள் மீது, தலைமை அலுவலகத்தில் புகார் செய்யலாம்.

இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு

பள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர், 498 பேரை, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்வதற்கான
கலந்தாய்வு, "ஆன்-லைன்'முறையில், இன்று நடக்கிறது.

16 mm எண் ஊசியால் ஒரு அங்குலத்துக்கு 6 தையல் போட வேண்டும் : ப்ளஸ் 2 விடைத்தாள்கள் அமைப்பு

தமிழகத்தில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்காக, பார்கோடு எண்
அமைந்த, மேல் தாள்கள்,
தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன;

கேள்வித்தாள் இல்லாததால் தேர்வு நேரம் மாற்றியமைப்பு

பல மாவட்டங்களில், கேள்வித்தாள்
கட்டுகளை ஏற்றிய வாகனங்கள், குறிப்பிட்ட மையத்திற்கு செல்லாததால்,
பள்ளி மாணவர்களுக்கு, இன்று காலை, நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு, பிற்பகல்,2:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற புது விண்ணப்பம்

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு,
"பென்ஷன்' மற்றும் இதர பணபலன்களை வழங்கும் நடைமுறையை எளிதாக்குவதற்காக, புது விண்ணப்பத்தை, அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான கலந்தாய்வு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது

முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான காலையில் நடந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் பணியிடம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. 

அரசுத் தரப்பில் கால அவகாசம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் - டிட்டோஜாக் அதிரடி முடிவு

நேற்று தொடக்கக் கல்வி இயக்குனர் அளவில் நடைபெற்ற கூட்டத்திலும், இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.

உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

இதுகுறித்து மாநில தலைவர் திரு.காமராஜ், பொதுச் செயலாளர் திரு.ரெங்கராஜன் மற்றும் பொருளாளர் திரு.ஜோசப் சேவியர் ஆகியோர்
அளித்த அறிக்கையில் இன்று நடைபெற்ற

பள்ளிக்கல்வித்துறையில்உள்ளஇடைநிலை ஆசிரியரிலிருந்துபட்டதாரி ஆசிரியருக்கானபதவி உயர்வு கலந்தாய்வுநாளை சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில்ஆன்லைன் மூலம் நடைபெறஉள்ளது

2013-14ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான
கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை காலை 10மணி முதல் நடைபெற உள்ளது.

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி

இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும்
நவோதயா வித்யாலயா சமிதி
பள்ளிகளில் காலியாக உள்ள 937
இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப
தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி கல்வித்துறை இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

பள்ளி கல்வித்துறையில், 145,
இளநிலை உதவியாளர்கள் மற்றும்
தட்டச்சர்கள், உதவியாளர்களாக,
நேற்று, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

ஆசிரியர்கள் 'லீவ்' போராட்டம்: 'பிசுபிசுக்க' அதிகாரிகள் திட்டம்

தமிழகத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக
விடுப்பு எடுக்கும் போராட்டத்தை, 'பிசுபிசுக்க' வைக்க,  

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம்தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் எச்சரிக்கை

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்,
நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசுக்கு பாடம் புகட்டுவோம்

5 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களுக்கான பதவி உயர்வு / பணி மாறுதல் நிரப்பி அரசு உத்தரவு

தமிழகத்தில் காலியாக உள்ள 5
மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும்
அதையொத்த பணியிடங்களை பதவி உயர்வு /பணி மாறுதல் மூலம் நிரப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்
விரைவில் 600 விரிவுரையாளர்களும்,
அரசு பொறியியல் கல்லூரிகளில் 145
உதவி பேராசிரியர்களும் போட்டித்
தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட 593 பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 2 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்– அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

பள்ளிக் கல்வித்துறைக்கான 106
கோடி மதிப்புள்ள திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட தாற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும்
இடைநிலை கல்வித் திட்டத்தில் தாற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தெரிவித்துள்ளார்.

டி.இ.டி., தேர்வில் இதர மாற்றுத்திறனாளிகளை புறக்கணிப்பதா? : தமிழக அரசுக்கு கேள்வி

"சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில்
(டி.இ.டி.,), பார்வையற்றோர் மட்டும்,
அனுமதிக்கப்படுவர்' என்ற, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும்
தேர்வு எழுத, அனுமதிக்க வேண்டும்' என,

10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு: தேர்வு துறை கவனக்குறைவு

தேர்வுத் துறை இணையதளத்தில், 10ம் வகுப்பு, "நாமினல்ரோல்' வெளியிடப்படாததால், இன்று நடக்கவிருந்த, செய்முறை தேர்வு, திடீரென
ஒத்தி வைக்கப்பட்டது.

மலைப்பகுதி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க "ஒருங்கிணைந்து பயிலும் திட்டம்' துவக்கம்

தொலைதூரம் மற்றும் மலைப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, கல்வி கற்பிப்பதற்கு வசதியாக, "பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து,
ஒருங்கிணைந்து பயிலும் திட்டம்' நேற்று துவக்கப்பட்டது.

டிட்டோஜாக் பொறுப்பாளர்களுடன் நாளை காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் பேச்சுவார்த்தை டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் சென்னையில் முகாம்

இயக்குனரின் பேச்சு வாரத்தையில்
முடிவு எட்டப்படாதால் இயக்குனர் அவர்கள்
கல்வித்துறை முதன்மை செயலர்
அவர்களை சந்தித்து காலையில் நடந்த
பேச்சு வார்ததை குறித்து விளக்கினார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் அகவிலைபடியை வழங்க திட்டம், மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தினமலர்

அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட
அகவிலைப்படியை இணைத்து வழங்க
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாத்தூரில் ரூ.2.95 கோடி செலவில் பள்ளி கட்டிடங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

அரசு பள்ளி மாணவர்கள் முதலிடத்தை பிடிக்க வேண்டும்: ரங்கசாமி வேண்டுகோள்

புதுவை அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 10–ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற

பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது!!!

"ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிப்.25, 26-இல் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப்
பள்ளி ஆசிரியர்கள் வருகிற 25, 26-ஆம்
தேதிகளில் வேலைநிறுத்தப்

பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம் அதிகரிக்க அதிகாரிகள் 25ம் தேதி ஆலோசனைக் கூட்டம்

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக சென்னையில் வருகிற 25ம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள்
கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி

திருச்சி புத்தூர், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, இ.ஆர்.
மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில்
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்
மேலாண்மைக்குழு உறுப்பி னர்
பயிற்சிக்காக மாவட்ட அளவிலான
கருத்தாளர் பயிற்சி கடந்த 18ம்
தேதி துவங்கியது. பயிற்சி 3 நாள்
நடக்கிறது.

மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்: அமைச்சர் கே.சி. வீரமணி

மாணவர்களின் எதிர்கால நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக
அரசு செயல்பட்டு வருவதாக பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

வருமானவரி பற்றிய தகவல்களுக்கு www. tnincometax.gov.in என்ற புதிய இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது

வருமானவரி பற்றிய தகவல்களுக்கு புதிய இணையதளம் நேற்று தொடங்கப்பட்டது.

தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை ஒளிவு மறைவின்றி இணையதளத்தில் வெளியிட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது

தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்
விவரத்தை ஒளிவு மறைவின்றி
இணையதளத்தில் வெளியிட
தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையம் திட்டமிட்டு அதற்கான
பணிகளை செய்து வருகிறது.

தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை ரத்து செய்யக் கோரி வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்

ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 ல்
பங்கேற்றவர்களுக்கு, 5 சதவீத மதிப்பெண்
சலுகை வழங்கிய உத்தரவை, ரத்து செய்யக்கோரிய வழக்கில், டி.ஆர்.பி.,
தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

முதுகலை தமிழ் ஆசிரியருக்கு நாளை பணி நியமன "கவுன்சிலிங்'

""ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,),
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு, நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,''

அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்? : இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது டி.ஆர்.பி.,

"ஆசிரியர் தகுதி தேர்வில்(டி.இ.டி.,)தேர்ச்சி பெற்று, அரசுப்பணி கிடைக்காமல்
காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது.

கவனிக்க அரசுக்கு நேரமில்லை : 25 டி.இ.ஓ., பணியிடம் காலி

தமிழகத்தில், 25, மாவட்டக்கல்வி அலுவலர்
பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளாக,
நிரப்பப்படாமல் உள்ளன.

"தத்கால்' திட்டம் நீட்டிப்பு : தேர்வு துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வை எழுத, "தத்கால்'
திட்டத்தில், விண்ணப்பம் செய்வதற்கான
காலக்கெடு, இன்று ஒரு நாள்,
நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

Wednesday, February 19, 2014

ஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம்

வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்
பயிற்றுநர்கள் கீழ்கண்ட 10 அம்சக்
கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட்
தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 சார்பான அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில்
ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு
ஒத்திவக்கப்பட்டுள்ளஆசிரியர் தகுதித்
தேர்வு தாள் 2 சார்பான அனைத்து வழக்குகளும் இன்று பிற்பகல்
நீதியரசர் ஆர்.சுப்பையா அவர்களின்
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஏழு பாடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியீடு

முதுகலை ஆசிரியர்தேர்வில், நேற்று இரவு, திடீரென, ஏழு பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

'கை' வலிக்க எழுதியும் கல்வி உதவி கிடைக்கல: மத்திய அரசால் மாணவர்கள் 'அப்செட்'

மதுரை: தமிழகத்தில், தேசியத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும், 2008ம் ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால், மத்திய அரசு மீது மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அறிவித்தது 2,895 பணியிடம்; நியமனம் 583 தான்: முதுகலை ஆசிரியர் நியமனத்தில் உச்சகட்ட கலாட்டா

ஆசிரியர் தேர்வு வாரியம் -டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம்

பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி; சிறப்பு காவல் இளைஞர் படைக்கு மட்டும் தனி நியாயமா?

சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர்ந்துள்ள இளைஞர்கள், ஒரு ஆண்டிற்குப்பின், சிறப்பு தேர்வு அடிப்படையில், காவல் துறையில்,
பணி நியமனம் செய்யப்படுவர்' என,

Tuesday, February 18, 2014

ஆங்கிலம் படித்த இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பு அதிகம்

இது குறித்து தமிழ்நாடு அசிரியர்
கூட்டணியின் பொதுச்செயளாலர்
திருசெ.முத்துசாமி அவர்கள் தகவல்.

டிட்டோஜாக் அமைப்பாளர்களை, தொடக்கக் கல்வி இயக்குனர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களுடன்
(டிட்டோஜாக் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 7 சங்கங்களுடன்) வரும்

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது

இது குறித்து தமிழ்நாடு அசிரியர்
முன்னேற்ற சங்கத்தின் மாநில
தலைவர் திரு.தியாகராஜன்
அவர்கள் கூறியாதவது:

பார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஏப்.28-ல் சிறப்பு தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பார்வையற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 28-ம்
தேதி சிறப்பு தகுதித்தேர்வு
நடத்தப்படும் என்று ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சுவர் ஓவியங்கள் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: அசத்தி காட்டிய கல்லூரி மாணவியர்

சென்னையிலுள்ள,ஸ்டெல்லா மேரிஸ்
கல்லூரி சுற்றுச்சுவரின் இரண்டு புறங்களிலும், மாணவியர் வரைந்த,
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியங்கள்,

மாணவர்களுக்கு கல்விக்கடன் சலுகை; மாணவர்கள் நிம்மதி

நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், கல்வித் துறைக்கான ஒதுக்கீடு, கடந்தாண்டை விட,

Monday, February 17, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில்
தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு

மத்திய இடைக்கால பட்ஜெட்- 2014-15 முழு விவரங்கள்:தனிநபருக்கான வருமான வரியில் மாற்றமில்லை

திருக்குறளை மேற்கொள்காட்டி பட்ஜெட்
பேச்சை நிறைவு செய்தார் ப.சி. அரிசிக்கான சேவை வரி நீக்கம் வருமான வரி விகிதங்களில்மாற்றம் இல்லை

தேவை, கல்வி முறையில் ஒரு மாற்றம்! துக்ளக் கட்டுரை

நாட்டின் மிகப் பெரிய பொக்கிஷம் குழந்தைகள் என்பது, உலகெங்கும் ஒத்துக் கொள்ளப்பட்ட விஷயம்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 90 சதவீத பணியிடம் காலி

"அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 90 சதவீதம்,  விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன'

கரையும் நிலையில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசு பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப் பிரிவுகள், பல ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருப்பதால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில், இந்த பாடப் பிரிவுகள் காணாமல் போகும்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்களில் மாற்றம், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அதிர்ச்சி?

ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி
நியமனத்தில்வெயிட்டேஜ் மதிப்பெண்
முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

மேனிலைத் தேர்வு- தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள இன்றே கடைசி நாள்

மேனிலைப்பள்ளி பொதுத் தேர்வுகளுக்காக தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பெற்றுக்கொள்ள ஞாயிற்றுக்கிழமையே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்காக போடப்பட்ட தமிழக பட்ஜெட்!

கடந்த, 13ம் தேதி, சட்டசபையில் தாக்கல்
செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், 'ஞாலங்
கருதினுங் கைகூடுங் காலம் கருதியிடத்தாற் செயின்' என்ற, சிறப்பான திருக்குறள் இடம் பெற்றிருந்தது.

பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்: இனி, 'பொதுப் பணித்துறைக்கு நிதி வழங்கப்பட்டு, புதிய வகுப்பறைகள் கட்டப்படும்'

தமிழகத்தில், 1,851 பள்ளிகளில், புதிய
வகுப்பறைகள், கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.

நிறுத்தி வைத்த பதவி உயர்வு: உடனடியாக வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

தொடக்கக் கல்வித் துறையில், நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை வழங்க வேண்டும், என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, 15 ஆண்டு கழித்தே வேலை வாய்ப்பு?

''தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற
இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2013 -14
க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது, 15
ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும்'' என,
கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் பணி நியமனம் தாமதமாகும், புதிய நியமனம் ஜூன் மாதம் நடைபெறும்

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்
குறைப்பதில் அரசு எடுத்த தாமத முடிவால்
தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும்
தாமதமாகும்.

மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வில் மீண்டும் மாற்றம் முதன்மைத் தேர்வில் கல்வியியல் பாடம் நீக்கம்

பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக்
கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்கள்75
சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25
சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும்
நிரப்பப்படுகின்றன.

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 17.02.2014 அன்று விசாரணைக்கு வருகிறது

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு வரும் 17.2.14 அன்று விசாரணைக்கு வருகிறது.

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பணி நியமன ஆணை வழங்கி வருகின்றது

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல்தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம்
உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக
சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும்
பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.

பொதுத்தேர்வுக்கு வழிகாட்டும் கையேடு- பள்ளி கல்வித்துறை வெளியீடு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் சிறப்பாக
தேர்வு எழுதுவதற்கு வசதியாக, அனைத்து பாடங்களுக்கான வழிகாட்டுதல்
கையேடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 'தத்கால்' திட்டம் அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வை,தனி தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், 'தத்கால்' திட்டத்தின் கீழ், இம்மாதம், 17 முதல் 19 வரை, தேர்வுத் துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலம், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிப்பதில் மாற்றம்: டி.இ.டி., முடிவில் புதிய உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,),
'வெயிட்டேஜ்' மதிப்பெண்
அட்டவணையில், சிறிய மாற்றம்
செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு: 10.42 லட்சம் பேர் பங்கேற்பு

மார்ச், 26ல் இருந்து, ஏப்ரல், 9 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொது தேர்வை, 10.42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

Friday, February 14, 2014

தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஹீரோ, ஹீரோயினாக சித்தரிக்கிறார்கள்.

பள்ளி கல்விக்கான நிதிஒதுக்கீடு சரிவு!

பள்ளி கல்வி துறைக்கான நிதி ஒதுக்கீட்டு அளவு, கடந்த ஆண்டை விட வெகுவாக சரிந்துள்ளது.

பிளஸ்2 தனித்தேர்வர்கள் இன்டர்நெட்டில் ஹால்டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்: திருச்சி முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

பிளஸ்2 பொதுத்தேர்வு எழுத உள்ள
தனித்தேர்வர்கள் இன்டர்நெட் மூலம் ஹால்டிக் கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று திருச்சி முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.எம்.எஸ்.ஏ., நிதியில் அதிகாரிகள் தலையீடு: அதிருப்தியில் தலைமையாசிரியர்கள்

தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் வழங்கப்பட்ட மத்திய அரசு நிதியை செலவிடுவதில், அதிகாரிகள் தலையிடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த திட்டம்

தமிழகத்தில் வரும் 2016-17-ஆம்
நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின்
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த
உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

அறிவிப்பு வெளியான நாள்:14.02.2014. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:14.03.2014.

சுயநிதி பள்ளிகளின் பெயர் மாற்றம், அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்ப்பு

தமிழ்நாட்டில் மாநில கல்வி வாரியம்,
மெட்ரிகுலேஷன் கல்வி, ஆங்கிலோ இந்தியன் உள்பட 4 வகை கல்வி முறை இருந்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் எதிர்த்து வழக்கு

ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

Thursday, February 13, 2014

டி.இ.டி தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது, 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி: மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்ன?

அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப்
பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75
ஆயிரமாக அதிகரித்துள்ளது.

15,000 பி.எட்., பட்டதாரி ஆசிரியருக்கு அரசு பணி வழங்க கோரி மனு

"தமிழகத்திலுள்ள வேலையில்லா கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி (பி.எட்.,) ஆசிரியர்கள் 15,000 பேருக்கு பள்ளிகளில்,
அரசு பணிவாய்ப்பு வழங்க வேண்டும்"

தமிழக நிதிநிலை அறிக்கை 2014-15: முக்கிய அம்சங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கு மாத
உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும்

உயர் கல்வித்துறைக்கு 3, 627 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

தமிழக உயர் கல்வித்துறைக்கு 2014-15 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.3,627 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர்
ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.17, 731.71 கோடி நிதி ஒதுக்கீடு

* 2014-2015ஆம் கல்வியாண்டில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்ப்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியின் நிலை என்ன?- ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

அண்மையில் ப்ரதம் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தமிழக பள்ளிக் கல்வியின் நிலை அதிர்ச்சி அளிக்கும்படியாக இருந்தது.

ஆசிரியர் தகுதி தேர்வு ஹால் டிக்கெட் தொலைத்தவர்கள் ரோல் நம்பர் அறிய ஏற்பாடு

டிஇடி தேர்வு எழுதியவர்கள் ஹால்
டிக்கெட்டை தொலைத்துவிட்டால்,
அவர்கள் தங்கள் ரோல் நம்பரை தெரிந்துகொள்ள டிஆர்பி ஏற்பாடு செய்துள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு : ஏப்ரல்,மே மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு?

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத
மதிப்பெண்சலுகை அரசு வழங்கியதை அடுத்து இத்தேர்வில் கூடுதலாக 45ஆயிரத்துக்கும் அதிகமானோர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டெட்' தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி: 60 ஆயிரம் பேரின் நிலை என்ன? - தினமணி

அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு முன்கூட்டி வெளியாகாது

"பிளஸ் 2 தேர்வு முடிவை,முன்கூட்டி வெளியிட வாய்ப்பு இல் லை'

Wednesday, February 12, 2014

இரயில் கட்டண உயர்வு இல்லை; இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுடில்லி : கடும் அமளிக்கு இடையே அடுத்த 4 மாதங்களுக்கான இடைக்கால
ரயில்வே பட்ஜெட்டை மத்திய
ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கே லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார்.

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்

தமிழக அரசின் 2014-2015ம் ஆண்டுக்கான
பட்ஜெட் நாளை காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

மாணவர்களுக்கு தேர்வு பயம் போக்க கவுன்சிலிங்: பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன்

பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் கூறியதாவது:தற்போது பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வு குறித்து பல மாணவர்களுக்கு பயம் இருக்கிறது.

மத்திய அரசு ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'

மத்திய அரசுக்கு எதிராக,
இன்று துவங்கும், இரண்டு நாள், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில், 30 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

டி.இ.டி., புதிய மதிப்பெண்: டி.ஆர்.பி., இணையத்தில் விவரம்

ஆசிரியர் தகுதி தேர்வில்
(டி.இ.டி.,), 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பின், புதிய மதிப்பெண் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,)
இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வு: 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு

பிளஸ் 2
பொது தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர்,
தேர்வுத்துறை இணைய தளம் வழியாக, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஐ.ஏ.எஸ்., தேர்வர்களுக்கு மத்திய அரசு சலுகை

ஐ.ஏ.எஸ்.,
தேர்வு எழுதுவோருக்கு, மத்திய அரசு சலுகை அளித்துள்ளது. அதன்படி, பொதுப் பிரிவில் உள்ளவர்கள், இனி, ஆறு முறையும்,  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளவர்கள், ஒன்பது முறையும் தேர்வெழுதலாம்.

பிப்.25ல் உள்ளிருப்பு போராட்டம், பிப்.26ல் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த முடிவு

இன்று நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் மாநில செயற்குழு

முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு விரைந்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நேற்று (10.02.14) நேரில் முறையீடு

முதுகலை ஆசிரியர்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் பலர் நேற்று (10.02.2014) ஆசிரியர் தேர்வு வாரிய உயர்
அதிகாரிகளை நேரில் சந்தித்தனர்.

+2 மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வதில் மாற்றம்!

மிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ்டூ அரசு பொது தேர்வுகளில்
முறைகேடுகளை தடுக்க, மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வது குறித்து புதிய மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.

பள்ளிப் புத்தகங்களில் பிழை திருத்தும் பணி தொடக்கம்

அடுத்த கல்வியாண்டின் (2014-15) முதல்
பருவத்துக்கான புத்தகங்களில் பிழை திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடக்குமா ? கானல் நீராகுமா?

தொடக்கக் கல்வி துறையில் கடந்த 2013
மே ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது .

ஆசிரியர் தகுதித்தேர்வும் சலுகைகளும்

இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கான சுதந்திரப் பிரகடனமாக, இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் ஆகஸ்டு 26, 2009இல் நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது.

10ம் வகுப்பு புத்தகம் அச்சடிப்பதில் குழப்பம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்
தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேறினாலும் 15 ஆண்டுகள் கழித்தே வேலைவாய்ப்பு : புலம்பும் ஆசிரியர்கள்

"தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற
இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013-14க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது 15 ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும்
என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Monday, February 10, 2014

மாவட்ட ஆட்சியரை கண்டித்து, தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் தர்ணா போராட்டம்

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தொடக்க, நடுநிலை பள்ளி மாணவ - மாணவியருக்கு சரியாக எழுதவும் படிக்கவும் தெரியவில்லை - தினமணி

கடந்த ஆண்டிற்கான (2013) "ஆசர்' கருத்துத்திரட்டல் (சர்வே), இந்தியாவின் 550 மாவட்டங்களில் உள்ள 16,000 கிராமங்களைச் சேர்ந்த 3.3 லட்சம் குடும்பங்களில் ஆறு லட்சத்திற்கும்
அதிகமான குழந்தைகளிடம் நேரடியாகத்
தொடர்பு கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் உச்ச நீதி மன்றத்தில் SLP போட முயற்சி

சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் இரட்டைப்பட்டம் வழக்கு தள்ளுபடியானதால் 

டிஇடி வெயிட்டேஜ் மதிப்பெண் : திறமைசாலிகளுக்கு பாதிப்பு, பட்டதாரிகள் கடும் அதிருப்தி

டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்களால் திறமை மிகுந்த
பட்டதாரிகள் அதிகளவு பாதிக்கப்படுவதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடக்கக்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும்
பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு 50% இடங்கள் ஒதுக்க வேண்டும்

31,306 to write Plus Two exam in Tiruchi district

A total of 31,306 students in the district (which includes 13,582 boys and 17,724 girls) will be appearing for the class 12 board examinations in March this year.

பள்ளி மாணவர்களுக்கு பயன்படாத இலவச "அட்லஸ்'

ஆசிரியர்களிடம் ஆர்வம் இல்லாததால்,
பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக
வழங்கப்பட்ட நில வரைப்பட நூல் (அட்லஸ்) பயன்படுத்தப்படாமல் உள்ளது.

பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு கையேடு : புதிய சட்டப்படி தண்டனை விவரம் வெளியீடு

தமிழக பள்ளி, கல்லூரிகளில், பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய சட்டப்படி, குற்றங்களுக்கான தண்டனை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பட்ஜெட்: பள்ளிக் கல்விக்கென 19 ஆயிரம் கோடி ஒதுக்க அரசு முடிவு, மாணவர்களுக்கு இலவச சயின்டிபிக் கால்குலேட்டர்

மாணவர்களுக்கு இலவச சயின்டிபிக்
கால்கு லேட்டர் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

u/s 87 A வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம் 5 லட்சம் என்பது மொத்த வருமானம் அல்ல, வரிக்குட்பட்ட வருமானமே

இது அரசின் அதிகார்பூர்வ
வருமானவரித்துறை வலைதளத்தில்  income tax calculator வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வடிவமைப்பில் பிளஸ் 2 விடைத்தாள் அச்சடிப்பு பணி தீவிரம்

பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்க
உள்ளது. இந்த ஆண்டு சுமார் 8 லட்சம்
மாணவ மாணவியர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டைப்பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது

இரட்டைப்பட்டம் செல்லாது எனவும்,
பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது

புதிய வடிவமைப்பில் பிளஸ் 2 விடைத்தாள் அச்சடிப்பு பணி தீவிரம்

பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம்தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு சுமார் 8 லட்சம் மாணவ மாணவியர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி: பணியில் சேர மே மாத இறுதியில் நியமன ஆணை வழங்க வேண்டும் முதல்- அமைச்சருக்கு கோரிக்கை!

ஆசிரியர் தகுதி தேர்வில் தனியார்
பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில்
தேர்ச்சி பெற்று உள்ளதால், பணியில்
சேருவதற்கான நியமன ஆணை மற்றும்
பணியில் சேரும் காலத்தை மே மாத
இறுதியில் இருக்கும் வகையில்
நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று முதல் - அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

10ம் வகுப்பில் முப்பருவ முறை வரும் : பொதுத் தேர்வு ரத்தாகுமா?

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் அடுத்த
ஆண்டு முதல் முப்பருவமுறை (ட்ரைமஸ்டர்) வருகிறது.

ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும்
வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: "தத்கல்' திட்டம் எப்போது?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, முறையே, மார்ச் 3 மற்றும் மார்ச் 26ம் தேதி துவங்குகின்றன. இதற்கு,
தனித் தேர்வாக எழுத விண்ணப்பிக்க
தவறிய, மாணவ, மாணவியருக்கான,
"தத்கல்' திட்ட அறிவிப்பு இன்னும்?
வெளியாகவில்லை. இதற்கு, வழக்கமான
தேர்வு கட்டணத்துடன்,
சிறப்பு கட்டணமாக, 1,000 ரூபாய்
செலுத்த வேண்டும். விண்ணப்பம்
சமர்ப்பித்த உடன், "ஹால் டிக்கெட்'
வழங்கப்படும். ""இதுகுறித்த அறிவிப்பு,
விரைவில் வெளியாகும்,'' என,தேர்வுத்
துறை இயக்குனர், தேவராஜன்,
நேற்று தெரிவித்தார்.

பொதுத் தேர்வு பதிவெண் ஒதுக்கீட்டில் மாற்றம் : தொடருது தேர்வுத் துறையின்"புதுமை'

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வது மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை 82 என நிர்ணயித்துள்ளதால் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத
மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவரை போல், ஆசிரியர்களை நிற்க வைத்து தண்டனை : தேர்வுத் துறை தடாலடி நடவடிக்கை

பொதுத்தேர்வு எழுதும் மாணவ,
மாணவியர் விபரங்களை சரிவர
பூர்த்தி செய்யாத ஆசிரியர் மற்றும்
தலைமை ஆசிரியர்களை, நேற்று,
இயக்குனரகத்திற்கு வரவழைத்து, நீண்ட
நேரம் நிற்க வைத்து, தேர்வுத் துறை,
தண்டனை அளித்தது.

பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் தலைமை ஆசிரியர்கள் கலக்கம்

"லேப்டாப்' திருடுபோன, பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

உண்மை தன்மை அறியும் சான்று கிடைப்பதில் கால தாமதம் : அரசு பணியாளர்கள் தவிப்பு

அரசு பணியில்சேர்பவர்களின், கல்விச் சான்றிதழ்கள், உண்மை தன்மை அறிதலுக்காக, சம்பந்தப்பட்ட
பல்கலைகளுக்கு, அனுப்பப்படும் போது, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் வராலாறு பாடத்துக்கான தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியல் வாபஸ்

முதுகலை ஆசிரியர் வராலாறு பாடத்துக்கான தமிழ் வழி இட ஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள்
பட்டியலை டிஆர்பி வாபஸ் பெற்றுள்ளது. கடந்த 3 ஆம்
தேதி 2011-12 ஆண்டுக்கான
வரலாறு,வணிகவியல்,பொருளாதர பாடத்துக்கான
முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான
தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில்
வராலாறு பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி வாபஸ்
பெற்றுள்ளது.
இதுகுறித்து டிஆர்பி தனது இணையதளத்தில் RESULT
FOR TAMIL MEDIUM HISTORY IS WITHDRAWN FOR
COMPUTER VERIFICATION. என தெரிவித்துள்ளது.
உரிய கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற சிலரது பெயர்
விடுபட்டதே அதற்கு காரணம் என தகவல்கள்
தெரிவிக்கின்றன.எனவே அது சரிசெய்யப்பட்டு புதிய
பட்டியல் வெளியிடப்படும் என தெரிவருகின்றது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும்
தங்களுக்கு அரசு விரைவில் பணி நியமனம்
வழங்கவேண்டும் என தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான
தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர

செய்முறை தேர்வு: பிப்., 28க்குள் ஆன்-லைனில் மதிப்பெண் பதிய உத்தரவு

பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண்களை, பிப்.,28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வில் பிட் அடித்தால் மாணவர்கள் 2 ஆண்டு பரீட்சை எழுத முடியாது: தேர்வுத் துறை முடிவு

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 25ம்
தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் இந்த தேர்வை சிறப்பாக
நடத்துவது குறித்து மாவட்ட அளவிலான
ஆய்வு அலுவலர்கள் கூட்டம் நடந்தது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது

தகுதித்தேர்வு மதிப்பெண் உள் ளிட்ட
வெயிட்டேஜ் மார்க் முறையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களை தேர்வு
செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால்
வயதில் மூத்தவர்களுக்கு முன்னு ரிமை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

ஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண்
பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக
அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமி
ழக அரசு. ஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத
மதிப்பெண் சலுகை -ஆசிரியர் தகுதித்
தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்,
பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்
(முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்
ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண்
பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என
அறிவிக்கப்படுவார்கள். இந்தச்
சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம்
ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும்
பொருந்தும்" என்று தமிழக முதல்வர் ஜெ..
அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண்
பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக
அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமி
ழக அரசு.

நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிப் பண்ணைகள்! வதைபடும் மாணவர்கள்

இந்தப் பக்கம் கோழிப் பண்ணைகள்...
அந்தப் பக்கம் தனியார் பள்ளிகள்...
இவை இரண்டும்தான் நாமக்கல்
மாவட்டத்தின் இரு பெரும் வர்த்தக
மையங்கள்!

இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போதைய நிலையே தொடர வழக்கு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள
3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப தமிழக
அரசு முடிவு செய்தது.

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதியானவர்களுக்கு பிப்.24ல் பணி நியமன உத்தரவு?

ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுடன், தற்போது மதிப்பெண்
சலுகை மூலம் புதிய பட்டியலில் இடம் பிடிப்பவர்களின் சான்றிதழ்களும் அடுத்த
இரு வாரங்களுக்குள் சரிபார்க்கப்பட்டு முடிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின்
இறுதி தீர்ப்பு இன்று காலை சற்று முன் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு கோரிய வழக்குகள் தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள்
எம்.பழனி முத்து, ஏ.ரமேஷ் உள்பட
பலர் தாக்கல் செய்துள்ள பொதுநல
மனுவில் கூறியிருப்பதாவது:–

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவு

இன்று சென்னை
உயர்நீதிமன்றத்தில்
தலைமை நீதியரசர்
திரு.ராஜேஸ்குமார் அகர்வால்
மற்றும் நீதியரசர்
திரு.சத்தியநாரயணன் அடங்கிய
முதன்மை அமர்வில் முதல் வழக்காக
வந்த இரட்டைப்பட்டம்
வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால்
முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின்
ரிட் அப்பீல்
தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற
தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த
ஒருங்கிணைப்பாளர்கள், அரசின்
எதிர் மனு தாக்கலால் இந்த
முடிவு ஏற்கனவே
எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என
சமாதானம் அடைந்தனர்.
எனினும் வழக்கில்
வெற்றியடைவதே நோக்கம் என்ற
குறிக்கோளுடன் உடனடியாக
உச்சநீதிமன்றத்தில் வரும்
வாரத்தில் சிறப்பு விடுப்பு
மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு: அதிருப்தியில் கல்வி அலுவலர்கள்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில், இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட
கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு, பல
மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதால்,
கல்வி அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.

பி.எட்., எம்.எட். தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியீடு!

2013 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த பி.எட்.,
எம்.எட்., துணைத் தேர்வு முடிவுகள்
புதன்கிழமை வெளியிடப்படுகிறது.

ஏழாவது ஊதியக்குழு உறுப்பினர் நியமனத்துக்கு பிரதமர் ஒப்புதல்

ஏழாவது ஊதிய குழு உறுப்பினர்கள்
நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங்
ஒப்புதல் தந்துள்ளார்.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்
மேல்முறையீட்டு வழக்கு திங்களன்று (03.02.2014 ) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள்சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு 91 வது வழக்காக இடம் பெற்றிருந்தது.

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கில்
தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டிஇடி சான்று சரிபார்ப்பில் 300 பேர் ஆப்செண்ட்!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட
சான்று சரிபார்ப்பில் 300 பேர்
கலந்துகொள்ளவில்லை.

டி.இ.டி., தேர்வில் கூடுதலாக 30 ஆயிரம் பேர் தேர்ச்சி, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்

டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்
சலுகை அளிக்கப்பட்டுள்ளதால்,
தோல்வி அடைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவர் என டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை: முதல்வருக்கு நன்றி!

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை :முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்த தயாரகின்றது டிஆர்பி?

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடுவதில் சிக்கல்

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010க்கு முன்பு ஆசிரியர் தகுதித்
தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்களின்
விவரம் உடனடியாக அனுப்ப தொடக்கக்
கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Monday, February 03, 2014

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் புலம் பெயர்ந்த குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி, தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விரைவில் மாறும்: சட்டசபையில் ஜெயலலிதா உறுதி

சட்டசபையில் இன்று கவர்ன உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடந்த
விவாதத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார்.

மத்திய அரசு ஊழியர்களைபோல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுமா ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு, மீண்டும்
அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 % ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை: முதல் அமைச்சர் ஜெயலலிதா

கவர்னர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர்
ஜெயலலிதா,மருத்துவர் நியமனத்தில்
இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது

ஆறு மாதங்களில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 'லக்': அகவிலைப்படியை தேர்தலுக்கு முன் உயர்த்த முடிவு

மத்திய அரசு ஊழியர்களுக்கான,
அகவிலைப்படி உயர்வு, அடுத்த மாதம்
அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பணி பதிவேடு: இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் தொடங்க திட்டம்

ஆசிரியர்களின் ஜாதகமாக விளங்குவது அவர்களின் பணி பதிவேடு எனப்படும் சர்வீஸ் ரெஜிஸ்டர் ஆகும்.

பள்ளி கட்டண நிர்ணயக் குழுவின் உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு அரசுக்கு நோட்டீஸ்

பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டண உத்தரவை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி திருச்சியில் ஆசிரியர்கள் ஊர்வலம்

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யவேண்டும், புதிய ஓய்வூதிய
திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய
ஓய்வூதிய திட்டத்தை