ஆசிரியர் தகுதித்தேர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் பெறதகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் 5 ஆண்டிற்குள்
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பின்
போது தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் கடந்த டிசம்பரில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தின்போதே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என புதிய
அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம்
செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் நிரந்தரம்
இல்லாமல் பணியாற்றி வந்த சுமார் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
பணிக்கு செல்வதை நிறுத்தினர்.
அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம்
செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் நிரந்தரம்
இல்லாமல் பணியாற்றி வந்த சுமார் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
பணிக்கு செல்வதை நிறுத்தினர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்டில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு தற்போது முடிவு
வெளியடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் சுமார் 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம்
உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய தேர்வு முடிவில்
இதே அளவிலேயே தேர்ச்சி விகிதம் இருப்பதால் இவர்கள் அரசு பள்ளிகளிலேயே நியமனம்
செய்யப்படுவர். இதனால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர்
பணிக்கு செல்ல முடியும் என்பதால்
தேர்ச்சியடைந்தோர் அரசு பள்ளிகளிலேயே பணிபுரிய விரும்புவர்.
வெளியடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் சுமார் 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம்
உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய தேர்வு முடிவில்
இதே அளவிலேயே தேர்ச்சி விகிதம் இருப்பதால் இவர்கள் அரசு பள்ளிகளிலேயே நியமனம்
செய்யப்படுவர். இதனால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர்
பணிக்கு செல்ல முடியும் என்பதால்
தேர்ச்சியடைந்தோர் அரசு பள்ளிகளிலேயே பணிபுரிய விரும்புவர்.
அரசு உதவிபெறும்
பள்ளிகளுக்கு செல்வார்களா என்பது கேள்விக்குறியே.
இதனால் இப்பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பள்ளிகளுக்கு செல்வார்களா என்பது கேள்விக்குறியே.
இதனால் இப்பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்பு அறிவித்தது போல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்று 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும் என்பதை மீண்டும் நடைமுறைப்படுத்த
வேண்டும் என்றனர்.
வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment