ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை: கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்

தமிழகத்தில், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பல லட்ச ரூபாய் செலவு செய்து, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

தேர்வு எழுதுவோர் விவரம் அடுத்த வாரம் வெளியாகிறது

பொது தேர்வு எழுதுவோர் விவரங்களை, அடுத்த வாரம் வெளியிட, தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 3ல் துவங்கி, 26 வரையிலும், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் துவங்கி, ஏப்ரல், 9 வரையிலும் நடக்கிறது.

இரு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

மதுரை மாநகர மாவட்டக் கல்வி அலுவலர் திரு.மதியழகன் அவர்கள்   காஞ்சிபுரம் அகஇ மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Monday, December 30, 2013

115 ஆசிரியர் பயிற்றுனர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல்; கலந்தாய்வு அறிவிப்பு

அனவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 115 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுவர்   என அரசு ஆணை 249-ல் தெரிவித்தபடி நாளை 2 மணிக்கு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் அவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அறிவித்துள்ளார்.

பி.எப். வட்டி உயருமா? ஜனவரி 13ல் தெரியும்!

தொழிலாளர்களின் பிஎப் தொகைக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களுக்குள் இலவசமாக பேசிக்கொள்ள ஏர்செல் நிறுவனத்தின் Teachers CUG திட்டம் அறிமுகம்

தமிழ்நாடு கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களுக்குள்
இலவசமாக பேசிக்கொள்ள ஏர்செல்
நிறுவனத்தின் Teachers CUG திட்டம் அறிமுகம் இத்திட்டத்தை வழங்குபவர்கள்:
Kaveri Communications, Trichy. 

பள்ளியில் பாலியல் கல்வி அறிமுகம்: நீதிபதி கவலை

உயர்நிலைப் பள்ளிகளில் பாலியல்
கல்வியை அறிமுகப்படுத்துவது
குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும் செயல் என ஆந்திர ஐகோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு

பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காக, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை சி.டி.,களில் பதிவு செய்து வருகின்றனர்.

முதுநிலை தமிழாசிரியர் சான்றிதழ் சரிபார்த்தல் இன்று தொடக்கம்

அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான
சான்றிதழ் சரிபார்த்தல்  இன்றும் நாளையும் நடக்கிறது.

உயர் தொடக்க வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு """" அறிவோம் அகிலத்தை"" என்ற புவியியல் வரைபடத்திறன் (Map reading Skill Training) பயிற்சி

உயர் தொடக்க வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு  "அறிவோம் அகிலத்தை" என்ற புவியியல் வரைபடத்திறன் (Map reading Skill Training) மாநில, மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான தேதிகள் அறிவிப்பு

நெட்' தேர்வு: 15 ஆயிரம் பேர் பங்கேற்பு

கல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப்பேராசிரியர்
பணியிடத்துக்கான, யு.ஜி.சி.,யின்
தேசிய தகுதித் தேர்வு (நெட்)
நேற்று நடந்தது.

குரூப் - 1 தேர்வு ஏப்., 26ம் தேதி நடக்கிறது

டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி.,
குருப் 1 முதல்நிலை தேர்வு, ஏப்., 26ம்
தேதி நடக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. | Deputy Collector -
3,Deputy Superintendent of Police - 33, Assistant Commissioner - 33, Assistant Director of Rural Development Department - 10 Applications are invited only through online mode upto 28.01.2014.

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது

வேலூரில், ஒரு லட்ச ரூபாய் லஞ்சம்
வாங்கிய, உடற்கல்வி ஆசிரியர்
கைது செய்யப்பட்டார்.

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு புரமோஷன்

முதுகலை ஆசிரியராக, 733
பேருக்கு, நேற்று நடந்த கலந்தாய்வில்,
பதவி உயர்வு, உத்தரவுகள் வழங்கப்பட்டன.

தனியார் பள்ளிகளின் விதிமீறலை தடுக்க பிளஸ்1வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை

'தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1
வகுப்பில், முழுக்க முழுக்க, பிளஸ்2
பாடத்தையே நடத்துகின்றன.

Saturday, December 28, 2013

பிளஸ்2, பத்தாம்வகுப்பு பொதுதேர்வுகளில் முறைகேட்டினை தடுக்க புதிய வியூகம் வகுக்கும் தேர்வுத்துறை

இதுவரையிலான தமிழக கல்வித்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவில் இம்முறை தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் முயற்சியாக பொது தேர்வுகளுக்குரிய கண்காணிப்பாளர்கள், பறக்கும்படையினரை பள்ளிக்கல்வி
இயக்குநர்கள் நேரடியாக சென்னையில் இருந்தே நியமனம் செய்ய உள்ளனர்.

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை

"நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில்
பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்" என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது.

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும்
அரசு உயரதிகாரி வரை அனைவரும்
பணியின்போது கட்டாயம் அடையாள
அட்டை அணிந்திருக்க வேண்டும்
என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு 54 ஆயிரம் அங்கன்வாடிகளுக்கு ரூ .15 கோடியில் கல்வி உபகரணம்

தமிழகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி திட்டத்துக்கு கூடுதல் நிதிப்

மத்திய அரசின் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது.  

பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்

உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க,
கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

500 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை

500 நடுநிலைப்பள்ளிகளை,
உயர்நிலைப்பள்ளிகளாக தரம்
உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது.

Friday, December 27, 2013

பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்

வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில்
நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களுக்கு
முதற்கட்டமாக சென்னையில் இன்று பயிற்சி தொடங்குகிறது.

பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேர்வு பயம், பாலியல் சந்தேகங்களை போக்க நடமாடும் மன நல ஆலோசகர் குழு மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் பேர்களுக்கு ஆலோசனை வழங்க திட்டம்

பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வு பயம்,
பாலியல் பிரச்சினைகளை தீர்த்து வைத்து மாணவர்கள் நல்ல மனத்துடன் பள்ளிக்கு வர நடமாடும் வேன்களில் மன நல ஆலோசகர்கள் சென்று வருகிறார்கள்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: 49 ஆயிரம் மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்குவதில் தாமதம்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகம்
முழுவதும் இந்தக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 49 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை.

பட்டதாரி ஆசிரியருக்கு நாளை கவுன்சிலிங்

பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு,
பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது.

கணிதம், அறிவியலில் மாணவர்கள் தோல்வி : ஆசிரியர்களுக்கு ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் பாடம்

மகாராஷ்டிர மாநில, கிராமப்புற
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில்,
பெரும்பான்மையினர், கணிதம் மற்றும்
அறிவியல் பாடங்களில், மிகக் குறைவான
மதிப்பெண் பெறுவதால்,

Thursday, December 26, 2013

மாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை

"பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்" என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

துணை கலெக்டர் உள்ளிட்ட 79 பணிகளுக்கானகுரூப்-1 தேர்வு: இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு

துணை கலெக்டர் உள்ளிட்ட 79  பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வுக்கான
அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கும் என்று தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

"ஆவரேஜ்" உற்பத்தி மையங்களாகும் அரசுப் பள்ளிகள்!

ஆசிரியர்கள் கலந்தாலோசனைக் கூட்டம். பத்தாம் வகுப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை எப்படி முன்னேற்றுவது என்பதைப்பற்றிய கூட்டம் அது.

136 பின்னடைவு காலியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்

பள்ளிக் கல்வித்துறையில் 136
பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு அனுப்பியுள்ளது.

அரசு பொதுத்தேர்வுகளில் முறைகேட்டினை தடுக்க தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ்டூ அரசு பொதுத்தேர்வுகளில்
முறைகேடுகளை தவிர்க்க
கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு எழுதுவோர் பட்டியல் 27க்குள் அனுப்ப உத்தரவு

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பற்றிய பட்டியல்களை 27ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தேர்வுத்
துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.

1.36 கோடி இலவச பாட புத்தகம்: ஜன.2ல் பள்ளிகளில் வினியோகம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க அச்சிட்ட 1 கோடியே 36 லட்சம் பாட புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வந்து சேர்ந்தன.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.2முதல் செய்முறை பயிற்சி வகுப்புதொடக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் அறிவியல் பாடப் பிரிவை படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு உண்டு.

தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் சரிபார்ப்பு

தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களால் அரசுத் தேர்வுகள்
இயக்ககத்திற்கு ஏற்கெனவே ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டது.

1,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரை :சென்னையில் 75 பள்ளிகளுக்கு சிக்கல்?

'உரிய இடவசதி இல்லாத, 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி,
தொடர்ந்து இயங்க, நடவடிக்கை எடுக்கலாம்' என தமிழக அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர்
குழு அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

'சர்பிளஸ்' ஆசிரியர்கள் பணி நிரவல்- ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்!

'சர்பிளஸ்' ஆசிரியர்கள் பணி நிரவல்-
ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்
தமிழகத்தில் அரசு உதவி பெறும்
உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில்
"சர்பிளஸ்'ஆசிரியர்களை கணக்கெடுத்து,
அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித்
துறை நடவடிக்கை எடுக்கிறது.

முறைகேட்டை தடுக்கும் பார்கோடு விடைத்தாள் அறிமுகம்

தேர்வின்போது மாணவர்களோ,விடைத்தாள்
திருத்தும்போது ஆசிரியர்களோ முறைகேடு செய்வதை தடுக்க
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்
தேர்வுகளில் ரகசிய “பார்கோடு” கொண்ட
விடைத்தாள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தீர்வு! குழந்தைகள் தொடர்பான பிரச்னைக்கு பள்ளிகளில் பாதுகாப்பு ஆலோசனை பெட்டி

அரசு,அரசு உதவி பெறும் மற்றும்
மாநகராட்சிப் பள்ளிகளில் ஜன., முதல்,
குழந்தைகள் தொடர்பான
பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில்,
பாதுகாப்பு ஆலோசனை பெட்டி வைக்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தலைமை ஆசிரியர்களே பொறுப்பு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை!

பள்ளியில் பயிலும் மாணவர்களின்
பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப
தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள
வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்,' என
பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

வடமாநிலங்களில் கடும் குளிர் : உ.பி.,யில் பள்ளிகளுக்கு லீவு

வடமாநிலங்களில், கடும் குளிர் நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வுக்கு ஆன்லைன்னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்கு வாய்ப்பு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின்
பெயர் பட்டியலை "ஆன்லைன்' மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., பதவிக்கு எழுத்துத்தேர்வு கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ்.,
நியமனம் பெற, அதிகாரிகள் கட்டாயம்
எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாலை நேர சிறப்பு வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும்: பள்ளி கல்வி துறை உத்தரவு!

பொதுத் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி சதவீதம் எட்ட வேண்டும் என்பதற்காக மாலை நேர சிறப்பு வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்: பல லட்சம் கொட்டியும் பந்தாட்டமா?

தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் "சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கெடுத்து,
அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித்
துறை நடவடிக்கை எடுக்கிறது.

ஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் முடிவுகள் வெளியீடு!

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகிறது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான
மதிப்பெண் பட்டியலை வழங்க,
தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் எல்லா வகுப்பு மாணவருக்கும் ஒரே அறையில் பாடம்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே அறையில் பாடம் நடத்தப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பள்ளிகளுக்கு இடையே வகுப்பறை கல்வி இணைப்புத் திட்டம் செயலாக்கம்

பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவியை மாற்றி தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் ஆபீஸுக்கு ஆம்புலன்ஸில் வந்து "டிரான்ஸ்பர்' கேட்ட ஆசிரியை!

மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கோரி, பெண் ஆசிரியை ஒருவர்,
ஆம்புலன்ஸில் வந்து திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தார்.

உதவி பேராசிரியர்கள் நியமனம்: ரத்து கோரி ஐகோர்ட்டில் வழக்கு

'அரசு கலைக் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில், 'நெட்'
தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், குறைந்த மதிப்பெண் வழங்குகிறது.

தொலைதூர, திறந்தநிலை கல்விக்கான யு.ஜி.சி.,யின் புதிய வரைவு விதிமுறை

தொலைதூரக் கல்வி கவுன்சில் கலைக்கப்பட்ட பின்னர், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைதூரக் கல்வி நடைமுறையை கட்டுப்படுத்த ஒரு வரைவு விதிமுறையை யு.ஜி.சி. உருவாக்கியுள்ளது.

முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில்
காணலாம்.

அனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கு பிரிட்டிஷ் நிதி நிறுத்தம்!

இந்தியாவின் பிரதான கல்வித் திட்டமான சர்வ சிக்ஷா அப்யானுக்கு பிரிட்டிஷ் அரசு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.2370 கோடி உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

"கற்றலில் பின்தங்கியமாணவர்களை உளவியல்ரீதியாக அணுக வேண்டும்"

"ஆக்கப்பூர்வமான தலைமுறையை உருவாக்க வேண்டுமெனில் கற்றலில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து, உளவியல் ரீதியாக அணுகுவதே சிறந்த வழி" என, உளவியல் மருத்துவ நிபுணர் ரன்தீப் ராஜ்குமார் தெரிவித்தார்.

அரசுப்பள்ளிகளில்அரைகுறையாய்அறிமுகப்படுத்தப்படும்ஆங்கிலவழி, ஏழைத் தமிழ்மாணவர்களின்பரிதாப நிலை

நடப்புக் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் முதல்வகுப்பில்
ஆங்கிலவழி தொடங்கப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டு முதல்பத்தாம் வகுப்புக்கும்முப்பருவ கல்விமுறை?

தமிழகத்தில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் 1000பேருக்கு பதவி உயர்வு

பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும்,
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறலாம்.

கல்லூரி ஆசிரியர்களுக்கான ‘‘நெட்’’ என்றதகுதித்தேர்வு 2 லட்சம் பேர் எழுதினார்கள்

பல்கலைக்கழக மானியக்குழுவும், அறிவியல் மற்றும் தொழில்
ஆராய்ச்சி குழுவும் சேர்ந்து இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும்
உதவி பேராசிரியர்களை பணிஅமர்த்துவதற்கான தகுதித்தேர்வு (சிஎஸ்ஐஆர்–நெட்) அகில இந்திய அளவில் நேற்று நடைபெற்றது.

எழுத, படிக்க திணறும்மாணவர்களை மேம்படுத்தும் திட்டம்

ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியிலான பாட புத்தகங்களை, சரளமாக படித்தல், எழுதுதல் ஆகியவற்றில், மிகவும் பின் தங்கியுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த, வரும் கல்வி ஆண்டில்,
புதிய திட்டத்தை செயல்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், முடிவு செய்துள்ளது.

பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறுகள்:தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதிர்ச்சி!

பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகத்தில், பல்வேறு தவறு உள்ளதால், மருத்துவத் துறைக்கு செல்லும் கனவோடு படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும், மார்ச் மாதம், பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது.

தமிழக அரசு உத்தரவு பள்ளிவளாகங்களில் புகைபிடிக்கதடை

பள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அருகே பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர்காலியிடம்: பிளஸ் 2 மாணவர்கள்பாதிப்பு

அரசு பள்ளிகளில் 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அரசு பொதுதேர்விற்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விரைவுரையாளர் தகுதி தேர்வு:திருச்சியில் 29ம்தேதி நடக்கிறது - 10 மையங்கள்அறிவிப்பு

பல்கலைக்கழக நிதிநல்கை குழுவினரால் (யூஜிசி) இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தகுதித் தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது.

இப்போதைக்கு டி.இ.டி.,முதுகலை ஆசிரியர்தேர்வு இறுதி பட்டியல் வரவாய்ப்பில்லை

ஜூலையில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி, இன்று வரை,முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகள் தவறாக
கேட்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இதனால், தமிழ் பாடத்தின், தேர்வு முடிவை வெளியிட,கோர்ட்
தடை விதித்தது.

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: விருப்பம்தெரிவித்தால் மாற்ற இயலாது:கல்வித்துறை உத்தரவு

உயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கு,
விருப்பம் தெரிவித்து விட்டு, அதை மாற்ற கூடாது, என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் 'கனெக்டிங் கிளாஸ் ரூம்':முதல்கட்ட நடவடிக்கை துவக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும், 'கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கை துவங்கி உள்ளது.

முடிவுகளை வெளியிட முடியாமல்ஆசிரியர் தேர்வு வாரியம் தவிப்பு:ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக180 வழக்குகள் தாக்கல்

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, சென்னை, உயர்நீதிமன்றத்தில், 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து, புலம்பி வருகிறது.

Saturday, December 21, 2013

சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு - கடந்தாண்டை விட, இந்தாண்டு 800 பள்ளிகள் அதிகம்!

2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள CBSE பொதுத்தேர்வுகளை, இதுவரை இல்லாத வகையில், அதிக மாணவர்கள் எழுதவுள்ளனர்.

மதிப்பெண் மட்டும் போதுமா? அரசுப் பள்ளிகள் Vs தனியார் பள்ளிகள

தனியார் பள்ளிகள் எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நாங்கள்தான் தரமான கல்வியைத் தருகிறோம் என்று விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன.

சிவில் சர்வீஸ் தேர்வை வெல்ல நினைப்பவர்களுக்கு யு. பி.எஸ்.சி தலைவர் அறிவுரை

சிவில் சர்வீஸ் பணிக்கான
முயற்சிகளைத் தொடங்கும் முன்னதாக,
நமது கலாச்சாரம், சமூகம் மற்றும்
மொழியை மதித்து, நமது நாட்டைப்
பற்றி நன்றாக அறிந்துகொள்வது முக்கியம் என்று UPSC தலைவர் டி.பி.அகர்வால் கூறியுள்ளார்.

ஆங்கில மோகம் - கிராமப் பள்ளிகள் பாதிப்பு

தெருவெங்கும் நர்சரி, மெட்ரிக்
பள்ளிகள் பெருகியுள்ள நிலையில்
தமிழ்வழிக் கல்வியைப் போதிக்கும்
பள்ளிகள், விரைவில் மூடப்பட வேண்டிய
சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தேசிய நல்லாசிரியர் விருது: தேர்வுக் குழுவுக்கு "கிடுக்கிபிடி"

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யும் தேர்வுக் குழு மற்றும்
ஆசிரியர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது சதவிகித அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலை?

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம்
வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான
மாணவ, மாணவியருக்கு முட்டையுடன் சத்துணவு, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவசச் சீருடைகள், இலவச
நோட்டுப் புத்தகங்கள், இலவசப் பாட நூல்கள், தேர்வுக் கட்டணம்
செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு.

குரூப் 4 தேர்வு ரிசல்ட் விரைவில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன்

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 பணியில் 5,566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது.

‘அட்மிஷன்’ பதற்றம் அதற்குள் ஆரம்பம்!

புதிய கல்வியாண்டு வருகிறதென்றால்
கூடவே பெற்றோர்களுக்குப்
பதற்றங்களும் வந்துவிடும்.

ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை தர வேண்டும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

உயர் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்
காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு
முன்னுரிமை அளிக்க வேண்டும் என
குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜி வலியுறுத்தினார்.

ஒரே வளாகத்தில் இயங்கும் 3 அரசு பள்ளிகள்: உபரி பணியிடத்தால் அரசு பணம் விரயம்

சேலம் மாநகராட்சி, பரமகுடி நன்னுசாமி தெருவில், ஒரே வளாகத்தில், இரண்டு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி,
நான்கு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில் புதிய தேர்வு மையம்: தேர்வுத்துறைக்கு பரிந்துரை

சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில், புதிதாக 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் அமைக்க,
தேர்வுத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் தேர்வு முடிவு: 23ம் தேதி வெளியீடு!

பாலிடெக்னிக் பட்டயத் தேர்வு முடிவு, 23ம் தேதி வெளியாகிறது.

ஆங்கில பொது தேர்வுக்கு விடுமுறை இல்லையா? மாணவர்கள் புகார்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுக்கு மட்டும்
விடுமுறை அளிக்கப்படாததால்,
பள்ளி கல்வித் துறைக்கு, மாணவர்கள்
புகார் அனுப்பியுள்ளனர்.

அனைவருக்கும் கல்வித்திட்டத்துக்கு முழுக்கா? பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பேட்டி

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, ( எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன்
இணைப்பது குறித்து, எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை' என, பள்ளிக்கல்வித்துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தேர்வு நடத்த உத்தரவு

தமிழகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், தனித் தகுதி தேர்வு நடத்தி,
பணி அமர்த்த, தமிழக அரசு,
உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களே இல்லாத ஒன்றிய பள்ளி: தலைமை ஆசிரியை மட்டுமே வரும் அவலம்

விருதுநகர் மாவட்டம்
ராஜபாளைய அருகே உள்ள ஒன்றிய துவக்கப்பள்ளி, ஒரு மாணவர் கூட இல்லாமல் செயல்படுகிறது.

பொதுத்தேர்வில் நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்: கலெக்டர் தட்சிணாமூர்த்தி வேண்டுகோள்

நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 
12 –ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கும் சுமார் 2200 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கான புத்தாக்க
பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது.

தொழில் வரி இந்த அரையாண்டு முதல் உயர்வு

தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், (அக்.,1) முதல் தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

காணொலி படக்காட்சியில் பாடம் கற்பித்தல்: முதல்கட்டமாக 9 பள்ளிகளில் அறிமுகம்

திருப்பூரில் அரசு பள்ளிகளில், இணைய தளம் மூலம் வகுப்பறைகளை இணைத்து கம்ப்யூட்டரில் பாடம் நடத்தும் "காணொலி' படக்காட்சி திட்டம் விரைவில் அறிமுகமாகிறது. முதல் கட்டமாக, ஒன்பது பள்ளிகளில், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.

ரூ.30 கோடிக்கு, புத்தகங்கள் கொள்முதல் : நூலகத்துறை அறிவிப்பு

பொது நூலகத் துறை, 30 கோடி ரூபாய்க்கு, தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை, வாங்க உள்ளது. "இதற்கு, ஜன., 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் (கூடுதல் பொறுப்பு நூலகத் துறை) அறிவித்துள்ளார்.

7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்திய அரசு ஜரூர்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது.

ஆங்கிலம் கற்பித்தலில் புது சாதனை:திருச்சி ஆசிரியருக்கு தேசிய விருது

தொடர்ந்து, 18 ஆண்டுகள் ஆங்கிலத்தில், நூறு சதவீத தேர்ச்சி பெற்றுத்தந்த திருச்சி ஆசிரியருக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.
சர்வதேச அளவில் புத்தங்களை வெளியிடும் பியர்சன் என்ற கல்வி நிறுவனம், ஆண்டுதோறும் இந்தியாவில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து,
அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

நேரடியாக விண்ணப்பம் பெறக்கூடாது நல்லாசிரியர்விருதுக்கு தேர்வு செய்ய குழு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்டம் தோறும் தேர்வுக்குழு அமைத்து வரும் 31ம் தேதிக்குள் தேர்வு செய்த ஆசிரியர் விபரங்களை அனுப்பி வைக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு : ஏப்ரல் 2ம்வாரத்துக்குள் முடிக்க நடவடிக்கை

லோக்சபா தேர்தலை, ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதால், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல் இரண்டாவது வாரத்துக்குள் முடித்து விட, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்துவது தொடர்பான அரசாணையை தமிழகஅரசு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) வெளியீடு

இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும் பார்வையற்றவர்களுக்கும்,
அவர்களது உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக ரூ. 2
கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில்பதவி உயர்வு

தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாள்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என தகவலறிந்த  வட்டாரங்கள் தெரிவித்தன.

முதுகலை தமிழ் ஆசிரியர்தேர்வு முடிவு வெளியாவதில் மீண்டும் சிக்கல்!

முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில், மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,891 முதுகலை ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப, ஜூலையில், போட்டித் தேர்வு நடந்தது.

பள்ளிகளில் சைபர் குற்றங்கள் தடுப்பு பாடப்பிரிவு: உளவுத்துறை ஐ.ஜி., வலியுறுத்தல்

"சைபர் குற்றங்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை கட்டுப்படுத்த, பள்ளிகளில், சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த, பாடப்பிரிவுகளை அமல்படுத்துவது அவசியம்,''
என, தமிழக உளவுத்துறை ஐ.ஜி., அம்ரேஷ் புஜாரி பேசினார்.

பிட்ஸ் பிலானியில் சேர்வதற்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு

பிட்ஸ் கல்வி நிறுவனத்தில்
ஒருங்கிணைந்த முதல் டிகிரி படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, BITSAT - 2014 தேர்வு நடத்தப்படுகிறது.

Cabinet proposal soon to constitute 7th Pay Commission

The central government is likely
to constitute the 7th Pay Commission for
revising the salaries of its over 50 lakh
employees before the start of process of next general elections due in May, 2014.

10 ஆம் வகுப்புக்கு முப்பருவ தேர்வு அமல்படுத்தப்பட்டால் மாணவர்களின் மனஅழுத்தம் குறையும் , பாடத்தை விரும்பும் நிலை உருவாகும்

பத்தாம் வகுப்பு படிப்பதை ஏதோ மிகக் கடினமான காரியமாக மாற்றி விடுகிறது நமது சமூகம். இது மாணவர்களுக்கு ஒருவித உளவியல் அச்சத்தையும் தந்துவிடுகிறது.

மெட்ரிக்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 2016க்குள் டெட் தேர்ச்சி கட்டாயம் - இயக்குனர்

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் , பள்ளிகளில்10ம் வகுப்பு வரை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010ஆக., 23க்கு பிறகு,நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு மையங்கள் வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகள் எழுதும் மையங்கள் காற்றோட்டமாகவும், வெளிச்சம் உள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவரின் தேர்வு பயத்தை குறைக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு!

நாமக்கல் மாவட்டத்தில், பொதுத்தேர்வை சந்திக்கும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவரின் மன அழுத்தம்
மற்றும் தேர்வு பயத்தை குறைக்க,
ஆசிரியர்களுக்கு சிறப்பு, "கவுன்சலிங்" வழங்கப்படுகிறது.

பொதுத்தேர்வு மையங்களை கண்காணிக்க "பறக்கும் படை": நேரடியாக நியமிக்கிறது மாநில பள்ளி கல்வித்துறை

பிளஸ் 2, மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது முதல், பல்வேறு மாற்றங்களை கல்வித்துறை செய்து வருகிறது.

எளிதில் மதிப்பீடு செய்வதற்கு வசதி: எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் புதுமையாக அறிமுகம் மாணவர்களின் பதிவு எண், பெயர் ஆகியவற்றை எழுதத்தேவை இல்லை

விடைத்தாள்களை எளிதில் மதிப்பீடு செய்வதற்கு வசதியாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 விடைத்தாள் புதுமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பெயர், பதிவு எண் ஆகியவற்றை அதில் எழுதத்தேவை இல்லை.

பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாநில அளவில் 12 விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது

விளையாட்டு மேம்பாட்டுக்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.10
கோடி ஒதுக்கியதையொட்டி பள்ளிக்கூட மாணவர்களுக்கான 12 வகையான விளையாட்டு போட்டிகள் மாநில அளவில் இன்று (புதன்கிழமை) தொடங்கி  29-ந் தேதி வரை நடக்கிறது.

பதவி உயர்வை "வெறுத்த'ஆசிரியர்கள்:அவசர அழைப்பால் ஏமாற்றம்!

பள்ளிக் கல்வித் துறையின் அவசர பதவி உயர்வு "கவுன்சிலிங்'கை,
ஆசிரியர்கள் பலர் வெறுத்து, "தற்காலிகமாக வேண்டாம்' என பதில் கொடுத்துள்ளனர்.

6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்  பணியிடங்களையும்,கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும்  என்று அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வில் முறைகேட்டினை தடுக்க கல்வித்துறை மாஸ்டர் பிளான்

உதமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள  கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர்.

கடலூரில் இன்று விடுமுறை அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம்நடராஜர் கோவில் மகா ஆருத்தரா தரிசன விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ள அரையாண்டு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

பொதுத்தேர்வுக்கு 19 லட்சம் கேள்வித்தாள் அச்சடிப்பு

பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 3ல் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. இதற்காக, 19 லட்சம் கேள்வித்தாள் அச்சடிப்பு பணி, வெளிமாநிலத்தில், மும்முரமாக நடந்து வருகிறது.

பள்ளி செல்வதை நிறுத்திய சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சி

படிப்பை இடையில் நிறுத்திய சிறுவர்களுக்கு, இலவச தொழிற்பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அவர்கள் பற்றிய கணக்கெடுப்பு தீவிரமாக நடந்துவருகிறது.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த"ஒபாமா-சிங்' திட்டம்:கோவை அவினாசிலிங்கம் பல்கலையில்துவக்கம்

மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவும் மத்திய அரசின் "21ம் நூற்றாண்டின் அறிவுசார் திட்டம்', கோவை அவினாசிலிங்கம் பல்கலையில் நேற்று துவங்கியது.

கல்வி வளர்ச்சியில் தென் மாநிலங்கள்"சூப்பர்'

கல்வி வளர்ச்சியில் வட மாநிலங்களை விட, தென் மாநிலங்கள் சிறப்பான இடத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தர வரிசையில், லட்சத்தீவுகள், புதுச்சேரி, தமிழ்நாடு முறையே, முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன.

Tuesday, December 17, 2013

நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

நீலகிரி பள்ளிகளுக்கு 18.12.2013 அன்று  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. படுகர் இன மக்கள் கொண்டாடும் ஹெத்தை அம்மன்பண்டிகையை முன்னிட்டு, இந்த விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான TATA கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு இரண்டு வார காலஅவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு 2 வாரம் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அரசியல் சின்னங்கள் இடம்பெறக்கூடாது! கல்வித்துறை காணொலி பதிவில் கட்டுப்பாடு

பள்ளிக்கல்வித்துறையின் பிரத்யேக இணையதளத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) பதிவு செய்யப்பட உள்ள, காணொலிகளில் அரசியல் தலைவர்களையோ, அவர்களின் சின்னங்களையோ பிரதிபலிக்கும் வகையில் இருக்கக் கூடாது,'' என்று, மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன (எஸ்.சி.இ.ஆர்.டி., )
இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க, டிச.,16ல் இருந்து 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில்பல பள்ளிகளில் பாடம் எடுக்கும்திட்டம்: மாவட்டத்துக்கு 5பள்ளிகளில் அறிமுகம்!

தமிழகத்தில் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் பாடம் எடுக்கும் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட 5
பள்ளிகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

9ம் வகுப்பு 3ம் பருவ பாட புத்தகம்:இணைய தளத்தில் பார்க்கலாம்!

முப்பருவ முறை திட்டத்தின் கீழ் 9ம் வகுப்புக்காக அச்சிட்டுள்ள மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக பள்ளிக் கல்வி இணைய
தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. 9, 11-ஆம்வகுப்பு பரிட்சைகளில் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம்!

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 9, 11-ஆம் வகுப்புகளில் இந்த ஆண்டு திறந்த புத்தகத் தேர்வு முறை என்ற பிரிவு புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.

சத்துணவு சாப்பிடாத மாணவருக்கும் சீருடை?

அரசு பள்ளிகளில், சத்துணவு சாப்பிடாத மாணவ, மாணவியர்களுக்கும் வரும் கல்வி ஆண்டில் இலவச சீருடை வழங்கிட, சமூக நலத்துறை மூலம்
கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.

"ஆதார்' கட்டாயப்படுத்தக்கூடாது திருச்சி கலெக்டர்அதிரடி உத்தரவு!

மத்தியில் ஆளும் ஐ.மு.கூ.,வின் காங்கிரஸ் தலைமையிலான அரசு, ஆதார் அடையாள அட்டை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. "மக்கள்
பணம் மக்களுக்கே' என்ற "முழக்கத்துடன்' அரசு வழங்கும் மானியத்தொகை மக்களின் நேரடி வங்கிக்கணக்கில் செலுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

ராமநாதபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

ராமாநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள கோவிலில் ஆருத்தரா தரிசன திருவிழாவை ஒட்டி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்தள்ளார் அம்மாவட்ட கலெக்டர் நந்தகுமார்.

Monday, December 16, 2013

குமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் (சுசீந்திரம்)தானுமாலைய சுவாமி திருக்கோவில், தேர் திருவிழாவையொட்டி பள்ளிகளுக்கு 17.12.13 அன்று  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான பயிற்சி முகாம்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில் பள்ளி மேலாண்மைக்
குழு உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.

அனைவருக்கும்இடைநிலைக்கல்வி திட்டம்: பள்ளிகளில்கூடுதல் வகுப்பறைகள்அமைக்க ரூ.104கோடி ஒதுக்கீடு!

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி தி்ட்டம் மூலம் பள்ளிகளில்
கூடுதல் வகுப்பறைகள் அமைப்பதற்கு ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள்
விரைவில் தொடங்க இருக்கிறது.

10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பார் கோடுடன்கூடிய தேர்வுத்தாள்அறிமுகம் !!

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள 10 மற்றும் பிளஸ் 2
பொதுத்தேர்வில் விடைகளை எழுதும் தாள்களை புத்தக வடிவில் வழங்கும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது.

தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்: பெறுவதற்கான இறுதி வாய்ப்பு டிச., 31

கடந்த 2011 செப்டம்பர் / அக்டோபரில் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள், தங்கள்
மதிப்பெண் சான்றிதழை பெற வரும் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 3 ஆசிரியர்களுக்கு விருது

உலகின் முன்னணி கற்றல் நிறுவனமான பியர்ஸன் 2013 ஆம் ஆண்டுக்கான
கல்வி கற்பித்தல் விருதுகளை அறிவித்துள்ளது. கல்வி அமைப்பில் உண்மையான மாற்றத்தை செய்து வரும்ஆசிரியர்களை போற்றும் வகையில்
ஆண்டுதோறும் இந்த விருதுகளை அந்நிறுவனம் வழங்கி வருகிறது.

ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தத்தில் "வவுச்சர்' எண் தவறாக குறிப்பிடுவதால் குளறுபடி

மதுரை மாவட்டத்தில், அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தத்தில், பொது சேமநல நிதி (ஜி.பி.எப்.,) புதிய ஓய்வூதிய
திட்டம் (சி.பி.எஸ்.,) சந்தா தொகையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தலைமை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தலைமை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை ரத்து செய்து முறைப்படி நடத்த வேண்டும்,' என பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள்
தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

405 வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் கலைப்பு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 405 வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடம் திடீரென கலைக்கப்பட்டுள்ளது.

முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட முடிவு!

உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் : கவுன்சலிங் மூலம் 400 பேர் நியமனம்

உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர்
பணியிடங்களை நிரப்புவதற்காக இரண்டு நாட்களாக நடந்த கவுன்சலிங்கில் 409 பேர் நியமனம் பெற்றனர்.

பள்ளிகளில் கம்ப்யூட்டர் இருக்குது! மின்சாரம் இல்லே!

நாட்டின் பெரும்பான்மையான துவக்கப் பள்ளிகளில், கம்ப்யூட் டர்கள் உள்ளன; ஆனால், கம்ப்யூட்டர் வழங்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகளில், கம்ப்யூட்டரை இயக்க, மின்சாரம் இல்லை.

Sunday, December 15, 2013

ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம்: தமிழக அரசுக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழக
அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.

எஸ்.எஸ்.ஏ.,வை, ஆர்.எம்.எஸ்.ஏ.,வுடன் இணைக்கும் யோசனை!

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம்(எஸ்.எஸ்.ஏ.,) சார்பில்,385 வட்டாரங்கள் செயல்படுகிறது.

Saturday, December 14, 2013

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு

மலைப்பகுதிகளில் பணியாற்றும்
அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும்

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு நாளை கவுன்சிலிங்! பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றி வரும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு ( உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக செல்ல தகுதியானவர்களுக்கு மட்டும்)நாளை 14.12.2013 அன்று ஆன்லைன் மூலம் பணிமாறுதல் கவுன்சிலிங் அந்தந்த மாவட்டத்திலேயே நடைபெறும்,

குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை - கேள்விகளும், பதில்களும்

குழந்தை வளர்ப்பு தொடர்பான குழப்பங்கள் பல
பெற்றோர்களை வாட்டி வதைப்பதாய் உள்ளன.

சி.பி.எஸ்.இ-திறந்த புத்தக தேர்வு முறைக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு!

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்று வரும் 9 & 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தக தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேர்வு பணியில் நடுநிலை பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க திட்டம்!

பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி,
முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர்கள் கண்ணீர்

ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரே கேள்வி எண்ணில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி கேள்விகள் வேறுபட்டு இருப்பதுடன், இதற்கான பதில்களும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது புதிய புகார் எழுந்துள்ளது.

Thursday, December 12, 2013

மேற்பார்வையாளர்கள் பணியிட மாற்றம் ; அரசாணை விவரம்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றி வந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 324 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும்;

விழுப்புரம், கடலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 & +2 அரையாண்டு தேர்வுகள் முன்னர் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும், இதில் எவ்வித மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் தான் இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது (டிச. 12, 1911)

18-19-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
அப்போது கொல்கத்தாவே அவர்களது தலைமையிடமாக
இருந்தது.

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக, நாளை (டிசம்பர் 13) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வல்லவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கல்லூரிகளில் சமச்சீர் கல்வி : அரசு பரிசீலனை!

கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதில் மாற்றம்: மத்திய அரசு திட்டம்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு நேரடியாக மத்தியஅரசு யு.ஜி.சி.,மூலம்
நிதியுதவி அளிப்பதை தவிர்த்து, அந்தந்த மாநில உயர்கல்வி கவுன்சில்கள் மூலம் அளிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டு வருகிறது.

ஆசிரியர்களுக்கு தொழில் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!

ஆசிரியர்களுக்கு வருமானவரி மற்றும் தொழில்வரி ஆகிவற்றிலிருந்து முற்றிலும் விலக்க அளிக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர்
கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த துறைகள் சார்பில் எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புகள் வழங்கப்படுகின்றன. 

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்களை தனி வாகனத்தில் கொண்டு செல்ல முடிவு

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு - முழு விவரம்

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.
2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்: அப்துல் கலாம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.

பறிபோகும் எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள்: தமிழக அரசு பரிசீலனை! தினமலர் செய்தி

மத்திய அரசின் நிதிக் குறைப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் 2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது.

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர மத்திய அரசு மறுப்பு தமிழக கல்வி துறை அவசர ஆலோசனை! தினமலர் செய்தி

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும், வட்டார வள மைய ஆசிரியர், 4,500 பேருக்கு, சம்பளமாக, 148 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு மறுத்துள்ளது.

Wednesday, December 11, 2013

7 வது ஊதியக் குழு தலைவர் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி?

7 வது ஊதியக்குழு தலைவராக நீதிபதி சிங்வி நியமிக்கப்படப் போவதாக மத்திய சட்டத்துறை வட்டாரம் தெரிவிக்கின்றன.

15 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு கட்டண சலுகை அளிப்பு!

பொது தேர்வு எழுத உள்ள, 17 லட்சம் பேரில், 90 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் படிப்பதால், அவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காலியிடம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங்?

2014-15ம் கல்வியாண்டின் துவக்கத்தில்அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப, அடுத்த
வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள்
கூறுகின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவமுறை அமலாகுமா?

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவ முறை அமல்படுத்துவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்காததால் ஆசிரியர், மாணவர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

படமும், பாடமும்... மாநகராட்சி பள்ளியில் "ஸ்மார்ட் கிளாஸ்" அறிமுகம்!

மாநகராட்சி பள்ளிகளில், பாடத்திட்டத்தை உள்ளடக்கிய "ஸ்மார்ட் கிளாஸ்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

30% ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறி

மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 30 சதவிகிதம் அரசு ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் 2002-03 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்றுனரான பணியேற்று தொடர்ந்து திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர் விவரம் கோரி பள்ளிக்கல்விதுறை இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!

அனைவருக்கும்  கல்வி இயக்கத்தில் 2002-03 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்றுனராக பணியேற்று விருப்பத்தின் அடிப்படையில் தொடர்ந்து திட்டத்தில் பணியாற்றும் 88 ஆசிரியர் பயிற்றுநர்களின் முழு விவரம் கோரி பள்ளிக்கல்விதுறை இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மீண்டும் அவர்களை பட்டதாரி ஆசிரியராக உயர்/மேல் நிலைப்பள்ளிகளுக்கு பணிமாறுதல் அளிக்க உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கின்றன.

பள்ளிகளுக்கு இந்தியா "மேப்": 2 மாதங்களில் வழங்கப்படும்!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1.48 லட்சம்
வகுப்பறைகளுக்கு இந்திய, தமிழக வரைபடங்கள் மற்றும் மாவட்ட வரைபடங்கள் 2 மாதங்களில் வழங்கப்பட உள்ளதாக தகவலறிந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.

SSA BRC மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்ய அரசு முடிவு!

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றி வரும் BRC
மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்/ முதுகலை ஆசிரியர் ஆகவும், மேலும் 1000  ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிகளுக்கும் இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அரசு ஆணைகளும் வெளிவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நெறிமுறை சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தேவை: பல்லம் ராஜூ

நெறிமுறை சார்ந்த ஒரு முழுமையான வாழ்க்கையை எப்படி அமைத்துக்
கொள்வது என்பது குறித்து அறிய, மாணவர்களுக்கு உதவ, நமது உயர்கல்வி அமைப்பு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்வழிப் பள்ளிகளின்வளர்ச்சியும் தளர்ச்சியும்

தமிழ்வழிக் கல்வியை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டும் பள்ளிகள் நம் தமிழ் வழிப்பள்ளிகளும் தாய்த் தமிழ் பள்ளிகளும். அப்பள்ளிகளின்
வளர்ச்சியைப் பற்றியும் அவற்றின் தளர்வு நிலைகளைப் பற்றியும்
காண்போம்.

உரிய காரணம் இல்லாமல் 2மாதத்துக்கு மேல்ஆசிரியர்களை இடைநீக்கம்செய்ய முடியாது:ஐகோர்ட்டு தீர்ப்பு!

மனுவில் கூறி இருந்ததாவது: நான், 1984–ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பழத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.

தொடக்ககல்வி அலுவலகங்களிலும் பணியாற்றும் ஆசிரியர்கள்- பாடம் கற்க முடியாமல் மாணவர்கள் பரிதவிப்பு

தமிழகத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலகங்களில் பணியாளர் பற்றாக்குறையால் ஆசிரியர்களே அலுவல் பணி களை மேற்கொண்டு வருகின்றனர்.

திங்கள் கிழமை ஏ.இ.இ.ஓ.,ஆபீஸில் ஓய்வு பெற்றஆசிரியர் குறைதீர் கூட்டம் -திருச்சி கலெக்டர் உத்தரவு

வாரந்தோறும் திங்கள் மக்கள் குறைதீர் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது . பென்ஷன் தொடர்பாக ஓய்வு பெற்ற தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இக்குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர் .

கண்காணிக்க 5இணை இயக்குநர்கள் பிளஸ்2 அரையாண்டு தேர்வுஇன்று தொடக்கம்

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை கண்காணிக்க 5
இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உடற்கல்வி, ஓவியம், தையல்,இசை சிறப்பு ஆசிரியர்பணியிடம் நிரப்படிஆர்பி அலுவலகத்தில்முற்றுகை!

உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்
பணியிடங்களை டிஆர்பி உடனடியாக நிரப்ப கோரி சிறப்பு ஆசிரியர்கள்
நேற்று டிஆர்பி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளஸ் 2, 10 ம்வகுப்பு மாணவர்களுக்கு ஓவியஆசிரியர் மூலம் பயிற்சி

பிளஸ் 2, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் உள்ள படங்களை வரைய, ஓவிய ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, டிச.,10, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச.,12 பிளஸ்2 மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது.

ஒரு நாள்; 72 "பைல்'கள்; திணறும்தலைமையாசிரியர்கள் :சுமையை தீர்க்குமா கல்வித்துறை!

தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், நாள் ஒன்றுக்கு 72 ஆவணங்களை கட்டாயம் கையாள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பள்ளித் தலைமையாசிரியர்களின் பணிச்சுமை மூச்சு முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகின்றன.

பாடப்புத்தகம், நோட்டுகள் ஜன., 2ல்இலவசமாக வினியோகம்

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், ஜன., 2ல், மீண்டும் பள்ளிகள் துவங்கும். அப்போது, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்
பயிலும், அனைத்து மாணவ, மாணவியருக்கும், தலா, நான்கு ஜோடி சீருடைகள், பாட புத்தகங்கள், நோட்டுகள், இலவசமாக வழங்கப்படும், என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

50 கல்வி டிவி சேனல்கள் பார்க்கரூ.1,500 விலையில் டிஷ் ஆன்டெனா

கல்விக்கான, 50 டிவி சேனல்கள் அடங்கிய, டிஷ் ஆன்டெனா விரைவில் விற்பனைக்கு வருகிறது. இதற்கான ஸ்டூடியோ, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நிறுவப்படுகிறது.

உரிமையின் அருமை :இன்று சர்வதேச மனித உரிமைகள்தினம்

ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதுடன், பிறரையும் வாழவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக டிச., 10ம் தேதி, மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒடிசாவிலிருந்து தமிழகம் சென்ற400 குழந்தை தொழிலாளர் மீட்பு

ஒடிசாவில் இருந்து, தமிழகத்திற்கு வேலைக்குச் செல்ல முற்பட்ட, 400
குழந்தை தொழிலாளர்களை, ரயில்வே போலீசார் மீட்டனர்.

Monday, December 09, 2013

இன்று-டிச., 9- சர்வதேச ஊழல்ஒழிப்பு தினம்

இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல்.

விநாயக மிஷின்பல்கலைக்கழகஎம்.பில்.,படிப்பிற்கு யு.ஜி.சி அங்கீகரித்துஆணை!

நமது ஆசிரியர்கள் பெரும்பாலோர் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில் எம்.பில் பயின்றுள்ளனர். அதற்கு ஊக்க ஊதிய உயர்வு பெறுவதில்
தற்போது வரை பல்வேறு காரணங்களால் மறுக்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ–மாணவிகளுக்கு 21 புதிய விடுதிகள்:ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியர் இடை நிற்றல் இன்றி கல்வி கற்றிடவும், அவர்தம் சமூக மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும், நல்வாழ்விற்கும் பல்வேறு திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன்
செயல்படுத்தி வருகிறது.

தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ;இது ஜெ.,வின் 14 வது முறை களைஎடுப்பு!

ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் ஜெ., தமது அமைச்சரவையை இன்றும் மாற்றி அமைத்துள்ளார்.

அனைத்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும்சிறப்பு ஆசிரியரை நியமிக்கணும் :ஆசிரியர்கூட்டணி தீர்மானம

திருச்சி மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர்  கூட்டணி கிளையின் சார்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம் யூனியன் துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

பிளஸ் 2 தேர்வில் அகமதிப்பீடு முறை :ஆசிரியர் சங்கம் கோரிக்கை

""பிளஸ் 2 பொதுத் தேர்வில் அகமதிப்பீட்டு முறையை, நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்,'' என, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சங்கரநாராயணன் கூறினார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம்பதிய உத்தரவு

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவி யரின் விவரங்களை, வாரத்திற்கு, எட்டு மாவட்டங்கள் வீதம், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

2013 Assembly Elections @ Glance

Delhi Result
Congress 8/70
BJP 32/70
AAP 28/70

கனவு ஆசிரியர் - அமைச்சர்களின்ஆசிரியர்

அமைச்சராக, தேர்தலில் நின்று ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் ஸ்கூலுக்கு வந்து, டீச்சர் சொல்றதைக் கேட்டாலே போதும். நாங்க அப்படித்தான் அமைச்சரானோம்'' என்கிறார்கள் இந்த மாணவர்கள்.

விடைத்தாள் கொண்டு செல்லும்பணி: மாற்று திட்டம்குறித்து ஆலோசனை

பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகளை, தேர்வு மையங்களில் இருந்து, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை, தபால் துறைக்கு வழங்காமல், மாற்று வகையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, தேர்வுத்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

முதுகலை ஆசிரியர்வரலாறு தேர்வு வழக்கு தீர்ப்புவிவரம்

முதுகலை ஆசிரியர் வரலாறு தேர்வு விடைக்குறிப்பு தவறு என
தொடுக்கப்பட்ட இரு வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பு விவரம்.

முதுகலை ஆசிரியர்தேர்வு கணக்குபாடத்தேர்வில் 9கேள்விகளை நீக்கியதுதவறு எனும்வழக்கு தள்ளுபடி!

முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9 கேள்விகளை நீக்கியது தவறு என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது கேள்விகள் விவரம்

வார இறுதி நாளில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு ஈடு செய் விடுப்பு அளிக்கப்பட வேண்டும். - ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

வார இறுதி நாள் விடுமுறை, அரசு விடுமுறை நாள்களில் பணியிடை பயிற்சி நடத்தக் கூடாது என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அனுமதியின்றி புது படிப்புகளை கல்லூரிகள் தொடங்கக் கூடாது

அரசு அனுமதியின்றி புது படிப்புகளை கல்லூரிகள் தொடங்கக் கூடாது என துணைவேந்தர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்குஆங்கிலபயிற்சி துவக்கம்

சென்னை மாநகராட்சி துவக்க  மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கில பயிற்சி வகுப்புக்களை, மேயர் சைதை துரைசாமி நேற்று துவக்கி வைத்தார்.

விடைத்தாள் கட்டுகளை எடுத்து செல்லும் "ஆர்டர்' தபால் துறைக்கு கிடைக்குமா? மாற்று திட்டம் குறித்து தேர்வு துறை தீவிர ஆலோசனை!

பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகளை, தேர்வு மையங்களில் இருந்து, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும்