சென்னை: ஆசிரியர்
தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழை,
ஜன., 5க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்'
என, ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.ஆர்.பி., ) அறிவுறுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு, அக்டோபரில்,
இரண்டாவது டி.இ.டி., தேர்வு நடந்தது.இதில், 20 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த மையம் சார்ந்த, மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சென்று, ஜன., 5க்குள் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும் என, டி.ஆர்.பி., அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment