Tuesday, November 26, 2013

மத்திய அரசு கொண்டுவரும் மாதிரி பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது: கல்வியாளர்கள் வலியுறுத்தல்

சென்னை, நவ 26: தமிழக கல்வியாளர்கள் அமைப்பான பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ்
கஜேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது:–
 இந்தியா முழுவதும் மத்திய அரசு தனியாருடன் இணைந்து மாதிரி பள்ளிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த மாதிரி பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அனுமதிக்க கூடாது. இதற்கு எதிராக சட்டமன்றத்தில்
தீர்மானம் கொண்டு வர வேண்டும். பொதுமக்களும் போராட முன்வர வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு மதிப்பெண் தளர்வு அளிக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்கான வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment