Saturday, November 23, 2013

மராட்டிய மாநிலத்தில் இனிமேல் ஆரம்ப பள்ளிகளில்,ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம்


இனிமேல் ஆரம்ப பள்ளிகளில்ஒரேஆசிரியரேபல பாடங்களை எடுக்க 
வேண்டிய தேவையிருக்காது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி
ஆசிரியரை நியமிக்கும் திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில்தான் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்த திட்டம் 
நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போதைய நிலையில்மாநிலத்தில் 25% பள்ளிகளில்ஒவ்வொரு பாடத்திற்கும் தனி ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் பிற பள்ளிகளில்ஒரே ஆசிரியர் பலபாடங்களை நடத்தும் நிலைமைதான் உள்ளது.ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம்மாநில வாரியத்தில் சேராத அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. ஒரு ஆசிரியர் ஒரே பாடத்தில் கவனம் செலுத்தி அதை நடத்துவதன் மூலம்அவருக்கு பணிச்சுமை குறைவதோடு
பாடத்தையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்று தொடர்புடைய 
வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment