Tuesday, November 26, 2013

கலைஞர் மு. கருணாநிதி முகநூலில் கேள்வி பதில் பகுதியில் வெளியானது!

கேள்வி :- தமிழ்நாட்டில் மாணவர் வருகை, குறைவு எனக் கூறி, ஈராசிரியர் பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவும், ஓராசிரியர் பள்ளி களை அறவே மூடிவிடவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறதே?
பதில் :- இதுபற்றி அரசாணை வெளியிட்டால் பெரிய எதிர்ப்பு வரும் என்பதால், அவ்வாறு ஆணையாக வெளியிடாமல் வாய்மொழி உத்தரவின் மூலமாக
அரசு செயல்பட்டு வருவதாகச் சொல்லப்படு கிறது. இதன் காரணமாக அந்தப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி
வருகிறார்கள். எனவே அரசு இந்த நடவடிக்கை களை உடனடியாக நிறுத்திக் கொண்டு, மாணவர்களின் வருகையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment