Friday, November 29, 2013

அரசு பள்ளியில் ஆபாச படம்பார்த்தஆசிரியர்கள் நான்குபேர்"சஸ்பெண்ட்'

புதுச்சேரி:அரசு பள்ளியில் உள்ள கம்ப்யூட்டரில், ஆபாச படம் பார்த்த
விவகாரத்தில் சிக்கிய, ஆசிரியர்கள் நான்கு பேர் அதிரடியாக, "சஸ்பெண்ட்'
செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி, அரும்பார்த்தபுரம், திரு.வி.க.,அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவியரை தொட்டு பேசுவதாகவும்,
அலுவலக கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்ப்பதாகவும் புகார் எழுந்தது.இது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனர் வல்லவன், முதன்மைக் கல்வி அதிகாரி கலைச்செல்வன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது,
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது, மாணவியர் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.


பள்ளி கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்ததாக, ஆசிரியர்கள் அன்பழகன், சிவகுமார், அப்துல் மாலிக், அப்துல் ரஹீத் ஆகியோரை, சஸ்பெண்ட்
செய்து, பள்ளிக் கல்வி இயக்குனர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பாலியல் பிரச்னையில் சிக்கி வருவது, கல்வித் துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக, அனைத்து பள்ளிகளுக்கும் கடும் எச்சரிக்கை கடிதம் அனுப்புவது என,
பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment