மணப்பாறை: மணப்பாறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் வட்டார வளமையம் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான
குறுவளமையப்பயிற்சி நடந்தது.
பயிற்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படைத்திறன்களான படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதச்குறுவளமையப்பயிற்சி நடந்தது.
செயல்பாடுகளை செய்தல், நினைவாற்றலை மேம்பட செய்தல் போன்ற கல்வித்தரத்தை உயர்த்த பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியின்போது, வகுப்பறையில் கற்றல் கற்பித்தலின்போது உச்சரிப்பிற்கு முக்கியத்துவம்
தரவேண்டும் எனவும், கவனச்சிதைவு ஏற்படாமல் இருத்தல், வாசித்தலில் அதிக கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கென சிறப்பு பயிற்சிகளும் தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த, 130 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment