Thursday, December 12, 2013

இந்த நாளில் தான் இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது (டிச. 12, 1911)

18-19-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
அப்போது கொல்கத்தாவே அவர்களது தலைமையிடமாக
இருந்தது.
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது.
1911-ஆம் ஆண்டு இதே நாளில் (டிச.12) ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்
தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும்
அறிவிப்பை விடுத்தார். 1920-களில்
பழைய டெல்லி நகருக்குத் தெற்கே புதுடெல்லி என பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது.
1947-ல் இந்திய விடுதலை பெற்ற
பின்னர் இதுவே தலைநகராகவும்,
அரசின் இருப்பிடமாகவும்
அறிவிக்கப்பட்டது.
இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்
* 1941 - யூதர்களை வெளியேற்றும்
திட்டத்தை ஹிட்லர் அறிவித்தார்.
* 1963 - ஐக்கிய இராச்சியத்திடம்
இருந்து கென்யா விடுதலை பெற்றது.
* 1981 - இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்
சிங் பிறந்தநாள்
* 1988 - லண்டனில் இரண்டு ரெயில்கள்
மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டு 100
பேருக்கு மேல் காயமடைந்தனர்.
* 1991 - சோவியத் ஒன்றியத்திடம்
இருந்து ரஷ்யா விடுதலை பெற்றது.

No comments:

Post a Comment