Saturday, December 28, 2013

பிளஸ்2, பத்தாம்வகுப்பு பொதுதேர்வுகளில் முறைகேட்டினை தடுக்க புதிய வியூகம் வகுக்கும் தேர்வுத்துறை

இதுவரையிலான தமிழக கல்வித்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவில் இம்முறை தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் முயற்சியாக பொது தேர்வுகளுக்குரிய கண்காணிப்பாளர்கள், பறக்கும்படையினரை பள்ளிக்கல்வி
இயக்குநர்கள் நேரடியாக சென்னையில் இருந்தே நியமனம் செய்ய உள்ளனர்.

தமிழநாட்டில் பிளஸ்2 மற்றும்
பத்தாம்வகுப்பு தேர்வு
முறைகளில்
ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து
புதிய புதிய மாற்றங்கள்
செய்யப்பட்டு வருகிறது. இந்த
ஆண்டும் கடந்த ஆண்டு ஏற்பட்ட
சிறிய அளவிலான முறைகேடுகள்
கூட இல்லாமல்
நூற்றுக்கு நூறு சதம் எந்தவித
பிரச்சினையும் இல்லாமல்
தேர்வுகளை முடிக்க
தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு தேர்வு
அறையிலும் 20 மாணவர்கள்
மட்டுமே தேர்வு எழுதப்பட
வேண்டும். அதற்கு மேல்
எக்காரணத்தை கொண்டும்
மாணவர்களை ஒரே அறையில்
அனுமதிக்கக்கூடாது. உதாரணமாக
ஒரு மையத்தில் 105 மாணவர்கள்
தேர்வு எழுதிறார்கள் என்றால் 20, 20
ஆக ஐந்து அறைகளிலும் மீதமுள்ள
ஐந்து மாணவர்கள் ஒரு அறையிலும்
தேர்வு எழுத அனுமதிக்கப்பட
வேண்டும்.
மேலும் தேர்வு அறையின்
கண்காணிப்பாளர்கள்,
பறக்கும்படைக்கு தேர்வு
செய்யப்படுவோர் ஆகியோரின்
பெயர் விவரங்கள் அந்தந்த
மாவட்டங்களில் இருந்து இயக்குநர்
அலுவலகம் மூலம்
பெறப்பட்டு சென்னையில்
இருந்து இயக்குநர்களே யார், எந்த
பள்ளி, எந்த அறையின்
கண்காணிப்பாளர் என
தேர்வு செய்து அனுப்புவார்கள்.
மேலும் பறக்கும்
படைக்கு தேர்வு செய்யப்படும்
ஆசிரியர்களின்
பெயர்பட்டியலையும் சென்னையில்
இருந்து இயக்குநர்களே தேர்வு
செய்வார்கள்.
இதுவல்லாது விடைத்தாள்
திருத்தும் பணிக்கான
ஆசிரியர்களையும்
இயக்குநர்களே தேர்வு
செய்யஉள்ளனர். விடைத்தாள்
திருத்துவோர் பட்டியல் இயக்குநர்
அலுவலகத்தில்
இருந்து வெளியிடப்படும்.
அப்பட்டியலில் உள்ள ஆசிரியர்கள்
விடைத்தாள் திருத்தும்
பணிக்கு கட்டாயமாக செல்ல
வேண்டும்.
கடந்த ஆண்டு வரை நடத்தப்பட்ட
பொதுத்தேர்வுகளில்
இருந்து இம்முறை மிகவும்
மாறுபட்டு பொதுத்தேர்வுகள்
நடத்தப்படும் எனவும் சிறிய அளவில்
கூட முறைகேடுகள் நடக்காவண்ணம்
நடைமுறைகள் கடைபிடிக்கப்படும்
எனவும் தேர்வுகள்
துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment