Tuesday, December 17, 2013

கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில்பல பள்ளிகளில் பாடம் எடுக்கும்திட்டம்: மாவட்டத்துக்கு 5பள்ளிகளில் அறிமுகம்!

தமிழகத்தில் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் பாடம் எடுக்கும் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட 5
பள்ளிகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
தமிழக பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைத்து ‘கனெக்டிங் கிளாஸ் ரூம்‘ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முறையில் ஒரே நேரத்தில் எல்லா வகுப்பறைகளிலும் கணினி உதவியுடன் பாடம் போதிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட 5 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 4 மண்டலங்களில் பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்கு ஒரு பள்ளிக்கு 42 ஆயிரத்து 187 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கு தேவையான
உபகரணங்களும் கொள்முதல் செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்ட ஐந்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில புலமையுடன் கூடிய கணினியில் திறம்பட பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கான பயிற்சி பட்டறை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.சென்னை மண்டலத்தில் சென்னை,
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம்,
தர்மபுரி மாவட்டங்களுக்கு டிசம்பர் 27ம் தேதி சென்னை சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகவலை பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர
முருகன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment