Saturday, December 28, 2013

தமிழக அரசு உத்தரவு 54 ஆயிரம் அங்கன்வாடிகளுக்கு ரூ .15 கோடியில் கல்வி உபகரணம்

தமிழகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில்,
49,499 பிரதான
அங்கன்வாடி மையங்கள், 4,940
கிளை அங்கன்வாடி மையங்கள் என
54,439 அங்கன்வாடி மையங்கள்
செயல்படுகிறது. இதில் 13
லட்சத்திற்கும் மேற்பட்ட 2
வயது முதல் 6 வயது வரையுள்ள
குழந்தைகள் கல்வி கற்கின்றனர்.
அங்கன்வாடி மையங்களில்
குழந்தைகளுக்கு விளையாட்டுடன்
செயல் வழி கற்றல் முறையில்
கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால்
பெரும்பாலான மையங்களில்
குழந்தைகள் கல்வி, கற்க எவ்வித
உபகரணமும் இல்லை.
சில மையங்களில் இருந்த
உபகரணங்கள் பழுதடைந்து விட்டது.
தன்னார்வ அமைப்புகளும்
அங்கன்வாடி மையங்களுக்கு
போதுமான உதவியை வழங்கவில்லை.
இந்நிலையில், தமிழக அரசின்
ஒருங்கிணைந்த
வளர்ச்சி திட்டத்தின் (ஐ.சி.டி.எஸ்)
சார்பில் 15 கோடி ரூபாய் செலவில்
குழந்தைகள் விளையாட கல்வி,
விளையாட்டு உபகரணங்கள் வாங்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி முதல் அங்கன்வாடி களில்
விளையாட்டு, கல்வி உபகரணங்கள்
வழங்கப்படும். சுமார் 20 லட்சம்
கல்வி, விளை யாட்டு உபகரணங்கள்
வழங்கப்படவுள்ளது.
இதுபற்றி தமிழக ஒருங்கிணைந்த
வளர்ச்சி திட்ட பிரிவு அதிகாரிகள்
கூறுகையில், ‘‘மரத்தில்
தயாரிக்கப்பட்ட காலணி, விலங்கு,
பறவை, மரம், சதுரம், வட்டம்,
முக்கோணம், அறுங்கோண
வடிவிலான
விளையாட்டு பொருட்கள்,
பிளாஸ்டிக்கில் கட்டிடம்
கட்டுவதற்கான பொருட்கள்,
கதை சொல்லும் வகையிலான
பொம்மைகள் அடங்கிய அட்டை,
படக்கதை புத்தகம்
போன்றவை பெறப்படும்.
அங்கன்வாடிகளின் தரம்
உயர்த்தப்பட்டதால் வரும் ஆண்டில்
குழந்தைகளின் சேர்க்கை சதவீதம் 10
முதல் 15 சதவீதம் அதிகரிக்கும்
வாய்ப்புள்ளது. குழந்தைகளின்
கற்றல் திறனை மேம்படுத்த
தேவையான திட்டங்கள்
தயாரிக்கப்பட்டு வருகிறது‘‘
என்றனர்.

No comments:

Post a Comment