வாரந்தோறும் திங்கள் மக்கள்
குறைதீர் கூட்டம் திருச்சி
கலெக்டர் அலுவலகத்தில்
நடக்கிறது . பென்ஷன் தொடர்பாக
ஓய்வு பெற்ற தொடக்கக்கல்வி
ஆசிரியர்கள் இக்குறைதீர்
கூட்டத்தில் மனு அளித்தனர் .
மனுக்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு குறைதீர்
கூட்டத்திலும் அதிகரித்தது . இதை
கட்டுப்படுத்தவும் , ஓய்வு பெற்ற
ஆசிரியர்களுக்கு விரைந்துநிவாரணம் கிடைக்கவும் வழி செய்யும் வகையில் திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ , "ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் குறைதீர் கூட்டம் திங்கள் கிழமை ஒவ்வொரு
உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்திலும் (ஏ . இ. இ. ஓ.,) நடத்த வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் எந்த ஏ .இ .இ .ஓ ., அலுவலக கட்டுப்பாட்டு அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றார்களோ, அந்த அலுவலகத்திலேயே சென்று தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். இக்கூட்டத்தை ஏ .இ .இ .ஓ ., க்கள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். "கலெக்டர் உத்தரவுப்படி, உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஓய்வு பெற்ற
ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும். இக்கூட்டத்தை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் ' என , மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பொன்னம்பலம் கேட்டுக் கொண்டுள்ளார
No comments:
Post a Comment