Tuesday, January 21, 2014

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1368பேர் தேர்ச்சி

திருச்சி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்திய தகுதித்தேர்வு 1,2 தாள்களை மாவட்டத்தில் 14,573 பேர் எழுதினர்.
இதில் 1368பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான
சான்றிதழ் சரிபார்த்தல மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது. 20 முதல் 23-ம்
தேதி வரை தாள் 1-ல்
தேர்ச்சி பெற்றவர்களுக்கும், 24 முதல் 28-ம்தேதி வரை தாள் 2-ல்
தேர்ச்சிபெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இப்பணிக்காக 8 குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன. மாநில
ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் இயக்குநர் கண்ணப்பன் மேற்பார்வையில சான்றிதழ்
சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment