Thursday, January 02, 2014

பிளஸ் 2 தேர்வர்கள் பட்டியல் : தலைமை ஆசிரியர்களுக்கு 12 கட்டளைகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் பெயர் பட்டியலை சரிபார்த்து, ஆன்லைனில் திருத்தம் செய்வதற்கு நாளை (ஜன.3ம் தேதி) வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ் 2
பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற
உள்ளது.
இதற்காக, சம்பந்தப்பட்ட பள்ளிகள் சார்பில்
மாணவர்களின் பெயர் பட்டியல்
தயாரித்து தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு
வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள்
பெயர் பட்டியலில் முக்கிய திருத்தங்கள்
செய்வதற்கு அனைத்து பள்ளிகளுக்கும்
ஜன.3ம் தேதி மாலை 5
மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பட்டியலை சரிபார்ப்பதில் முக்கிய
வழிமுறைகளை பின்பற்றுமாறு தலைமை
ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன் விபரம் வருமாறு:
*பள்ளியின் செக் லிஸ்டில்
அனைத்து தேர்வர்களின் பெயர்களும்,
அச்செழுத்தம்
செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய
வேண்டும்.
*பெயர் விடுபட்டிருந்தால் கடைசி பக்கத்தில்
சிவப்புநிற மையால் தெளிவாக எழுத
வேண்டும்.
*தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, இனம்,
மொழி, இதர பாடங்களில் தேர்வு எழுத உள்ள
மொழி ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்ய
வேண்டும்.
*தவறு இருந்தால் சிவப்பு நிற மையால்
சுழித்து சரியான விபரத்தை குறிப்பிட
வேண்டும்.
*தேர்வர்களின் குரூப் கோடு மற்றும் சப்ஜெக்ட்
கோடு வரிசையாக உள்ளதா?
என்பதை சரிபார்த்து தவறு இருந்தால்
சிவப்பு நிற மையால் சுழித்து சரியான
விபரத்தை அருகில் எழுத வேண்டும்.
*பள்ளியின் எண், பெயர் ஆகியவை சரியாக
அச்செழுத்தம்
செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து
தவறு இருந்தால் திருத்தம் செய்யப்பட
வேண்டும்.
*டைப்ரைட்டிங் பாடத்தேர்வு எழுதும்
தேர்வர்களுக்கு மொழி, தமிழ்
அல்லது ஆங்கிலம் என்று சரியாக குறிப்பிட
வேண்டும். தவறு இருந்தால் உரிய திருத்தம்
மேற்கொள்ளவேண்டும்.
*இயற்பியல், வேதியியல், உயிரியல்,
தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு,
பொருளாதாரம், வணிகவியல், கணக்கியல்
ஆகிய பாடங்களுக்கு மட்டுமே மலையாளம்,
கன்னடம், தெலுங்கு, உருது ஆகிய
மொழிகளில் வினாத்தாள்கள் வழங்கப்படும்
என்பதையும், இதர
பாடங்களுக்கு கிடையாது என்பதைக் கருத்தில்
கொண்டு செக் லிஸ்டை கவனத்துடன்
ஆய்வு செய்ய வேண்டும்.
*இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள்
தங்களது நேரடி கவனத்தில் மேற்கொள்ளப்பட
வேண்டும்.
*தலைமை ஆசிரியர்கள் நேரடியாக
சரிபார்க்காமல் கையெழுத்து போடக்கூடாது.
அவ்வாறு கையெழுத்திட்டால் அதன்பின்
விளைவுகளையும் முழு பொறுப்பையும்
தலைமை ஆசிரியர்களே சந்திக்க நேரிடும்.
*ஒரே பெயர் மற்றும் தலைப்பு எழுத்து கொண்ட
மாணவ, மாணவிகள்
ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால் அந்தந்த
மாணவ, மாணவிகளின் பிறந்த தேதியை மிக
கவனத்துடன் சரிபார்க்க வேண்டும்.
*இந்த திருத்தங்களை ஜன.3ம் தேதி (நாளை)
மாலை 5 மணிக்குள் ஆன் லைனில் செய்து,
தேர்வர்களின் நலன் பாதிக்காத வகையில்
தேர்வு பணிகளை செம்மையாகவும்,
சிறப்பாகவும்
மேற்கொண்டு தேர்வு முடிவுகளை நல்ல
முறையில் வெளியிட
முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment