Friday, January 03, 2014

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து செய்முறைத் தேர்வு துவக்கம்

ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வுக்குப்பின், பள்ளிகளுக்கு, கடந்த, 24ம் தேதி முதல், நேற்று வரை ஒன்பது நாள், விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட்டன.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில், செய்முறை தேர்வு குரூப் கொண்ட மாணவர்களுக்கு, இம்மாத இறுதிக்குள் தேர்வு பதிவு எண் வழங்கப்பட உள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து செய்முறைத் தேர்வு துவங்கிவிடும் என்பதால் இந்த ஒரு மாதம் வரை மட்டுமே, பள்ளிகள் முழுமையான அளவில் செயல்படும்.

No comments:

Post a Comment