Tuesday, January 14, 2014

2013-14 நிதியாண்டிற்கான தொழிலாளர் பி.எப். வட்டி விகிதம் 8.75% ஆக உயர்வு

2013-14 நிதியாண்டிற்கான பி.எப்.
வட்டி விகிதம் 8.75 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த
நிதி ஆண்டில் பி.எப் கணக்குக்கு 8.5
சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பி.எப்
வட்டியை அதிகரிக்க வேண்டும்
என்று தொழிலாளர் சங்கங்கள் தரப்பில்
வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதனையடுத்து பி.எப். வட்டி விகிதம் 8.75
ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்
அளவு நிதியை நிர்வகித்து வரும் இந்த
அமைப்பு, தனது சேவையை மேம்படுத்தும்
வகையில் நாடு முழுவதும் உள்ள 2,700
தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதி மையங்களிலும் விரைவில்
ஒரு புதிய
கணினி மென்பொருளை பயன்பாட்டுக்கு
கோண்டு வந்து அதன் மூலம்
சேவை கண்காணிப்பை அதிகப்படுத்த
இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment