Friday, January 10, 2014

2342 கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு ஜூன் 15-ம் தேதி தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.)
மூலம் தமிழ்நாட்டில் துணை கலெக்டர்,

வணிகவரி உதவி ஆணையர்,
துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட
பலவகையான குரூப்-1 அதிகாரிகள்,
குரூப்-2 அலுவலர்கள் தேர்வு, குரூப்-4
மூலம் இளநிலை உதவியாளர்
பணியாளர்கள் தேர்வு, கிராம நிர்வாக
அலுவலர்(வி.ஏ.ஓ.) உள்ளிட்ட
பல்வேறு அரசு அதிகாரிகள்,
பணியாளர்கள்
தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
அதில் கிராம நிர்வாக அலுவலர்கள்
(வி.ஏ.ஓ) பணியிடங்களுக்கு 2342
பேரை தேர்ந்தெடுக்க ஜூன் 15-ம்
தேதி தேர்வு நடத்த உள்ளதாக
டி.என்.பி.எஸ்.சி. தலைவர்
நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அறிவிப்பு மார்ச்
மாதத்தில் வெளிடப்படும் என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
அதே போல் குரூப்-2
பணியிடங்களுக்கு 1181
பேரை தேர்ந்தெடுக்க மே 18ம்
தேதி தேர்வு நடக்கும் என்றும் இதற்கான
அறிவிப்பு இம்மாத இறுதிக்குள்
அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment