Wednesday, January 22, 2014

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்., முதல் வாரத்தில் துவக்கம்

தேர்வுத் துறை, செய்முறை தேர்வு முடிவுகளை, பிப்., 28ம் தேதிக்கும் கேட்டுள்ளதால், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள், பிப்., முதல் வாரமே தொடங்க
வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன்
கூறியதாவது: பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்தும் தேதியை, அந்தந்த
பள்ளி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
ஆனால், செய்முறை தேர்வுகளை நடத்தி, அதற்கான
மதிப்பெண் விவரங்களை, பிப்., 28க்குள், தேர்வுத்
துறை இயக்குனரகத்திற்கு கிடைக்கும் வகையில்,
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட
கல்வி அதிகாரிகளுக்கும்,
தலைமை ஆசிரியர்களுக்கும்
அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர்
கூறினார்.

No comments:

Post a Comment