Monday, January 27, 2014

கோரிக்கையை ஏற்காவிட்டால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்
பணியை புறக்கணிக்கப் போவதாக
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் கழக செயலாளர்
விஜயகுமார் வெளியிட்ட
அறிக்கை:அரசாணை 720ல் மாற்றம்
செய்து உரிய
பதவி உயர்வு வாய்ப்புகளை வழங்க
வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய
வேண்டும், பழைய ஓய்வு ஊதிய
திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
போராட்டங்கள் நடத்தினோம்.ஆனால்
அரசு தரப்பில் உரிய நடவடிக்கை இல்லை.
அதனால் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்
திருத்தும்
பணிகளை புறக்கணிப்பது என்று தமிழ்நாடு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில
செயற்குழுவில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே முதுநிலை பட்டதாரிகள் கோரிக்கைகள்
மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இவ்வாறு அறிக்கையில்
கூறியுள்ளார்.

No comments:

Post a Comment