Monday, January 27, 2014

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் உள்பட 7 அதிகாரிகள்
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம்
(துணை இயக்குநர், எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல்
மாவட்ட முதன்மை இயக்குநர்
ஆகியவை மாவட்ட முதன்மை கல்வி இயக்குநர்
பதவிக்கு நிகரானவை):
அருண் பிரசாத், மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர், திருவண்ணாமலை -
தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர்.
பொன்னையா, துணை இயக்குநர், தொடக்கக்
கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்.
புகழேந்தி, துணை இயக்குநர், தொடக்கக்
கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட
அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.)
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்.
நூர்ஜஹான், கூடுதல் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம்,
திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித்
துறை துணை இயக்குநர்.
சரோஜா, கூடுதல் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம்,
தூத்துக்குடி - கோவை எஸ்.எஸ்.ஏ. திட்ட
கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.
லத்திகா, கூடுதல் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், கோவை -
தூத்துக்குடி எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்
சுப்ரமணியம், செயலாளர், தமிழ்நாடு மாநில
பெற்றோர் ஆசிரியர் கழகம் -
துணை இயக்குநர், மின் ஆளுமை, பள்ளிக்
கல்வி இயக்ககம்.
பதவி உயர்வு:
சேலம் மாவட்டக் கல்வி அலுவலர்
ஆர்.மனோகரனுக்கு, தமிழ்நாடு மாநிலப்
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக
(மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அந்தஸ்து) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment