Tuesday, January 28, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று,
சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர
இயலாதவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கும்
வகையில், நாளை (29.01.2014)மீண்டும்
 ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என
ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம்
ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த
ஆண்டு ஆகஸ்ட்17, 18 ஆகிய தேதிகளில்
நடைபெற்றது. இத்தேர்வுகளில்
தேர்ச்சிபெற்றவர்களுக்கு இம்மாதம் 20-ம்
தேதி முதல் 27-ம் தேதிவரை அந்தந்த
மாவட்டங்களில் சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெற்றது.
இந்த சான்றிதழ் சரிபார்ப்பில்
வருகை புரியாதவர்களுக்கு மீண்டும்
ஒரு வாய்ப்பளிக்கும் வகையில்
நாளை ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள
மையத்தில் சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெறும்.2012-ம் ஆண்டில்
நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில்
தகுதிபெற்று, சான்றிதழ்
சரிபார்ப்புக்கு வருகைபுரியாத தேர்வர்களும்,
நாளை தத்தம் மாவட்டங்களில் சான்றிதழ்
சரிபார்ப்பு மையத்திற்கு உரிய
ஆவணங்களுடன் சென்று கலந்துகொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2012 மற்றும் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்
தேர்வு சான்றிதழ்
சரிபார்ப்புக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும்
என்றும், இனி எவ்வித வாய்ப்பும் வழங்கப்பட
மாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment