திருப்பூர் மாவட்டம்,
உடுமலை அமராவதி நகர்,
சைனிக் பள்ளியில், ஆறு மற்றும்
ஒன்பதாம் வகுப்புகளுக்கான
நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது.
தேசிய அளவில், மத்திய அரசின் சைனிக் பள்ளிகள், 24 இடங்களில்
செயல்படுகின்றன. வரும் கல்வியாண்டில், இப்பள்ளிகளில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் சேர, நுழைவுத் தேர்வு, நேற்று நடத்தப்பட்டது. ஆறாம் வகுப்புக்கு, 100 மாணவர்களும், ஒன்பதாம் வகுப்புக்கு, 20 மாணவர்களும், வரும் கல்வியாண்டில் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான நுழைவுத் தேர்வை, 1,800 மாணவர்கள் எழுதினர்.
No comments:
Post a Comment