Friday, February 14, 2014

தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த திட்டம்

தமிழகத்தில் வரும் 2016-17-ஆம்
நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின்
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த
உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக
வியாழக்கிழமை தாக்கல் செய்த
நிதிநிலை அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2014-15-ஆம்
ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஊதியம்
குறித்த ஒதுக்கீடு ரூ. 35,720.86 கோடி மற்றும்
ஓய்வூதியம் குறித்த செலவினத்துக்கான
ஒதுக்கீடு ரூ. 16,020.63 கோடியாகும்.
அகவிலைப்படி உயர்வு, சம்பள
உயர்வு மற்றும் காலிப்
பணியிடங்களை நிரப்புவதால் ஏற்படும்
கூடுதல் செலவு ஆகியவற்றின் காரணமாக,
2015-16, 2016-17-ஆம் ஆண்டுகளில் இந்த
வளர்ச்சி விகிதம் முறையே 14.62 மற்றும் 20
சதவீதமாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
2016-17-ஆம் ஆண்டு முதல் 7-வது ஊதியக்
குழுவின் பரிந்துரைகள்
நடைமுறைப்படுத்தப்படும் என
கருதப்பட்டுள்ளது. முந்தைய ஊதியக்
குழுக்கள் போலன்றி, இந்த குழுவின்
பரிந்துரைகள் உடனடியாக
நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிந்தைய
ஆண்டுகளில் தவணைகளில் நிலுவைத்
தொகை வழங்க வேண்டிய
நிலை எழாது எனவும் கருதப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment