Thursday, February 20, 2014

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிப்.25, 26-இல் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப்
பள்ளி ஆசிரியர்கள் வருகிற 25, 26-ஆம்
தேதிகளில் வேலைநிறுத்தப்

போராட்டத்தில் ஈடுபடுவர் என்று,
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
கூட்டணி தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு இணையாக தமிழக
அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும்
ஊதியம் வழங்க வேண்டும்;
பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய
வேண்டும்; அனைத்து நடுநிலைப்
பள்ளிகளிலும் தமிழாசிரியர்,
வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை
நியமிக்க வேண்டும்; ஆசிரியர் தகுதித்
தேர்வை ரத்து செய்ய வேண்டும்;
பகுதிநேர
சிறப்பாசிரியர்களை முழுநேர
ஆசிரியர்களாக நிலை உயர்த்த
வேண்டும்; கல்வித் துறை அலுவலக
காலிப் பணியிடங்களை நிரப்ப
வேண்டும் என்பன உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில
அளவில் வருகிற 25-ஆம் தேதி கருப்புப்
பட்டை,
கோரிக்கை அட்டை அணிந்து பள்ளி
உள்ளிருப்பு போராட்டமும், 26-ஆம்
தேதி ஒருநாள் அடையாள
வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதென
முடிவு செய்யப்பட்டது.
இதேபோல, பதவி உயர்வுக்காக
காத்திருக்கும்
இடைநிலை ஆசிரியர்களுக்கு
உடனடியாக பதவி உயர்வு வழங்க
வேண்டும்; ஆசிரியர் பயிற்சித் தேர்வில்
தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காக
காத்திருப்போருக்கு உடனடியாக
ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலகம் முன் மார்ச் 2-
ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென
தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment