Tuesday, February 11, 2014

+2 மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வதில் மாற்றம்!

மிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ்டூ அரசு பொது தேர்வுகளில்
முறைகேடுகளை தடுக்க, மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வது குறித்து புதிய மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ்டூ அரசு பொது தேர்வுகளில்
அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை தமிழகஅரசு
செயல்படுத்தி வருகிறது. பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ்டூ தேர்வுக்கான விடைத்தாள், சம்பந்தப்பட்ட
மாணவரின் "போட்டோ' இருக்கும் வகையில்
மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதியவுடன், தேர்வு மையத்திலேயே,
மாணவர் பெயர், பள்ளி பெயர், பதிவெண் பகுதியை,
அறை கண்காணிப்பாளர் கிழித்து வைத்துக்
கொள்ளும் வகையிலும், மாணவர் எழுதிய
விடைத்தாளை "பார்கோடிங்' முறையில் மட்டுமே,
அடையாளம் காணும் வகையிலும்
மாற்றப்பட்டுள்ளது
.
மேலும், தற்போது மாணவர்களுக்கு பதிவெண்கள்
வழங்கும் முறையிலும்
புதுமை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேர்வுத்
துறையால் ஒதுக்கப்பட்ட மையங்களில்,
வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள்
சேர்க்கப்பட்டால், அந்த மையத்தில் தேர்வு எழுதும்
அனைத்து மாணவர்களுக்கும் "ரேண்டம்' முறையில்,
பதிவெண் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், ஒரே பள்ளி மாணவர்களுக்கு, அடுத்தடுத்த
தேர்வு எண்கள், இனிமேல் கிடைக்காது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது: நூறு சதவீதம் தேர்ச்சிக்காக,
சுமாராக படிக்கும் மாணவர், நன்றாக படிக்கும்
மாணவரை பார்த்து, ஒரு மதிப்பெண்
பகுதி கேள்விகளை எழுத, சில பள்ளிகளில்
ஏற்பாடு செய்துவிடுகின்றனர். மேலும்,
"அறை கண்காணிப்பாளர்களே ஒரு மதிப்பெண்
கேள்விக்கான பதிலை,
மாணவர்களுக்கு கூறி விடுகின்றனர்' என்ற
குற்றச்சாட்டு உள்ளது. இதை தவிர்க்கும் வகையில்
தான், இந்த புதிய முறையை,
தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன், இந்த
ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்கான
பதிவெண்களை அவரே ஒதுக்கீடும் செய்கிறார்.
இந்த புதிய முறை மூலம்
வேறு பள்ளி மாணவர்களை கலந்து உட்கார
வைப்பதால், விதிமீறல்கள் தடுக்கப்படும்,
என்கிறார் கல்வித்துறை அதிகாரி.

No comments:

Post a Comment