Tuesday, February 25, 2014

அஇஅதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டார், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்

ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல்
அறிக்கையில்,

* நதிகளை தேசிய மயமாக்கி, நதிகள்
இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* சில்லறை வர்த்தகத்தில் அன்னிய
முதலீடு தடுக்கப்படும் என்றும் அதிமுக
உறுதியளித்துள்ளது.
* மேலும் வெளிநாட்டு வங்கிகளில்
பதுக்கப்பட்டிருக்கும்
கருப்பு பணத்தை மீட்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னை உயர்நீதிமன்றத்தில்
தமிழை வழக்காடு மொழியாக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்
கூறப்பட்டுள்ளது.
* கச்சத்தீவை மீட்க
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
* அரசியல் சட்டத்தின் 8-
வது அட்டவணையில் உள்ள
அனைத்து மொழிகளும்
ஆட்சி மொழியாக்கப்படும்.
* இலங்கையில் தனி ஈழம் தேவையா என
அறிய வாக்கெடுப்பு நடத்த
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதற்காக இலங்கை மற்றும்
வெளிநாடுகளில் வாழும்
ஈழத்தமிழரிடையே வாக்கெடுப்பு நடத்த
முயற்சி எடுக்கப்படும் என்றும்
கூறப்பட்டுள்ளது.
* இலங்கையில்
இனப்படுகொலை செய்தோர் சர்வதேச
நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். குற்றம்
செய்தோருக்கு தண்டனை பெற்றுத்
தரப்படும்.
* சட்டசபை, நாடாளுமன்றத்தில்
மகளிருக்கு 33 சதவிகிதம்
இடஒதுக்கீடு பெற்றுத்தர
உறுதியளிக்கப்பட்டுள்ளது. மகளிர் இட
ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
தேர்தல் அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
*மதச்சார்பின்மை கொள்கையை
நிலைநாட்ட அதிமுக பாடுபடும். *
மத்தியில் ஊழலற்ற அரசு அமைய
அதிமுக உத்தரவாதம் தருவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம்
உள்ளவர்களுக்கு வரிவிலக்கு
அளிக்கப்படும். சாதாரண மக்களும்
பயன்பெறும் வகையில்
வரிவிலக்கு அளிக்கப்படும்.

No comments:

Post a Comment