Wednesday, February 19, 2014

'கை' வலிக்க எழுதியும் கல்வி உதவி கிடைக்கல: மத்திய அரசால் மாணவர்கள் 'அப்செட்'

மதுரை: தமிழகத்தில், தேசியத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும், 2008ம் ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால், மத்திய அரசு மீது மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்
(என்.சி.இ.ஆர்.டி.,) சார்பில், எட்டாம்
வகுப்பு மாணவர்களுக்கு, 'தேசிய வருவாய்
வழி மற்றும் திறன் படிப்பு உதவித்
தொகை'க்கான போட்டித் தேர்வு, ஆண்டுதோறும்
நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, ஏழாம்
வகுப்பில் 60 சதவிகிதம் மதிப்பெண், பெற்றோர்
ஆண்டு வருவாய் ஒரு லட்சத்திற்குள் இருக்க
வேண்டும் உட்பட சில நிபந்தனைகள் உள்ளன.
இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு,
பிளஸ் 2 வரை ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய்
வீதம், 24 ஆயிரம் ரூபாய் உதவித்
தொகை கிடைக்கும். இத்தேர்வால், தமிழகத்தில்
ஒவ்வொரு ஆண்டிலும் அரசு மற்றும்
உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த சுமார் 6900
மாணவர்கள் பயனடைகின்றனர். தேர்ச்சி பெற்ற
மாணவர்களின் வங்கி கணக்குகளில், மத்திய
அரசே நேரடியாக உதவித்
தொகையை வரவு வைக்கிறது. ஆனால், 2008ம்
ஆண்டு முதல் இத்தொகை, மாணவர்களின்
வங்கிக் கணக்குகளில் முறையாக
வரவு வைக்கப்படவில்லை என்ற
சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், மாணவர்கள்
அவதியுறுகின்றனர்.
இப்பிரச்னை குறித்து கல்வி அதிகாரி ஒருவர்
கூறியதாவது: இத்தேர்வால், குறிப்பாக
கிராமப்புற மாணவர்கள் பெரிதும்
பயனடைகின்றனர். ஆண்டுக்கு ஆறாயிரம்
ரூபாய் உதவித் தொகை, அவர்களுக்கான கல்விச்
செலவை ஈடுகட்டுவதாக உள்ளது. பள்ளிக்
கல்வி மூலம், பல முறை மாணவர்கள்
வங்கி கணக்கு எண்கள், ஐ.எப்.சி., கோடு ஆகிய
விவரங்களை மத்திய அரசு கேட்டு பெற்றும்,
இத்தொகை முறையாக வழங்கப்படவில்லை.
உதவித் தொகை கிடைக்காதவர்கள், 'இயக்குனர்
(எஸ்.எஸ்.,), எம்.எச்.ஆர்.டி., பள்ளிக்
கல்வி மற்றும் ஸ்காலர்ஷிப் பிரிவு,
சாஸ்திரிபவன், புதுடில்லி' மற்றும் 'உதவிப்
பொது மேலாளர், ஸ்டேட் வங்கி,
புதுடில்லி மெயின் கிளை, புதுடில்லி-1'
ஆகிய முகவரிகளில் மாணவர்கள் நேரடியாக
விண்ணப்பித்து பயன்பெறலாம், என்றார்.

No comments:

Post a Comment