Wednesday, February 26, 2014

தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு: இவ்வார இறுதியில் நடைபெற வாய்ப்பு - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

இன்று (26.02.2014) காலை தொடக்ககல்வி இயக்குநர் முனைவர்.இளங்கோவன்
அவர்களை நமது தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணி பொதுச் செயலாளர் செ.முத்துசாமி அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு,
தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்தான தற்போதைய நிலவரம்
குறித்து கேட்டறிந்தார்.
தொடக்க
கல்வி இயக்குநர் அவர்கள்
அனைத்து உதவி தொடக்க
கல்வி அலுவலர்களிடமிருந்தும்,
பட்டதாரி ஆசிரியர் பாடவாரியான
காலிப்பணியிட விபரம் மற்றும் பாட
வாரியான தேர்ந்தோர் பட்டியல்
விபரமும்
தொகுக்கப்பட்டு வருவதாகவும்,
அப்பணி வெள்ளிகிழமை
நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.
எனவே அதன் பின், ஓரிரு தினங்களில்
(சனி அல்லது ஞாயிறு)
பட்டதாரி ஆசிரியர்
பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment