Friday, February 21, 2014

அரசுத் தரப்பில் கால அவகாசம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் - டிட்டோஜாக் அதிரடி முடிவு

நேற்று தொடக்கக் கல்வி இயக்குனர் அளவில் நடைபெற்ற கூட்டத்திலும், இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.

இதையடுத்து சென்னையில் கூடிய டிட்டோஜாக் உயர்நிலைக் குழு கூட்டத்தில்
முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்த ஏற்பாடுகள் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வருகிற மார்ச்-6ல்
திட்டமிட்டபடி மிகப்பெரிய ஒரு நாள்
வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக
நடத்த டிட்டோஜாக் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment