Tuesday, February 18, 2014

ஆங்கிலம் படித்த இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பு அதிகம்

இது குறித்து தமிழ்நாடு அசிரியர்
கூட்டணியின் பொதுச்செயளாலர்
திருசெ.முத்துசாமி அவர்கள் தகவல்.
 தொடக்கக்கல்வித்துறையில்
பட்டதாரி ஆசிரியர்
பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில்
நடைபெற உள்ளது.
நேற்று மாலை தொடக்கக்கல்வி இயக்குனர்
திரு இளங்கோவன் அவர்களுடன் சுமார் 45
நிமிட நேரம் கோரிக்கை வைத்து அது குறித்து
விவாதித்தார்.
அப்போது இயக்குனர் அவர்கள்
திரு.முத்துசாமியிடம்
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும்
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
வாய்ப்பளிக்கும் வகையில் 2013-14ம்
கல்வியாண்டுக்கான
பதவி உயர்வு கலந்தாய்வு, இரட்டைப்பட்டம்
சார்பான வழக்கு நிலுவையில் இருந்ததால்
பதவி உயர்வு வழங்கபடாமல் இருந்தது.
அண்மையில்
இவ்வழக்கு முடிந்து இரட்டைப்பட்டம்
பதவி உயர்வு மற்றும்
நியமனத்துக்கு செல்லாது என
சென்னை உயர்நீதிமன்ற
முதன்மை அமர்வு உத்தரவிட்டிருந்தது
.
எனவே நிலுவையில் இருந்த
இடைநிலை ஆசிரியர் மற்றும்தகுதி வாய்ந்த
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்பட்டதாரி
ஆசிரியர் பதவிக்கான
பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த ஆயுத்த
பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்,
இதற்கான முறையான அறிவிப்பு விரைவில்
வெளியாகும் எனவும் தெரிவித்தார். மேலும்
அதிகமாக ஆங்கிலம படித்தஆசிரியர்கள்
பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற
வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும்
கலந்தாய்விற்கான பூர்வாங்கப்பணிகளில்
தொடக்ககல்வித்துறை ஈடுபட்டுள்ளதாகவும்
தெரிவித்தார்.

No comments:

Post a Comment