Wednesday, February 05, 2014

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவு

இன்று சென்னை
உயர்நீதிமன்றத்தில்
தலைமை நீதியரசர்
திரு.ராஜேஸ்குமார் அகர்வால்
மற்றும் நீதியரசர்
திரு.சத்தியநாரயணன் அடங்கிய
முதன்மை அமர்வில் முதல் வழக்காக
வந்த இரட்டைப்பட்டம்
வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால்
முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின்
ரிட் அப்பீல்
தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற
தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த
ஒருங்கிணைப்பாளர்கள், அரசின்
எதிர் மனு தாக்கலால் இந்த
முடிவு ஏற்கனவே
எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என
சமாதானம் அடைந்தனர்.
எனினும் வழக்கில்
வெற்றியடைவதே நோக்கம் என்ற
குறிக்கோளுடன் உடனடியாக
உச்சநீதிமன்றத்தில் வரும்
வாரத்தில் சிறப்பு விடுப்பு
மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment