Friday, February 21, 2014

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட தாற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும்
இடைநிலை கல்வித் திட்டத்தில் தாற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும்
இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ், முதன்மைக்
கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் திட்ட
ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் தாற்காலிக
தொகுப்பூதிய அடிப்படையில், காலியாக உள்ள 2
அசிஸ்டண்ட கம் டாலி மேலாளர், 2
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பணியிடங்கள்
நிரப்பப்பட உள்ளன.
முதல் பணிக்கு பட்டப் படிப்பு, டாலி இ.ஆர்.பி,
தமிழ், ஆங்கிலம் தட்டெழுத்து சான்றிதழ் மற்றும்
முன் அனுபவம் தேவை. 2-வது பணிக்கு பட்டப்
படிப்பு மற்றும் தமிழ், ஆங்கிலம்
தட்டெழுத்து சான்றிதழ், முன் அனுபவம் தேவை.
இது தொடர்பான விவரங்கள் மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகத் தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகம் அருகேயுள்ள அனைவருக்கும்
இடைநிலைக் கல்வித் திட்ட அலுவலகத்தில்
விண்ணப்பத்தைப் பெற்று நிறைவு செய்து வரும் 24-
ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment