Wednesday, March 12, 2014

10ம் வகுப்பு தனித்தேர்வருக்கு மார்ச் 18 முதல் செய்முறை தேர்வ

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும் 18 முதல், 22ம் தேதி வரை, செய்முறை தேர்வு நடக்கவுள்ளது.

தமிழகத்தில், 10ம்
வகுப்பு பொதுத்தேர்வு, வரும் 26
முதல், ஏப்., 9ம் தேதி வரை நடக்கிறது.
சமச்சீர் கல்வி முறையில், 10ம் வகுப்பில்,
செய்முறை தேர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிகளில்
செய்முறை பயிற்சியும், தேர்வும்
நடத்தப்படுகிறது.
தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு,
வரும் 18 முதல், 22ம்
தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்காக,
தனித்தேர்வர்கள், பயிற்சி பெற்ற
மையங்களில், மார்ச், 17ம் தேதி,
பெயரை பதிவு செய்து,
தேர்வு நடைபெறும்
நாளை தெரிந்து கொள்ளலாம் என,
அரசு தேர்வுத்
துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment