Tuesday, March 18, 2014

10% அகவிலைப்படி உயர்வு எப்போது? தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களை போல்
அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
மத்திய
அரசு ஊழியர்களுக்கு கடந்த
ஜனவரி மாதம் 1ம்
தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி
உயர்வு வழங்கப்பட்டது. இதனால்
ஏற்கனவே பெற்று வந்த 90 சதவீத
அகவிலைப்படியுடன் 10 சதவீதம்
புதியதாக வழங்கப்பட்டு மொத்தம் 100
சதவீத அகவிலைப்
படி உயர்வு வழங்கப்பட்டது.
மத்திய அரசை போல் மாநில
அரசு ஊழியர்களுக்கும் இந்த
அகவிலைப் படி உயர்வை வழங்க
வேண்டும்
என்று பல்வேறு அரசு ஊழியர்கள்,
ஆசிரிய சங்கங்கங்கள்
கோரிக்கைகளை விடுத்து
வருகின்றன. ஆனால்
இதுவரை மாநில
அரசு இதுதொடர்பாக உத்தரவு ஏதும்
பிறப்பிக்காததால் அரசு ஊழியர்கள்
ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே,
மத்திய அரசு ஊழியர்களை போல்
மாநில அரசு ஊழியர்களுக்கும் 10
சதவீத அகவிலைப்படி உயர்வை கடந்த
ஜனவரி மாதம் 1ம்
தேதியை கணக்கிட்டு மொத்தம் 100
சதவீத அகவிலைப்படி வழங்க தமிழக
முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று தமிழக
அரசு ஊழியர்கள்
விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment