Wednesday, March 19, 2014

10 சதவீத அகவிலைப்படியைஉடனடியாக வழங்க கோரிக்கை!

தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படியை, உடனடியாக
வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு,வலியுறுத்தி உள்ளது.

இந்த அமைப்பின், மாநில பொதுக்குழு கூட்டம்,
சென்னையில், நேற்று நடந்தது. இதில்,
ஆறு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.கூட்டத்தில், 'மத்திய அரசு,
ஜன., 1 முதல், 10 சதவீத
அகவிலைப்படி அறிவித்து உள்ளது. ஆனால்,
தமிழக அரசு, இன்னும், 10 சதவீத
அகவிலைப்படியை வழங்கவில்லை. தமிழக
முதல்வர், தேர்தல் கமிஷனிடம்
அனுமதி பெற்று, 10 சதவீத
அகவிலைப்படியை, உடனடியாக வழங்க
வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment