Thursday, March 06, 2014

லோக்சபா தேர்தல் 2014: நடத்தை விதிமுறைகள்

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் முடியும் வரை, மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள அரசுகள், புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது.
அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும்
அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக்கூடாது. பதவி உயர்வும் அளிக்கக் கூடாது.
வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம். அரசு விழாக்களில்
அமைச்சர்கள் ஓட்டு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.
அரசு ஊழியர்களையோ,
அரசு வாகனங்களையோ பிரசாரத்திற்கு
பயன்படுத்தக் கூடாது. பொது மைதானங்கள்,
ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த
அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது.
ஓட்டுச்சாவடிக்கோ, ஓட்டு எண்ணும்
இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை.
வேட்பாளராகவோ, வாக்காளராகவோ, கட்சியின்
அதிகாரப்பூர்வ ஏஜன்டாகவோ இருந்தால்
மட்டுமே குறிப்பிட்ட அந்த
இடங்களுக்கு அமைச்சர்கள் செல்லலாம்.
ஜாதி, மத, மொழி, இன ரீதியாக வெறுப்புணர்வைத்
தூண்டும் வகையில் பிரசாரத்தில் ஈடுபடக்
கூடாது.
கோவில், மசூதி, சர்ச் உள்ளிட்ட வழிபாட்டுத்
தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. மற்ற
கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால
செயல்பாடுகள் அடிப்படையில்
விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த
வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது.
மற்ற கட்சிகளின் பிரசார கூட்டங்களில் குழப்பம்
விளைவிக்கக் கூடாது. அனுமதி பெறாமல்
தனியார் இடங்களைப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்
கூடாது.
"டிவி', கேபிள் நெட்வொர்க்,
ரேடியோ போன்றவற்றில் பிரசார
விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள் 3
நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம்
விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது,
ஓட்டுச்சாவடிக்குச் செல்ல
போக்குவரத்து வசதி செய்து தருவது போன்ற
செயல்களில் ஈடுபடக் கூடாது.

No comments:

Post a Comment