Thursday, March 20, 2014

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ்சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும்
என்று ஆசிரியர் தேர்வு வாரிய
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல்
தாளில் தேர்ச்சி பெற்ற 18 ஆயிரம்
பேருக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு பணி கடந்த 12-ம்
தேதி தொடங்கி நடந்து வருகிறது.
சென்னை, மதுரை, திருச்சி, சேலம்,
கும்பகோணம் ஆகிய 5 மையங்களில்
தினமும் 1,250 பேர்
கலந்துகொள்கிறார்கள். 31-ம்
தேதி சான்றிதழ்
சரிபார்ப்பு பணி முடியும்.
விடுபட்டவர்களுக்கு ஏப்ரல் 1-ல்
நடத்தப்படுகிறது. இந்நிலையில்,
தகுதித்தேர்வின் 2-வது தாளில்
(பட்டதாரி ஆசிரியர்களுக்கானது) 28
ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது
தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரத்தில்
தொடங்கி ஒரு மாதம் நடக்கும்
என்று ஆசிரியர் தேர்வு வாரிய
அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment