Wednesday, March 19, 2014

சான்றிதழ் சரிபார்ப்பில் 8 ஆயிரம் பேர் பங்கேற்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக
தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ்
சரிபார்ப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர்
பங்கேற்றுள்ளனர்.
ஆசிரியர் தகுதித்
தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46
ஆயிரம் பேருக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு மார்ச் 12-ஆம்
தேதி தொடங்கியது.
சென்னை, மதுரை, திருச்சி, சேலம்,
கும்பகோணம் ஆகிய 5 இடங்களில்
சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில்
கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான
சான்றிதழ்
சரிபார்ப்பு இப்போது நடைபெற்று
வருகிறது. ஒரு மையத்துக்கு 300 பேர்
வீதம் 5 மையங்களில்
நாளொன்றுக்கு 1,500 பேர் சான்றிதழ்
சரிபார்ப்பில் பங்கேற்க
அழைக்கப்படுகின்றனர்.
இதுவரை சான்றிதழ்
சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில்
1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்
மட்டுமே பங்கேற்கவில்லை என
அதிகாரிகள் தெரிவித்தனர். பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளைப்
பாதிக்காத வகையில் மாநிலம் முழுவதும்
5 மண்டலங்களாகப்
பிரிக்கப்பட்டு சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. கடந்த
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர்
தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90
மதிப்பெண்) எடுத்து தேர்ச்சி பெற்ற 29
ஆயிரம் பேருக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது
. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கு தமிழக அரசு 5 சதவீத
மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஆசிரியர் தகுதித்
தேர்வில் 46 ஆயிரம் பேர் கூடுதலாக
தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment