Tuesday, March 04, 2014

நாளை தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: முக்கிய ஆலோசனையில் டிட்டோஜாக் தலைவர்கள்

பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை 05.03.2014 அறிவிக்கப்பட இருப்பதாலும், தேர்தல் நடத்தை விதிகள் நாளை முதல்
நடைமுறைக்கு வருவதாலும் 06.03.2014
அன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடியுமா?
என்ற அச்சம் தேர்தல்
பயிற்சி வகுப்புக்கு சென்று வந்த
ஆசிரியர்களிடம் எழுந்துள்ளது. சங்க மாநிலப்
பொறுப்பாளர்கள் தகுந்த விளக்கம் தர வேண்டும்
என்று எதிர் பார்க்கிறார்கள்.
இதனிடையே நாளை காலை 11 மணிக்கு மீண்டும்
டிட்டோஜாக் உயர்மட்டக்குழு கூட்டம்
நடைபெறுகிறது. வேலை நிறுத்தம் செய்வது பற்றி
பல்வேறு பட்ட துறை அதிகாரிகள்,மூத்த
வழக்குரைஞர்களிடையே கருத்துகள் கேட்கப் பட
உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment