Saturday, April 12, 2014

1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் கூடுதல் அலுவலர் நியமனம்

தமிழகத்தில் லோக்சபா தேர்தலன்று,
ஒரு பூத்தில் ஓட்டுப்பதிவு அலுவலர்,
நிலை அலுவலர் 1, 2 உட்பட 5 பேர்
பணியாற்றவுள்ளனர்.

ஒரு மின்னணு ஓட்டு பதிவு
இயந்திரத்தில் ஏற்படும்
பழுதுகளை சரி செய்ய, தலா ஒரு பூத்
டெக்னிக்கல் உதவியாளர் பணியில்
அமர்த்தப்படுவார். ஒரு பூத்தில் 1,200
ஓட்டுகளுக்கு மேல் இருந்தால்,
அங்கு நிலை அலுவலர் 1 ஏ, 2 பி என
இருவர் கூடுதலாக பணியமர்த்தப்படுவர். 10
அல்லது 12
ஓட்டுச்சாவடிகளை ஒருங்கிணைத்து,
மின்னணு ஓட்டுப்பதிவு பழுதுகளை சரி
செய்ய, மண்டல அளவிலான தொழில்நுட்பக்
குழு, தயார் நிலையில் இருக்கும்.

No comments:

Post a Comment