Monday, April 28, 2014

மே 14 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 19
அரசு மருத்துவக் கல்லூரிகள்,
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல்
மருத்துவக்
கல்லூரி ஆகியவற்றில் மே 14-ஆம்
தேதி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம் குறித்த
அரசு அறிவிக்கை வரும்
ஞாயிற்றுக்கிழமை (மே 4) வெளியிடப்படுகிறது.
மே 14-ஆம் தேதி முதல் மே 31-ஆம்
தேதி வரை விண்ணப்பங்களை விநியோகிக்க
மருத்துவக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
மே 3 முதல் பி.இ. விண்ணப்பம்: பிளஸ் 2
தேர்வு முடிவுகள் வரும் மே 9-ஆம்
தேதி வெளியாகின்றன. பிளஸ் 2 பாடத் திட்டத்தில்
கணிதம்-இயற்பியல்-வேதியியல்
ஆகியவற்றை முக்கிய பாடமாக எடுத்துப் படித்த
மாணவர்கள் பி.இ. படிப்பையும், உயிரியல்-
வேதியியல்-இயற்பியல் ஆகியவற்றை முக்கியப்
பாடமாக எடுத்துப் படித்த பெரும்பாலான
மாணவர்கள் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவம்
சார்ந்த படிப்புகளையும்
தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது.
எனினும் கட்-ஆஃப் மதிப்பெண்ணைப்
பொருத்து உயிரியல் படித்த மாணவர்கள்கூட
பி.இ. படிப்பைத் தேர்வு செய்வது உண்டு.
பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 3-ஆம்
தேதி முதல்
விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம்
விநியோகிக்க உள்ளது.
2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள்: தமிழகத்தில்
மொத்தம் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 2,555;
இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய 15
சதவீத இடங்கள், அதாவது 383 எம்.பி.பி.எஸ்.
இடங்கள் போக மீதமுள்ள 2,172 எம்.பி.பி.எஸ்.
இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரியவை ஆகும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.
இடத்துக்கு கல்விக் கட்டணம் ரூ.4,000-த்தையும்
சேர்த்து ஆண்டுக் கட்டணம் ரூ.12,290தான். இந்த
இடங்கள் 69 சதவீத இட ஒதுக்கீட்டின்
அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில்
கலந்தாய்வு நடைபெறும்.
900 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ
பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்படும் 12
தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 900-
த்துக்கும் மேற்பட்ட
அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் 69
சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில்
கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்
என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே விண்ணப்பம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
ஆகிய இரண்டு படிப்புகளுக்கும்
சேர்த்து வழக்கம்போல்
ஒரே விண்ணப்பத்தை மாணவர்கள்
பூர்த்தி செய்தாலே போதுமானது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கிடைக்காத
மாணவர்களுக்கு, கட்-ஆஃப் மதிப்பெண்
அடிப்படையில் பி.டி.எஸ். படிப்பில் சேர
வாய்ப்பு அளிக்கப்படும்.

No comments:

Post a Comment