Friday, April 18, 2014

ஜூன் 16-ஆம் தேதிமுதல் பிளஸ் 1 வகுப்பு தொடக்கம்

வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புகள்
ஜூன் 16-ஆம் தேதி தொடங்கப்படும்;
மீதமுள்ள
வகுப்புகளுக்கு ஜூன் 2-ஆம்
தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக்
கல்வித் துறை அறிவித்துள்ளது.
10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல்
9-ஆம் தேதி வரை நடைபெற்றது.
தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள்
நடைபெற்று வருகின்றன. முடிவுகள் மே 23-
ஆம் தேதி வெளியிடப்படும் என்றும்
தெரிவித்துள்ளது.
தேர்வுகள் நிறைவடைந்தன: பள்ளிக் கல்வித்
துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6, 7, 8, 9
ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள்
புதன்கிழமையோடு நிறைவடைந்தன.
ஓரிரு மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான
தேர்தல் பயிற்சித் தேதிகளும்,
தேர்வு தேதிகளும் குறுக்கிட்டுள்ளன.
இதனால், இந்த மாவட்டங்களில் மட்டும்
வியாழக்கிழமையும் தேர்வு நடைபெறும்.
தேர்வுகள் முடிவடைந்தாலும், பள்ளிகள் ஏப்ரல்
22-ஆம் தேதி வரை செயல்படும்
என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல்
வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம்
தேதி நடைபெறுகிறது. இதையடுத்து,
வழக்கமாக ஏப்ரல் இறுதி வாரத்தில்
நடைபெறும் பள்ளி ஆண்டுத் தேர்வுகள்
ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முடிக்க
பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல்
ஏப்ரல் 16-ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்றன.
இந்தப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 23 முதல் ஜூன் 1-
ஆம்
தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட
உள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன்
2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
தொடக்கக் கல்வித் துறை: தொடக்கக் கல்வித்
துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள்,
நடுநிலைப் பள்ளிகள் ஏப்ரல் 30-ஆம்
தேதி வரை செயல்பட உள்ளன.
இந்தப் பள்ளிகளில் தேர்வுகள் அடுத்த
வாரத்தில் தொடங்குகின்றன.
வாக்குப்பதிவு தினத்தையடுத்து, ஏப்ரல் 23, 24,
25 ஆகிய தினங்கள் இந்தப்
பள்ளிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 5
முதல் 8-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்
தேர்வுகள் ஏப்ரல் 21-ஆம்
தேதி தொடங்குகின்றன. ஏப்ரல் 22, 26, 28, 29
ஆகிய தேதிகளில் இந்தத் தேர்வுகள்
நடைபெறுகின்றன.
1 முதல் 4-ஆம் வகுப்பு வரை செயல்வழிக்
கற்றல் முறை அமலில் உள்ளதால் அந்த
மாணவர்கள் மூன்றாம் பருவத்
தேர்வை எழுதுவது அவசியம் இல்லை. இந்தப்
பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடைகால
விடுமுறை விடப்படுகிறது.

No comments:

Post a Comment