Wednesday, April 16, 2014

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு தேதி நீடிப்பு | ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்காக தனித்தேர்வர்கள் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

அரசு ஆசிரியர் பள்ளிகளில் டி.டி.எட்.
தேர்வு எழுதி தோல்வி
அடைந்தவர்களுக்கு ஜூன் மாதம்
தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வு எழுத
விரும்பும் தனித் தேர்வர்கள் தேர்வுத்
துறை இணைய தளத்தில்
இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம்
செய்து பக்கம் 3 வரை பூர்த்தி செய்ய
வேண்டும். அந்த விண்ணப்பத்துடன்
ஏற்கனவே தேர்வு எழுதி பெற்ற
மதிப்பெண் சான்றுகளின்
நகல்களை கண்டிப்பாக
இணைத்து அந்தந்த மாவட்ட ஆசிரியர்
பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக
சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தலை முன்னிட்டு விண்ணப்பங்கள்
சமர்ப்பிக்கும்
கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு , 26ம்
தேதி வரை சமர்ப்பிக்கலாம்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment