Wednesday, April 30, 2014

6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியீடு பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளஸ் 2
மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள்
முகாம்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில்
ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும்,
பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள்களையும்
அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய
பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
வேலூர் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் 1628
தொடக்கப்பள்ளிகளும், 509
நடுநிலைப்பள்ளிகளும், 197
உயர்நிலைப்பள்ளிகளும், 208
மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
இதில் பிளஸ் 1 வகுப்புக்கு தகுதிவாய்ந்த
முதுகலை மற்றும் தொழில்
கல்வி ஆசிரியர்களை கொண்டும் உரிய
ஆசிரியர்கள் இல்லையென்றால் அருகில்
உள்ள பள்ளி ஆசிரியர்களை வரவழைத்தும்
தலைமை ஆசிரியர்கள்
முழுபொறுப்பேற்று மதிப்பீடு செய்ய
உத்தரவிட்டது.
மேலும் பிளஸ் 1
தேர்ச்சி முடிவுகளை அந்தந்த மாவட்ட
முதன்மை கல்வி அலுவலரிடம்
அனுமதி பெற்ற பின்பே வெளியிட வேண்டும்.
இதில் மதிப்பீடு செய்யப்பட்ட
விடைத்தாள்களில் 5 சதவீதம்
தலைமை ஆசிரியரே மறுமதிப்பீடு செய்யலாம்
எனவும் அறிவுறுத்தப்பட்டது. 6ம்
வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான
தேர்ச்சி முடிவுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட
கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று மே 5ம்
தேதிக்குள் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment