Saturday, April 12, 2014

திருச்சி, சமயபுரம் அடுத்த சிறுதாவூரில் அமையவுள்ள 95அடி உயர சிலைக்கு (பெரியார் உலகம்) தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நிதியுதவி

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணியின் பொதுச் செயலாளர்
திரு.முத்துசாமி அவர்கள் தெரிவித்தாவது:

திருச்சியிலிருந்து சென்னை செல்லும்
வழியில் சமயபுரம் அடுத்த சிறுதாவூரில்
பெரியார் நினைவாக சுமார் 50 ஏக்கர்
பரப்பளவில் பெரியார் உலகம்
நிறுவப்படவுள்ளது. அதில் பெரியாரின்
95ஆண்டு வாழ்க்கையை போற்றும் விதமாக
40அடி உயரம் கொண்ட பீடம் மற்றும்
95அடி உயர உருவ சிலை அமைக்கப்பட
உள்ளது.
அதற்காக தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணி சார்பில் நிதியுதவி வருகிற ஏப்ரல்
20ம் தேதி பொதுச் செயலாளர் மற்றும் மாநில
பொறுப்பாளர்கள்
திரு.கி.வீரமணி அவர்களை சந்தித்து
வழங்கவுள்ளனர்.

No comments:

Post a Comment