அனுமதியின்றி பள்ளி பாடப்புத்தகங்களை எடுத்துசென்ற பழநி மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் "சஸ்பெண்ட்" செய்யப்பட்டார்.
பழநி மாவட்ட கல்வி அலுவலகத்தில்
இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர்
சிவசண்முகம். இவர், அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த
2005-06 கல்வியாண்டிற்கான
பள்ளி பாடப்புத்தகங்களை அனுமதியின்றி
எடுத்துசென்றதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்
கலையரசி விசாரணை நடத்தினார்.
விசாரணையில், கரையானால் அரிக்கப்பட்ட
பாடப்புத்தகங்களை அவர் வெளியில்
எடுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து,
பாடப்புத்தகங்களை அனுமதியின்றி எடுத்து
சென்ற சிவசண்முகத்தை "சஸ்பெண்ட்"&'
செய்து மாவட்ட கல்வி அலுவலர்
உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment