Sunday, April 27, 2014

ஜனநாயகக் காவலர்கள் :அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நன்றி -புதிய தலைமுறை தலையங்கம்

விடுமுறை என்று நாம் வீட்டில் இளைப்பாறிக் கொண்டிருக்கும்
போது அவர்கள் களத்தில் அல்லது அயலூரில் கடமையாற்றிக் கொண்டிருப்பார்கள்...
அவர்கள்
இயந்திரங்கள் அல்லர். உழைப்பும் களைப்பும் உறவும் பொறுப்பும் கொண்ட நம்மைப் போன்ற மனிதப் பிறவிகள் தான். அவர்கள் பணியின் ஒரே நோக்கம் இந்திய ஜனநாயகம் சிறப்பாக இயங்க வேண்டும் என்பது தான். ஊழலால்
ஊர் கெட்டுப்போச்சு...அரசியல்
என்பது சாக்கடை... ஜனநாயகம்
என்பது செத்துவிட்டது..தேர்தல்
என்பதே தில்லுமுல்லு எனத் திண்ணை வேதாந்தம் பேசிக்
கொண்டிராமல் செயல் மூலம் ஜனநாயகத்தைக் காப்பவர்கள்..
நாடே அந்த அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது...

No comments:

Post a Comment